Skip to main content

Posts

Showing posts with the label பழங்குடி

சமூக நீதிக்கான அறப்போர்- நலிந்தோர் நலனுக்காக ஓர் வாழ்வின் அர்ப்பணம் - நூல் அறிமுகம்

" மனிதக் கழிவு அகற்றுவோரைப் பெருமளவில் ரயில்வேத் துறை பணியமர்த்துகிறது . அதற்கு பாவ விமோசனமாக , ரயில்வேயில் சமையலுக்கும் உணவு பரிமாறும் வேலைகளுக்கும் அவர்களைப் பணியமர்த்த வேண்டும் . அதற்கான பயிற்சிகளை அவர்களுக்கு அளிக்க வேண்டும் . இந்த வேலைகள் ஒப்பந்ததாரர்களிடம் விடப்பட்டிருந்தால் இவர்களைத்தான் அந்த வேலைகளுக்கு எடுக்க வேண்டுமென்ற நிபந்தனையை ஒப்பந்தத்திலேயே சேர்க்க வேண்டும்” . --- ஒரு நிமிஷம் இவ்வாசகங்களை கண் மூடி அசை போட்டு பாருங்கள் . கழிவு அகற்றுவோரை உணவுப் பரிமாறும் வேலைகளை செய்ய சொல்வது என்பதென்பது எவ்வளவு புரட்சிகரமானது . தகழி சிவசங்கரன் பிள்ளை தோட்டியின் மகன் நாவலில் புறவாயில் வெளியே நின்று சாப்பாட்டை எட்டி கேட்ச் பிடிக்கும் ஒரு தோட்டி ( நாவலுக்காக இந்த பெயரை பயன்படுத்துகிறேன் ) வீட்டினுள் வந்து சமைத்து அந்த உணவினை அந்த வீட்டு மக்களுக்கு உணவு பரிமாறுகிறார் என்றால் ... இதுதான் affirmative action. ஒரு வேளை இவ்வாசகங்கள் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அரசு ஏற்றுக் கொண்டால் ...? ஆனால் , நடந்தது என்ன ...? இவ்வாசகங்கள் பரிந்துரைகள் ஆகின , சட்ட முன்வடிவில் இடம் பெ...

வாழும் மூதாதையர்கள் - தமிழகப் பூர்வகுடி மக்கள் அறிமுகம்

இரண்டு முக்கிய முன்முடிவுகள் உடைபடுவதில் இருந்து "வாழும் மூதாதையர்கள்" நூல் தொடங்குகிறது. “காட்டில் இருந்து அவர்களை சமதளத்தில் இறக்கி அவர்களை நாகரிகமயப்படுத்த வேண்டும்" என்ற குரலில் ஒரு அபத்தம் இருப்பது இப்புத்தகம் படிக்கையில் தெரிய வரும். அதே சமயம் "மனிதர்களற்ற காடுகள் அல்லது காடுகள் காட்டு விலங்குகளுக்காவே " என்ற குரலின் பின் இருக்கும் ஆபத்தை முகவுரையிலேயே விளக்கி இப்புத்தகத்தை அறிமுகம் செய்கிறார் நூலாசிரியர்.  நூலாசிரியரின் இந்தக் கவலையே இப்புத்தகத்தில் தமிழக பழங்குடிகள் குறித்த ஒரு விரிந்த அறிமுகத்தை தமிழ் சமூகத்திற்கு செய்கிறது என புரிந்துகொள்ளலாம். பழங்குடிகள் குறித்த அறிவாக தமிழ் சமூகத்தில் என்ன இருக்கிறது?! பழங்குடிகள் அநாகரிகமாக சொன்னால் காட்டுமிராண்டிகள், நாகரிகமாக காட்டுவாசிகள் என்பதாக சொன்னாலும் அவர்கள் அறிவற்ற மூடர்கள், விதி வந்ததே வாழ்க்கை என வாழ்பவர்கள், சமதள மக்களிடம் பயந்து இருப்பவர்கள், ஆபத்தானவர்கள், நாகரிக வாழ்வு குறித்த எந்தவித நாட்டமும் இல்லாதவர்கள் என்பதாக இருப்பதாக கொள்ளலாம். இவை அத்தனையும் பொய் என்பதனையும் அவர்களும் முன்னேற்றம் ...