Skip to main content

THOSE MAGNIFICIENT WOMEN AND THEIR FLYING MACHINES- ISRO'S MISSION TO MARS. - நூல் அறிமுகம்


சந்திராயன் விண்கலம் வானில் பறந்தது. மங்கல்யான் மார்ஸ் எனப்படும் செவ்வாய் கிரகத்தை சுற்றி வருகிறது. இவையெல்லாம் செய்தியாகவே (பெருமிதமான) இருந்தன. எப்பொழுது அந்த மங்கல்யான் விண்கலம் உருவாக்கத்தில், செயல்பாட்டில் பெண்கள் தான் பின்னணி என்னும்போது தான் சுவாரசியம் தட்டியது. அட, இது என்னப்பா புது விஷயம் என ஆர்வம் கூடியது. உடனே அவர்கள் யார் எங்குள்ளனர் என்பது குறித்த விபரங்கள் தேடுகையில் டிவிட்டரில் இந்தப் புத்தகம் பிடிபட்டது. {டிவிட்டரில் உள்ள புத்தக பிரியர்கள் அவசியம் அக்ஷ்யா முகுல் அவர்களின் டிவிட்டர் ஹேண்டிலை பின் தொடர்க).


மின்னி வைடு என்பவர் எழுதிய THOSE MAGNIFICIENT WOMEN AND THEIR FLYING MACHINES- ISRO'S MISSION TO MARS.. செவ்வாய் கிரகத்தை சுற்றி அது குறித்த செய்திகளை கண்டறிய நம் இஸ்ரோவால் அனுப்பப்பட்ட விண்கலமே மங்கல்யான். கொஞ்சம் போல வானியல் குறித்த ஒரு அடிப்படை அறிவு தேவைப்படுகிறது இப்புத்தகத்தை வாசிக்க. அதே சமயம், சின்ன சின்னதாய் வானியல் குறித்தும், செவ்வாய் கிரகத்தினை குறித்தும், இஸ்ரோவின் விண்கலங்கள் உருவாக்கம் முதல் அவை விண்ணில் செலுத்தப்படும் வரையிலான பல விஷயங்கள் புதிதாக சுவாரசியமாக இருக்கின்றன.. அவையும் புத்தகத்தை தொய்வில்லாமல் கடக்க உதவுகின்றன. நம்ம எடை 100 கிலோ என பூமியில் இருந்தா அங்கே செவ்வாய் கிரகத்தில் 64 என இருக்குமாம். (64 என நினைக்கிறேன், ஆனா நிச்சயமா எடை கம்மிதான்). கேட்கவே சந்தோஷமா இருக்கு. அய்யய்யோ, சயின்ஸ் குறித்த அதுவும் ஆங்கில புத்தகமா என பயப்படாமல் அணுகலாம். எளிமையாகத்தான் இருக்கு.


ஒரு பேலோடு (இதுதான் அங்க வான்வெளியில் சுற்றபோவது) தயாரிப்பில், அதை ஏற்றிச் செல்லும் விண்கல உருவாக்கத்தில், பின் அந்த விண்கலத்தோடு இந்த பேலோடினை வெற்றிகரமாக இணைப்பதில், இந்த விண்கலத்தின் வெற்றிகரமான ஏவுவதில், மிக முக்கியமாக அந்த நீள் வட்டப் பாதையில் அந்த பேலோடினை சுற்ற வைப்பதில் என மங்கல்யான் செயல்திட்டத்தில் பல்வேறு பெண்கள் செயலாற்றி இருக்கின்றனர். இதற்கே அந்த பிராஜக்டின் தலைவர் அருணன் சுமார் 40% அளவிற்கு பெண்கள் பங்களிப்பு என பெருமிதம் கொள்கின்றார். இந்த அருணன் தான் இத்திட்டத்தில் பெண்களை நம்பி ஒப்படைத்தது. இந்த மங்கல்யான் போலவேதான் பல திட்டங்களிலும். ஆனால் இதில் சிறப்பு என்னவென்றால், எக்ஸியூட்டிவ் மற்றும் கிரியேட்டிவ் ஆகிய மிக முக்கியமான இடங்களில் பெண்கள் இருந்ததுதான்.

மின்னி வைடு இந்தப் பெண்களை அணுகி அவர்களை அறிய முயல்கிறார். அதே சமயம் அவர்கள் வேலையையும் புரிந்து கொள்ள முயல்கிறார். இரண்டையும் நமக்கு தரும்போது இந்தப் புத்தகத்தின் சுவாரசியம் கூடுகிறது. பெண்களின் பங்களிப்பு இருந்தாலும், பெண்கள் என ஒதுக்குதல் இல்லை என்றாலும், பெண்கள் இன்னமும் இஸ்ரோவின் டைரக்டர் ஆகவில்லை என்பது உண்மை. இரண்டாவது, இஸ்ரோவில் கணவன் மனைவியாய் இருவரும் அந்த துறையில் வேலை பார்ப்பது இயல்பான ஒன்று என்றபோதும், அப்படியாக இல்லாத பெண்களும் தங்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்போடு கால நேரம் தெரியாமல வேலையில் கவனம் செலுத்த முடிகிறது. ஒருவர் பிரசவத்திற்கு அலுவலகத்திலிருந்து நேரே மருத்துவமனைக்கு சென்ற நிகழ்வும் இருக்கிறது. அநேக சயிண்டிஸ்டுகள் தெய்வ நம்பிகையோடே இருக்கிறார்கள். சிலர் விதிவிலக்காவே இருக்கிறார்கள். தெய்வ நம்பிக்கையோடு இருந்த போதும் ஒரு சிலர் தாங்கள் தம்மை தாண்டி ஒரு விஷயம் என்பதாகவே கடவுளை நம்புவதும், அதே சமயம் சடங்குகளை மறுத்தும் வருகிறார்கள் என்பது தெரிய வருகிறது.


ஐஐடியில் படித்தவர்களாக பெரும்பான்மையானோர் இருப்பதில்லை என்பது ஒரு முக்கிய செய்தி. இதுவரையில் அங்கே இருப்பவர்கள் மற்ற எல்லா துறையையும் போலவே அரசுப் பள்ளியில் படித்தவர்களாகவே இருப்பதை அறிய முடிகிறது. அது போலவே சயின்ஸின் மற்ற படிப்புகளை படித்தவர்களாக இருப்பதும் முக்கியமானது. இங்கேதான் +1 +2 படிப்புகளில் அரசுகள் செகண்ட் குரூப் எனப்படும் பியூர் சயின்ஸ் வகுப்புகளை மூடுவதை நாம் கவலையோடு பார்க்க முடிகிறது.


1000 கோடி ரூபாய் செலவு செய்து ராக்கெட் அனுப்பி என்ன? இங்கே மண்ணில் மலம் அள்ளுதல் உள்ளிட்ட இழி செயல்கள் மனிதனைக் கொண்டே நடப்பது தொடர்கிறதே என்ற கேள்விக்கு ஒரு பதிலும் இப்புத்தகத்தில் கிடைக்கிறது. முதலில் வெளிநாடுகள் செய்வதை போல இங்கே அதீத பொருட்செலவில் விண்கலங்கள் அனுப்பப்படுவதில்லை. இப்புத்தகத்தில் ஒரு இடத்தில், மார்ஸ் கிரகத்திற்கு நாசா செலவு செய்தது சுமார் 650 கோடி டாலர், மார்டியன் என்ற படத்திற்கு ஹாலிவுட் செலவு செய்தது ரூ.116 கோடி டாலர், ஆனால் இஸ்ரோ செலவு செய்தது ரூபாய் 74 மில்லியன் டாலர் மட்டுமே. இன்னொரு வகையில் சொல்வதானால், இந்தியர் ஒவ்வொவருவம் ரூ.4க்கும் குறைவாகவே அவர்கள் பங்களிப்பு இருந்திருக்கிறது. இதில் இஸ்ரோ மிச்சப்படுத்தி சில தொகையும் அரசுக்கு திருப்பி கொடுத்திருக்கிறது. வெறும் வான்வெளி ஆராய்ச்சிக்கு மட்டுமல்ல, இத்தேசத்தின் கடல் வளம், மண் வளம் ஆகியவற்றை துல்லியமாக அறிந்து மக்களுக்கு உதவவும், உத்திராகாண்ட பகுதியில் மேகவெடிப்பு நிகழ உள்ளதை கணித்து சிலரை காப்பாற்றியது, புயல் காலங்களில் சரியாக கணித்து சொல்லும் சாடிலைட் செயல்பாடுகளில் இஸ்ரோ மிகுந்த முக்கியத்துவம் செலுத்துகிறதை அறிய முடிகிறது.


என்ன நடக்கிறது என்பதே எவருக்கும் தெரியாமல் வெறும் சாடிலைட்கள், ராக்கெடுகள் அனுப்பிக் கொண்டிருந்த இஸ்ரோ மங்கல்யான் சமயத்தில் அது குறித்த விஷயங்களை நிகழும் காலத்தே சமூக வலைத்தளங்களில் சொன்னதும் மிக முக்கியமானது. அந்த முடிவினை எடுக்கவும் ஒரு பெண்ணே தேவைப்படுவதும் முக்கியமாகிறது.


அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வளர்மதி என்பவர் இஸ்ரோவில் மிக முக்கிய பங்களிக்கிறார் என்னும் செய்தியை படிக்கிறபோது அனிதா நினைவுக்கு வராமலில்லை. ஆக, சரியாக சமமாக வாய்ப்புகள் அளிக்கப்படுகையில் பெண்களும், ஒடுக்கப்பட்ட இனமும் சமூக வளர்ச்சிக்கு முன்னேற்றத்திற்கு அதிக அதே சமயம் பொறுப்பான பங்களிக்க முடியும் என்பதையும் பார்க்க முடிகிறது.

நன்றி மின்னி வைட்
மின்னி வைடு அவர்களின் சுவாரசியமான பேட்டியை இங்கே சுட்டி படிக்கலாம்
https://www.thehindu.com/society/minnie-vaid-on-the-women-of-isro-remarkable-stories-of-grit-and-determination/article27910839.ece


Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

பேரன்பின் பூக்கள் - நூல் அறிமுகம்

புக்ஸ் பார் சில்ரன் மற்றும் சித்திரச் செவ்வானம் இலக்கியம்(?) வெளியீடு. இந்த ஆண்டில் நான் வாசித்த இறுதி புத்தகம். 350 ரூபாய்க்கு 399 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம், அதுவும் சிறார் கதைகள் என்னும்போதே ஒரு பயம் மற்றும் தயக்கம் இருந்தது. என்ன பயம், ஏன் தயக்கம் என கேட்டது புத்தக அட்டையில் இருந்த யூமா வாசுகியின் பெயர். மனுசன் சூப்பருங்க. யூமா வாசுகி, நீதிமணி, விஷ்ணுபுரம் சரவணன் என இன்னும் சில பெயர்கள் சிறார் இலக்கியம் எடுக்கையில் எனக்கு எந்த தயக்கமும் கொடுக்காதவர்கள ாக இருக்கிறார்கள். அப்படியே புத்தகத்தை திறந்தா பூனை, நாய், எலி, கிளி, மாடு, குரங்கு என எல்லாமும் என்னவெல்லாம் கதைகள் சொல்லுது.. அப்படியே கட கடவென பக்கங்கள் வெகு வேகமாக நகர, அட இன்னும் என்னவெல்லாம் இருக்குன்னு மனசுக்குள்ள குறுகுறுப்பு. தொடர்ந்து கடந்தா அடுத்தாற்போல சிவப்பு மிளகாய் மூக்கன், இட்லி கண்ணன், தோசை நாக்கன் என பூதங்கள், அப்ப மரம், புலி, சிங்கம், முள்ளம்பன்றி என அட போங்க அமர்க்களம்.. அப்படியே இட்லி கண்ணன், தோசை நாக்கன் கதையை அபி கீர்த்தனா குட்டிகளிடம் நம்ம கற்பனையையும் மிக்ஸ் பண்ணி சொன்ன என்னா சிரிப்பு, அப்பா அடு...

கலிலியோ - எஸ்.சிவதாஸ் -- நூல் அறிமுகம்

  20 வருடங்கள் கழிந்த பின்னும் அந்த வாசிப்பு இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது . மேட்டுப்பாளையத்திலிருந்து ஈரோடு நோக்கிய பேருந்து பயணத்தில் முழுக்க நின்றுகொண்டே வாசித்த அந்த புத்தகமும் அந்த வாசிப்பு அனுபவமும் பசுமையாக இருக்கிறது . அப்போது தான் நான் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்திருந்தேன் . என் தலைவன் தோழர் பேராசிரியர் நா . மணி அவர்கள் தான் இந்தப் புத்தகத்தை வாசித்து பாருங்க என கொடுத்தார் . அந்தப் புத்தகம் தான் அறிவியல் வெளியீட்டில் வந்திருந்த “ வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் ”. பேரா . எஸ் . சிவதாஸ் என்ற மலையாள எழுத்தாளரின் எழுத்து தமிழில் அழகிய மொழிபெயர்ப்பாக வந்திருந்தது . முதன்முதலில் அவர்கள் வெளியிட்ட அந்த வடிவம் (landscape) மிக சிறப்பானது . தமிழில் வழவழ தாளில் அப்படி ஒரு லேஅவுட்டில் நான் இதுவரையிலும் கூட எந்த ஒரு புத்தகத்தை யும் வாசித்ததே இல்லை . புத்தக வடிவமைப்பை விடவும் அந்த எழுத்து நடை வெகு சுவாரசியம் . கதைகளின் வழியே அறிவியல் சொல்லல் என சொல்லலாமா ? தெரிய...

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்...