Skip to main content

Posts

Showing posts with the label புக்ஸ் பார் சில்ரன்

பேரன்பின் பூக்கள் - நூல் அறிமுகம்

புக்ஸ் பார் சில்ரன் மற்றும் சித்திரச் செவ்வானம் இலக்கியம்(?) வெளியீடு. இந்த ஆண்டில் நான் வாசித்த இறுதி புத்தகம். 350 ரூபாய்க்கு 399 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம், அதுவும் சிறார் கதைகள் என்னும்போதே ஒரு பயம் மற்றும் தயக்கம் இருந்தது. என்ன பயம், ஏன் தயக்கம் என கேட்டது புத்தக அட்டையில் இருந்த யூமா வாசுகியின் பெயர். மனுசன் சூப்பருங்க. யூமா வாசுகி, நீதிமணி, விஷ்ணுபுரம் சரவணன் என இன்னும் சில பெயர்கள் சிறார் இலக்கியம் எடுக்கையில் எனக்கு எந்த தயக்கமும் கொடுக்காதவர்கள ாக இருக்கிறார்கள். அப்படியே புத்தகத்தை திறந்தா பூனை, நாய், எலி, கிளி, மாடு, குரங்கு என எல்லாமும் என்னவெல்லாம் கதைகள் சொல்லுது.. அப்படியே கட கடவென பக்கங்கள் வெகு வேகமாக நகர, அட இன்னும் என்னவெல்லாம் இருக்குன்னு மனசுக்குள்ள குறுகுறுப்பு. தொடர்ந்து கடந்தா அடுத்தாற்போல சிவப்பு மிளகாய் மூக்கன், இட்லி கண்ணன், தோசை நாக்கன் என பூதங்கள், அப்ப மரம், புலி, சிங்கம், முள்ளம்பன்றி என அட போங்க அமர்க்களம்.. அப்படியே இட்லி கண்ணன், தோசை நாக்கன் கதையை அபி கீர்த்தனா குட்டிகளிடம் நம்ம கற்பனையையும் மிக்ஸ் பண்ணி சொன்ன என்னா சிரிப்பு, அப்பா அடு...

நீ கரடி என யார் சொன்னது? - நூல் அறிமுகம்

ஒரு கரடி குளிர்கால உறைபனிக்கு பாதுகாப்பாய் கொஞ்ச காலம் தூங்கி எழுந்து பார்த்தா... காட்டைக் காணோம்... அங்கே ஒரு தொழிற்சாலை இருக்கு... என்ன இடம் இதுன்னு தயங்கி தயங்கி கரடி உள்நுழைய... கரடியை கண்டு பயப்படாம வாப்பா என்ன வேஷம் போட்டுட்டு வந்தா விட்டுறவமா என வேலை செய் என தொழிற்சாலை அதிகாரி நிர்பந்தம் செய்ய... இல்லங்க, நான் கரடிதான் மனுஷன் இல்ல என கரடி கெஞ்ச.... இல்லவே இல்ல, நீ கரடி வேஷத்துல மனுசன் என எல்லா அதிகாரிகளும் கடைசியாய் முதலாளியும் சொல்ல.. குழப்பமடைந்த கரடி வேறு வழியின்றி  வேலை செய்ய.. மீண்டும் பனிக்காலம் வந்து தொழிற்சாலையை தற்காலிகமாக மூட.. கரடிக்கு என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீங்க?... அட போங்க... சிந்திக்க வைக்கிற நிறைய விவாதம் நடத்தப்பட எல்லா வாய்ப்புகளும் உள்ள நூல் புக்ஸ் பார் சில்ரன் வெளியீடாக தோழர் ஆதி வள்ளியப்பன் மொழிபெயர்ப்பில் "நீ கரடி என யார் சொன்னது" என்னும் ஃபிராங்க் தாஷ்லின் நூல் அழகிய வடிவமைப்பில்(உண்மையாகவே) எனக்கு தெரிய எழுத்துப் பிழை இல்லாமல் வந்திருக்கிறது. அவசியம் வாங்குங்க. ஆசிரியர்களாக இருப்பவர்கள் தங்களது பள்ளியில் இக்கதையை படிக்க செய...

சாக்ரடீசுக்கு விஷம் கொடுத்தது ஏன்? - நூல் அறிமுகம்

சாக்ரடீசுக்கு விஷம் கொடுத்தது ஏன் ? - இப்படி தலைப்பிடப்பட்ட ஒரு புத்தகம் நெடு நாளாக தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது . அட்டையில் மற்றொரு பெயர் யூமா வாசுகி . அப்புறமும் இந்தப் புத்தகம் எடுக்காமல் இருப்பது எப்படி ? இன்று காலை உணவு வேளையில் எடுத்து படிக்க ஆரம்பித்தேன் . இப்ப எல்லாம் 5 mins read என சில கட்டுரைகளில் குறிப்பிடுகிறார்களே , அது போல சொல்வதானால் இப்புத்தகம் ஜஸ்ட் 25 mins read. யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பு வழக்கம் போல் அசத்தல் , தமிழ் வாசம் . எம் . எம் . சுசீந்திரன் குழந்தைகளுக்கு வரலாறு பாடம் எடுக்கும் ஆசிரியர் போலும் . என்ன அழகாக கிரேக்க நாகரீகம் குறித்து பாடம் எடுக்கிறார் . ஒரு மகளுக்கும் அப்பாவிற்கும் இடையே நடக்கும் உரையாடலே இது . எனக்கென்னவோ குறைந்தபட்சம் non-detail எனப்படும் புத்தகமாவது குழந்தைகளுக்கு இப்படி இருக்கலாம் என தோன்றுகிறது . ( சரி , நான் படிச்ச 20 வருஷம் முன்பு இருந்தது நான் டீடெய்ல் புத்தகம் இப்போது இருக்கா ?). கிரீஸ் என தற்போது அழைக்கப்பட்டும் நாடு உலக வரைபடத்தில் என்ன மாதிரி உருவத்துடன் இருக்கிறது என்றால் , " எலும்புகூட்டின் கைவிரல் போன்று...

எத்தனை காலம்தான் ஏமாற்ற முடியும்? - நூல் அறிமுகம்

யுரேகா என குதிக்கனுமா, யாஹூ என கூவனுமா என தெரியலை. அட, இப்படி ஒரு புத்தகமா என சொல்லி ரொம்ப நாளாச்சு. நேற்று அப்படி ஒரு சம்பவம். ஆமாங்க, பாரதி புத்தகாலயம் - ஆதி வள்ளியப்பன் சூப்பர் கூட்டணி மீண்டும் ஹிட் அடிச்சுடுச்சு. புக்ஸ் பார் சில்ரனின் அடுத்த சூப்பர் டூப்பர் படைப்பு. "எத்தனைக் காலம் தான் ஏமாற்ற முடியும்? - டாக்டர் சூஸ் அவர்களின் ஸ்ணூப்பிஸ் மொழிபெயர்ப்பு. "கரடி என என்னை யார் சொன்னது?" என்னும் சூப்பர் படைப்பு போலவே இதுவும் சூப்பர் வகையறா. ஆதி வள்ளியப்பன் நூல் தேர்வு கவனித்த க்கது. ஒரு கற்பனை கதையாடல் மூலமாக சமூக அவலங்களை சொல்வது என்பதும் அது சுவையாக சொல்வது என்பதும் அவசியம். டாக்டர் சூஸ் அவர்களின் கதை பலர் படித்திருக்கலாம். நான் இப்போதுதான் படிக்கிறேன். ஒரே உயிரின வகைகளின் இரு வகைகளும், அதன் வகைப்படுத்துதல் காரணமும், அதனால் எழும் உயர்வு தாழ்வும், அந்த வேறுபாட்டை தனது லாபத்திற்கு பயன்படுத்தும் ஒருவரும் என அட கிட்டத்தட்ட கதையவே சொல்லிட்டேனே. இனி, நீங்க அவசியம் வாங்கி படித்துக் கொள்ளுங்க. முதல் முறையா அப்படியே அந்தப் புத்தகத்தை படித்து காண்பித்தேன் எ...