Skip to main content

பதிமுகம் - நூல் அறிமுகம்


நீங்கள் கம்யூனிஸ்டுகள் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு கடைசியாக படித்த நாவல் வந்து எத்தனை வருடமிருக்கும்? அந்த வாழ்வியல் அழகில் மயங்கி சொக்கி நின்ற தருணங்களும் அந்த நாவலின்/கதையின் நாயக நாயகிகள் பெயர்களும் உங்களோடு இன்னும் பசுமையாக ஒட்டிக் கொண்டிருக்கிறது தானே! ஆமாம் அதே போன்று ஒரு அழகியல் பயணத்திற்கு தயாராகுங்கள். பாரதி புத்தகாலயம் அதற்கான தருணத்தை உண்டாக்கி இருக்கிறது. "பதிமுகம்" என்னும் கோ.செழியன் அவர்களின் குறுநாவலை வெளியிட்டுள்ளது. இதில் மிக முக்கியமானது இந்த நாவலின் பாத்திரங்கள் எல்லாவரும் இடது சாரி மாணவர் இயக்கத்தை சார்ந்தவர்களே! ஒரு சிட்டிங்கில் படித்து முடித்தேன். அப்படியாக நான் கடைசியாக படித்து முடித்த நாவல் பூமணி அவர்களின் "வெக்கை". அதற்குப் பிறகு பதிமுகம் தான்.


கதைக்களம் கேரள தமிழக மாநிலங்களில் எல்லைப் பகுதியில். பேசும் பொருள் கேரள மாநில மாணவர் சங்க செயல்பாடுகளைப் பற்றி. ஏன் கேரளம்? இது என்ன கேள்வி, இடதுசாரி அரசியல் என்றாலே கேரளம் தானே. கேரள இடதுசாரிகள் அழகியல் மிகுந்தவர்கள், உணர்வு மிக்கவர்கள் என்பதில் கேள்வி இருக்காது தானே? கேரள மாநிலத்தில் நடந்த சிபிஐஎம்மின் அகில இந்திய மாநாட்டின் கடைசி நாள் நிகழ்வு. புதுச்சேரியிலிருந்து ஒரு மூத்த தோழர் ஜெயராமன் புறபப்டுகிறார். அவருக்கு உடல்நலம் சுகமில்லை அவ்வளவாக, முதுகுவலி. இருந்தாலும் செல்ல ஆயத்தமாகிறார். என்ன தோழர், அவசியம் போகப்போகிறீர்களா என கேட்டதற்கு, சட்டனெ வந்த பதில், "தோழர், கேரள மாநிலத்தில் நடைபெறும் சின்னஞ்சிறு இடதுசாரி அரசியல் நிகழ்வு கூட மனதிற்கு ரம்மியமாக, எழுச்சியூட்டும் விதத்தில் இருக்கும். அங்கே சென்று அப்போது சென்று வந்த எனர்ஜியை வைத்து ஒரு வருட காலம் கூட செயல்படுவேன்". அநேருகருக்கு இதில் கருத்து மாறுபாடு இருக்காது என்றே எண்ணுகிறேன். அதனால் தான் இந்த நாவலின் கதைக்களம் இந்த நாவலுக்கு அழகியலும், உணர்வும் சேர்க்கிறது. படியுங்கள் நீங்களும் உணர்வீர்கள்.
நாவலின் பெரும் வெற்றி என நான் எண்ணுவது, இந்த நாவலில் அநேகமாக எல்லா முன்னாள் இன்னாள் மாணவர் சங்க தோழர்களும் தங்களை காண்பார்கள் என்பதுதான். ஒரு ரொமாண்டிக்கான சாகச வாழ்வை எந்த இளைஞர்தாம் விரும்ப மாட்டார்? அவற்றோடு சமூக நீதி , பெண் விடுதலை என விரிந்து மானுட விடுதலை என்றான ஒரு மகத்தான இலட்சியத்தையும் கைகொள்ளுகையில் என்றென்றும் அந்த சிறுவாழ்வு உணர்வூட்டக்கூடியதாக, புத்துணர்வு கொடுக்க கூடியதாக, மீண்டும் வலு தருவதாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆம், சுதந்திரம், சகோதரத்துவம், சோசலிஷம் என்ற முழக்கங்களை கொண்ட அந்த வெண் பதாகை காணுறும் போதும், நினைவில் வரும் போதும் அந்த மாணவ இயக்க தோழர்களின் பெருமித உணர்வை என்ன வென்று சொல்வது?!! ஆம், அந்த களியுறு வாழ்வை இலக்கியத்தில் எந்த வடிவத்தில் பதிவிட்டாலும் அது சுவையானதுதானே!
என்னுடைய மாணவ பருவத்தில் ஆங்கில இந்து பத்திரிகையில் வந்த அந்த புகைப்படம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒரு திறந்த வேனில் ஒரு மாணவரை குண்டுகட்டாக தூக்கி போடும் படம் அது. அந்த மாணவர் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் தோழர் ஜி.செல்வா. கல்லூரி படிக்கையில் சமச்சீர் கல்விக்காக போலீசாரின் கண்ணீர் வீச்சில் லத்தி அடியை தாங்கிக் கொண்டு போராடிய மாணவர் படை இன்னும் நினைவில் இருக்கிறது. ஈரோட்டில் பணி நிமித்தம் தங்கியிருந்த காலத்தில் தனி ஒருத்தியாக சுதா என்னும் இந்திய மாணவர் சங்க தோழர் ஒரு பள்ளிக்கு முன்பாக சமர் செய்து அந்த பள்ளியில் நடைபெற்ற அநியாயத்தை தட்டிக் கேட்டாள் என நினைக்கையில் இப்போதும் வியப்பு மேலிடுகிறது. புதுவைக்கு வந்த புதிதில் தோழர் பிரபுராஜ் என்னும் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரை ஏரிக்கரையோரம் போலீஸ் பூட்ஸ்காலால் மிதி வாங்கியது என் கவனத்திற்கு வந்தது. அப்படியானால் இன்னும் எத்தனை என் பார்வைக்கு வராத, 80களில், 90களில் என எத்தனை எத்தனை மாணவ மணிகள் இடது சாரி மாணவர் இயக்கங்களில் எத்தனை இன்னல்களை போராட்டக் களங்களில் அனுபவித்து இருப்பர்? ஆனால், அவர்களை இப்போது கேட்டுப் பாருங்கள். அவர்கள் இன்னல்களை பட்டியலிட மாட்டார்கள். வென்ற போராட்டங்களை பற்றி பெருமிதத்துடன் பேசுவர். அதுதான் மாணவர் சங்க உணர்வு.
புதுச்சேரியின் இந்திய மாணவர் சங்க தலைவர் ஒருவ கண் பார்வையற்ற ஒரு மாற்று திறனாளி. ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அவர் குறித்து எந்த பதிவுகள் இருக்கிறது? அவர் குறித்து இப்போதைய மாணவர் சங்க தோழர்களுக்கு தெரியுமா? அவரின் அந்த மாணவர் இயக்க வாழ்வு எப்படி இருந்திருக்கும்? இவையெல்லாம் நாம் அறிய வேண்டாமா? மதுரை தோழர்கள் சோமு செம்பு குறித்து தோழர் பி.கே.ராஜன் புத்தகமாக கொடுக்காவிட்டால் நாம் அறிந்திருப்போமா? அது போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் எழுச்சியுறும் வகையில் ஓராயிரம் கதைகள் இருக்கும். ஒரு வித மந்த தன்மை நிலவும் சமூகத்தில் சமூகத்திற்காக, பெரிதான உழைப்பாளி மக்களுக்காக தங்கள் வாழ்க்கையை வாழ்பவர்கள் எப்படி உணர்வு பெறுவார்கள்? பெரும்பகுதி அரசியல் நீக்கம் நடந்துள்ள கல்விகூட சூழலில், தனியார்மய கல்வியில், போராளிகளின் வாழ்க்கை அனுபவங்களே மாணவர்களை இயக்கங்களை நோக்கி இழுக்கும்.
வாட்ஸ்ப்பில் கூட ஒரு ஸ்கிரீணுக்கு மேல் படிக்க தயங்குகிற படிக்காத விரும்பாத ஒரு தலைமுறையினருக்கு கதைகள் நாவல் வகைகளே படிக்க தூண்டும் என நம்புவோம். அப்படியானால், வரலாறுகள் கதை வடிவிலோ அல்லது நாவல் வடிவிலோ வழங்கினால் படிக்க கூடும். அவ்வாறான ஒரு நாவல் தான் பதிமுகம்.
பாரதி புத்தகாலயத்தின் பெருமை மிகு வரவு. சலிக்காமல் சுவையோடு ஒரு நாவலை படைத்திட்ட ஆசீரியருக்கு சிறப்பு வாழ்த்துகள். மாணவர் சங்கத்தின் முன்னாள் இன்னாள் என பலரும் படித்து மகிழ வேண்டிய புத்தகம்.


Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற