ஈழப்போர் குறித்த இலக்கியங்கள் வரிசையில் என்னுடைய அடுத்த வாசிப்பு " பார்த்தீனியம் ". சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வாசிக்கப்பெற்ற கோவிந்தனின் புதியதோர் உலகம் என்ற நூலில் தொடங்கியது என் ஈழ போர் குறித்த வாசிப்பு . அப்படியே ஷோபாசக்தி அவர்களின் " ம் ", “ கொரில்லா ", “ இச்சா " என தொடர்ந்து கூர்வாளின் நிழலில் , நீண்ட காத்திருப்பு என தொடர்ந்து இப்போது பார்த்தீனியம் . சில பெயர்கள் மறந்துவிட்டன . { ஒரு பனை ... என தொடங்கும் நூலும் இதில் அடக்கம் }. நாவல்கள் வாசிப்பில் ஒரு சுக அனுபவம் இருக்கிறது . அது நமக்காக காலங்களை கடத்தும் . கொரானா நோய் தொற்று பரவல் ஊரடங்கு என வெறுமை சூழந்திருந்த காலத்தில் பரணி , தமயந்தி , அமரநாயகம் , தனபாக்கியம் , ஜெனிபர் என பாவப்பட்ட ஈழதமிழர்களோடும் , எங்கே வானூர்தியும் ஹெலிகாப்டரும் தலைக்குமேல் பொம்ப் இடுமோ என்ற கவலையுமாக 512 பக்கங்கள் சுவாரசியமாக கடக்க செய்திட்ட எழுத்து வித்தைக்கும் , நாவல் நிகழ் காலத்தில் நம்மை காலமாற்றம் செய்தமைக்காக தமிழ்நதி பாராட்டுக்குரியவர் . 80 களில் நடக்கும் கதை களம் . இதில் எத்தனை கதாபாத்திர...