நீங்கள்
கம்யூனிஸ்டுகள் வாழ்வியலை
அடிப்படையாக கொண்டு கடைசியாக
படித்த நாவல் வந்து எத்தனை
வருடமிருக்கும்?
அந்த
வாழ்வியல் அழகில் மயங்கி
சொக்கி நின்ற தருணங்களும்
அந்த நாவலின்/கதையின்
நாயக நாயகிகள் பெயர்களும்
உங்களோடு இன்னும் பசுமையாக
ஒட்டிக் கொண்டிருக்கிறது
தானே!
ஆமாம்
அதே போன்று ஒரு அழகியல்
பயணத்திற்கு தயாராகுங்கள்.
பாரதி
புத்தகாலயம் அதற்கான தருணத்தை
உண்டாக்கி இருக்கிறது.
"பதிமுகம்"
என்னும்
கோ.செழியன்
அவர்களின் குறுநாவலை
வெளியிட்டுள்ளது.
இதில்
மிக முக்கியமானது இந்த நாவலின்
பாத்திரங்கள் எல்லாவரும்
இடது சாரி மாணவர் இயக்கத்தை
சார்ந்தவர்களே!
ஒரு
சிட்டிங்கில் படித்து
முடித்தேன்.
அப்படியாக
நான் கடைசியாக படித்து முடித்த
நாவல் பூமணி அவர்களின் "வெக்கை".
அதற்குப்
பிறகு பதிமுகம் தான்.
கதைக்களம்
கேரள தமிழக மாநிலங்களில்
எல்லைப் பகுதியில்.
பேசும்
பொருள் கேரள மாநில மாணவர்
சங்க செயல்பாடுகளைப் பற்றி.
ஏன்
கேரளம்?
இது
என்ன கேள்வி,
இடதுசாரி
அரசியல் என்றாலே கேரளம் தானே.
கேரள
இடதுசாரிகள் அழகியல்
மிகுந்தவர்கள்,
உணர்வு
மிக்கவர்கள் என்பதில் கேள்வி
இருக்காது தானே?
கேரள
மாநிலத்தில் நடந்த சிபிஐஎம்மின்
அகில இந்திய மாநாட்டின் கடைசி
நாள் நிகழ்வு.
புதுச்சேரியிலிருந்து
ஒரு மூத்த தோழர் ஜெயராமன்
புறபப்டுகிறார்.
அவருக்கு
உடல்நலம் சுகமில்லை அவ்வளவாக,
முதுகுவலி.
இருந்தாலும்
செல்ல ஆயத்தமாகிறார்.
என்ன
தோழர்,
அவசியம்
போகப்போகிறீர்களா என கேட்டதற்கு,
சட்டனெ
வந்த பதில்,
"தோழர்,
கேரள
மாநிலத்தில் நடைபெறும்
சின்னஞ்சிறு இடதுசாரி அரசியல்
நிகழ்வு கூட மனதிற்கு ரம்மியமாக,
எழுச்சியூட்டும்
விதத்தில் இருக்கும்.
அங்கே
சென்று அப்போது சென்று வந்த
எனர்ஜியை வைத்து ஒரு வருட
காலம் கூட செயல்படுவேன்".
அநேருகருக்கு
இதில் கருத்து மாறுபாடு
இருக்காது என்றே எண்ணுகிறேன்.
அதனால்
தான் இந்த நாவலின் கதைக்களம்
இந்த நாவலுக்கு அழகியலும்,
உணர்வும்
சேர்க்கிறது.
படியுங்கள்
நீங்களும் உணர்வீர்கள்.
நாவலின்
பெரும் வெற்றி என நான் எண்ணுவது,
இந்த
நாவலில் அநேகமாக எல்லா முன்னாள்
இன்னாள் மாணவர் சங்க தோழர்களும்
தங்களை காண்பார்கள் என்பதுதான்.
ஒரு
ரொமாண்டிக்கான சாகச வாழ்வை
எந்த இளைஞர்தாம் விரும்ப
மாட்டார்?
அவற்றோடு
சமூக நீதி ,
பெண்
விடுதலை என விரிந்து மானுட
விடுதலை என்றான ஒரு மகத்தான
இலட்சியத்தையும் கைகொள்ளுகையில்
என்றென்றும் அந்த சிறுவாழ்வு
உணர்வூட்டக்கூடியதாக,
புத்துணர்வு
கொடுக்க கூடியதாக,
மீண்டும்
வலு தருவதாக இருக்கும் என்பதில்
மாற்று கருத்தில்லை.
ஆம்,
சுதந்திரம்,
சகோதரத்துவம்,
சோசலிஷம்
என்ற முழக்கங்களை கொண்ட அந்த
வெண் பதாகை காணுறும் போதும்,
நினைவில்
வரும் போதும் அந்த மாணவ இயக்க
தோழர்களின் பெருமித உணர்வை
என்ன வென்று சொல்வது?!!
ஆம்,
அந்த
களியுறு வாழ்வை இலக்கியத்தில்
எந்த வடிவத்தில் பதிவிட்டாலும்
அது சுவையானதுதானே!
என்னுடைய
மாணவ பருவத்தில் ஆங்கில இந்து
பத்திரிகையில் வந்த அந்த
புகைப்படம் எனக்கு நன்றாக
நினைவிருக்கிறது.
ஒரு
திறந்த வேனில் ஒரு மாணவரை
குண்டுகட்டாக தூக்கி போடும்
படம் அது.
அந்த
மாணவர் இந்திய மாணவர் சங்கத்தின்
முன்னாள் தலைவர் தோழர்
ஜி.செல்வா.
கல்லூரி
படிக்கையில் சமச்சீர் கல்விக்காக
போலீசாரின் கண்ணீர் வீச்சில்
லத்தி அடியை தாங்கிக் கொண்டு
போராடிய மாணவர் படை இன்னும்
நினைவில் இருக்கிறது.
ஈரோட்டில்
பணி நிமித்தம் தங்கியிருந்த
காலத்தில் தனி ஒருத்தியாக
சுதா என்னும் இந்திய மாணவர்
சங்க தோழர் ஒரு பள்ளிக்கு
முன்பாக சமர் செய்து அந்த
பள்ளியில் நடைபெற்ற அநியாயத்தை
தட்டிக் கேட்டாள் என நினைக்கையில்
இப்போதும் வியப்பு மேலிடுகிறது.
புதுவைக்கு
வந்த புதிதில் தோழர் பிரபுராஜ்
என்னும் இந்திய மாணவர்
சங்கத்தின் முன்னாள் தலைவரை
ஏரிக்கரையோரம் போலீஸ்
பூட்ஸ்காலால் மிதி வாங்கியது
என் கவனத்திற்கு வந்தது.
அப்படியானால்
இன்னும் எத்தனை என் பார்வைக்கு
வராத,
80களில்,
90களில்
என எத்தனை எத்தனை மாணவ மணிகள்
இடது சாரி மாணவர் இயக்கங்களில்
எத்தனை இன்னல்களை போராட்டக்
களங்களில் அனுபவித்து இருப்பர்?
ஆனால்,
அவர்களை
இப்போது கேட்டுப் பாருங்கள்.
அவர்கள்
இன்னல்களை பட்டியலிட மாட்டார்கள்.
வென்ற
போராட்டங்களை பற்றி பெருமிதத்துடன்
பேசுவர்.
அதுதான்
மாணவர் சங்க உணர்வு.
புதுச்சேரியின்
இந்திய மாணவர் சங்க தலைவர்
ஒருவ கண் பார்வையற்ற ஒரு
மாற்று திறனாளி.
ஆச்சரியமாக
இருக்கிறது.
ஆனால்
அவர் குறித்து எந்த பதிவுகள்
இருக்கிறது?
அவர்
குறித்து இப்போதைய மாணவர்
சங்க தோழர்களுக்கு தெரியுமா?
அவரின்
அந்த மாணவர் இயக்க வாழ்வு
எப்படி இருந்திருக்கும்?
இவையெல்லாம்
நாம் அறிய வேண்டாமா?
மதுரை
தோழர்கள் சோமு செம்பு குறித்து
தோழர் பி.கே.ராஜன்
புத்தகமாக கொடுக்காவிட்டால்
நாம் அறிந்திருப்போமா?
அது
போல் ஒவ்வொரு மாவட்டத்திலும்
எழுச்சியுறும் வகையில்
ஓராயிரம் கதைகள் இருக்கும்.
ஒரு
வித மந்த தன்மை நிலவும்
சமூகத்தில் சமூகத்திற்காக,
பெரிதான
உழைப்பாளி மக்களுக்காக தங்கள்
வாழ்க்கையை வாழ்பவர்கள்
எப்படி உணர்வு பெறுவார்கள்?
பெரும்பகுதி
அரசியல் நீக்கம் நடந்துள்ள
கல்விகூட சூழலில்,
தனியார்மய
கல்வியில்,
போராளிகளின்
வாழ்க்கை அனுபவங்களே மாணவர்களை
இயக்கங்களை நோக்கி இழுக்கும்.
வாட்ஸ்ப்பில்
கூட ஒரு ஸ்கிரீணுக்கு மேல்
படிக்க தயங்குகிற படிக்காத
விரும்பாத ஒரு தலைமுறையினருக்கு
கதைகள் நாவல் வகைகளே படிக்க
தூண்டும் என நம்புவோம்.
அப்படியானால்,
வரலாறுகள்
கதை வடிவிலோ அல்லது நாவல்
வடிவிலோ வழங்கினால் படிக்க
கூடும்.
அவ்வாறான
ஒரு நாவல் தான் பதிமுகம்.
பாரதி
புத்தகாலயத்தின் பெருமை மிகு
வரவு.
சலிக்காமல்
சுவையோடு ஒரு நாவலை படைத்திட்ட
ஆசீரியருக்கு சிறப்பு வாழ்த்துகள்.
மாணவர்
சங்கத்தின் முன்னாள் இன்னாள்
என பலரும் படித்து மகிழ வேண்டிய
புத்தகம்.
Comments