நீங்கள் கம்யூனிஸ்டுகள் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு கடைசியாக படித்த நாவல் வந்து எத்தனை வருடமிருக்கும் ? அந்த வாழ்வியல் அழகில் மயங்கி சொக்கி நின்ற தருணங்களும் அந்த நாவலின் / கதையின் நாயக நாயகிகள் பெயர்களும் உங்களோடு இன்னும் பசுமையாக ஒட்டிக் கொண்டிருக்கிறது தானே ! ஆமாம் அதே போன்று ஒரு அழகியல் பயணத்திற்கு தயாராகுங்கள் . பாரதி புத்தகாலயம் அதற்கான தருணத்தை உண்டாக்கி இருக்கிறது . " பதிமுகம் " என்னும் கோ . செழியன் அவர்களின் குறுநாவலை வெளியிட்டுள்ளது . இதில் மிக முக்கியமானது இந்த நாவலின் பாத்திரங்கள் எல்லாவரும் இடது சாரி மாணவர் இயக்கத்தை சார்ந்தவர்களே ! ஒரு சிட்டிங்கில் படித்து முடித்தேன் . அப்படியாக நான் கடைசியாக படித்து முடித்த நாவல் பூமணி அவர்களின் " வெக்கை ". அதற்குப் பிறகு பதிமுகம் தான் . கதைக்களம் கேரள தமிழக மாநிலங்களில் எல்லைப் பகுதியில் . பேசும் பொருள் கேரள மாநில மாணவர் சங்க செயல்பாடுகளைப் பற்றி . ஏன் கேரளம் ? இது என்ன கேள்வி , இடதுசாரி அரசியல் என்றாலே கேரளம் தானே . கேரள இடதுசாரிகள் அழகியல் மிகுந்தவர்கள் , உணர்வு மிக்கவர்கள் என்பதில் கேள்வி இருக்க...