Skip to main content

Posts

Showing posts with the label வாசிப்பு பட்டறை

மாற்றுக் கல்விக்கான புத்தக வாசிப்பு முகாம்

மாற்றுக் கல்விக்கான அடுத்த புத்தக வாசிப்பு முகாம் (ஜனவரி 8,9) ”அடடா, நான் விட்டுவிட்டேனே, என்னை கொஞ்சம் “அலர்ட்” பண்ணியிருக்கக் கூடாதா, மிஸ் பண்ணிட்டேனே”, “தோழர், இப்படியிருக்கும் என்று சொல்லியிருக்கக் கூடாதா, நான் கூட வந்திருப்பேனே”, “புதிய ஆசிரியன் அக்டோபர், நவம்பர் மாத இதழ் படித்தேன், ஐயா, அடுத்த முகாம் எப்போது?” “அடுத்த முகாமிற்கு என் பெயரை இப்பொழுதே எழுதிவிடுங்க” என்று கடந்த செப்டம்பர் 4,5 தேதிகளில் ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் ஈரோடு அறிவியல் இயக்கம் நடத்திய முதல் புத்தக வாசிப்பு முகாமிற்கு வர இயலாத பலருடைய ஆதங்கத்தினையும், ஏக்கத்தினையும் போக்கும் வகையில் அடுத்த வாசிப்பு முகாம் இதோ வருகின்ற புதிய வருடத்தில் (2011) ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் ஈரோடு நகரிலேயே நடைபெற உள்ளது. சென்ற முகாம் குறித்த பதிவுகள் www.puthiyaaasiriyan.com என்கிற வலைத்தளத்திலும் காணலாம். புதிய ஆசிரியன் இதழின் அக்டோபர், நவம்பர் மாதங்களில் காணலாம். http://www.puthiyaaasiriyan.com/index.php?year=2010&month=10&pageid=6 http://www.puthiyaaasiriyan.com/index.php?year=2010&month=11&pageid...

ஒற்றை வைக்கோல் புரட்சி யல்ல ஒற்றை புத்தக வாசிப்பு புரட்சி

நண்பர்களே, இதெல்லாம் இந்தியாவில் நடக்குமா? சாத்தியம் தானா? ஒரேஒரு புத்தகம், அதை வைத்து கொண்டு இரண்டு நாள் விவாத அரங்கம். அந்த அரங்கத்திற்கு நாமே காசு அனுப்பி கலந்து கொள்ள வேண்டும். வெறும் 30 பேர் மட்டுமே அனுமதி. முதல் முயற்சியாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு கிளை இந்த அரிய நிகழ்வை சாத்தியமாக்கவிருக்கிறது. பாவ்லோ பிரயரே என்கிற பிரேசில் நாட்டு கல்வியாளர் எழுதிய "ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை" (Pedagogy of the oppressed) என்கிற மகத்தான புத்தகத்தின் (பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு) மீதான விவாத அரங்கு பவானி சாகர் அணை அருகில் வருகிற செப்டம்பர் மாதம் 4 5 தேதிகளில் நடக்க விருக்கிறது. இந்த நாட்டில் புரட்சி என்கிற வார்த்தை போன்றே கல்வியாளர் என்கிற பதமும் மிகவும் கொச்சைப்படுத்தப்படுகிறது. கல்வி நிறுவனம்(?) வைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் கல்வியாளர்கள் என்கிற மிக மோசமான அர்த்தம் இங்கே நிலவுகிறது. கல்வியாளர் என்றால் என்ன? மாற்றுக் கல்வி என்றால் என்ன? வாருங்களேன் அற்புதமானதொரு சுகானுபவத்தில் நாமும் கலப்போம். .. வாசிப்பு முகாம் அழைப்பு ஒடுக்கப்பட்டோரின் மாற்...

முதல் ஆசிரியர்களை உருவாக்கிய முகாம்

நடுங்கும் குளிர், கான்கிரீட் கட்டடத்தின் அனைத்து ஜன்னல்களும் மூடப்பட்டிருக்கிறது. நேரம், இரவு 10.00 மணியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உள்ளே சகல குளிர்கால உடைகளோடு 18 ஆசிரியர்கள் வட்டமாக அமர்ந்து தீவிர ஆய்வு நோக்கில், தத்தமது கருத்துகளை, ஒருவர் பின் ஒருவராக, முன்வைத்து வருகின்றனர். ஒருவர், அமைதியாக நகர்ந்து என் அருகில் வந்தார். “சார், கூட்டம் முடியும் போது உறுதிமொழி ஒன்று எடுத்துக்கொள்ள விரும்புகிறோம்’’ என்றார். உறுதிமொழியின் சாரம், “புத்தக வாசிப்பு முகாம் முடிந்து, பள்ளிக்கு திரும்பியதும் என் பள்ளியில், முதல் ஆசிரியனாக முன்மாதிரி ஆசிரியனாக, ‘முதல் ஆசிரியர்’ நாவலில் வரும் துய்சேனைப் போன்ற ஆசிரியனாக விளங்குவேன் என இன்றைய நாளில் சபதமேற்கிறேன்.’’ என்பதே. 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 12, 13 தேதிகளில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்டக்கிளை ஏற்பாடு செய்திருந்த புத்தக வாசிப்பு முகாமில்தான் மேற்படி உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. முகாமின் நோக்கம், கல்வி சார்ந்த நூல்களை ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்வதும், மாற்றுக்கல்வி குறித்த சிந்தனையைத் தூண்டுவதுமே. முதல் நாள் இரவே எங்கள் எண்ணம் ஈடேறிய...