படிச்சாச்சு.
பாந்த்
சிங் முடிச்சாச்சு.
பாரதி
புத்தகாலயம் -
காம்ரேட்
டாக்கீஸ் கூட்டு வெளியீடு.
கமலாலயன்
தோழரின் சலிப்படைய செய்யாத
மொழிபெயர்ப்பு.
வாசிக்க
எளிதாக இருக்கிறது.
போராளியும்
கலைஞருமான ஒருவரின் வாழ்க்கை
வரலாறு ஆதலால்,
அவ்வப்போது
வருகிற சின்ன சின்ன பாடல்
வரிகளோடு புத்தகம் படிக்க
சுகமாகிறது.
இன்னும்
நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிற
ஒரு போராளியின் வாழ்க்கை
சம்பவங்களே,
இப்புத்தகம்.
ஆனால்
அதோடு சேர்த்து பஞ்சாப்
மாநிலம் என்பதன் சிறிதான
வரலாறு,
மக்களின்
கலாச்சாரம்,
சீக்கிய
மதத்தின் வழிமுறைகள்,
கொள்கைகள்,
2000ஆம்
ஆண்டு தொடங்கி பஞ்சாப்
மக்களிடையே பரவி வரும் போதை
மருந்து கொடும் பழக்கம் என்று
கலவையாக பாந்த் சிங் தோழரின்
வாழ்க்கை சொல்லப்படுகிறது.
அதுவே
இப்புத்தகத்தின் சிறப்பு.
இந்தியாவில்
இந்து மதம் அல்லாது வந்த
அல்லது புதிதாக தொடங்கப்பட்ட
எந்த மதமும் சரி,
சாதி
அடுக்குகளில் இருந்து தப்பவே
இல்லை.
குரு
நானக் தன்னுடைய மதத்தில்
தலித்துகளுக்கு எவ்வளவு
முக்கியத்துவம் கொடுத்தும்
accommodate
செய்தும்
காலப் போக்கில் வழக்கம் போல்
தலித்துகள் ஒடுக்கப்படுவதும்,
ஜாட்
மக்கள் தலித் பெண்களை
வேட்டையாடுவதும்,
தலித்துகள்
வறுமையில் வாடுவதும் வழ்ககமாகிறது.
இதுதான்
சோகம்.
(இந்த
வரிகள் தப்பாக அர்த்தம்
வருகிறதா என தெரியவில்லை,
ஆனால்
சாராம்சம் இதுதான்,
குருநானக்
சாதி பேதங்களுக்கு சீக்கிய
மதத்தில் இடம் இல்லை என்று
சொல்லியும் நடைமுறைப்படுத்தியும்
வந்தார்).
பாந்த்சிங்
இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளர்
(எம்.எல்
காரர்).
தன்னுடைய
செல்ல மகளுக்கு நேர்ந்த
கொடுமைகளுக்கு எதிராக ஊர்
வாய் திறவாதே ஒரு settlementக்கு
வா என சொன்ன போதும்,
மறுத்து
நீதிமன்றம் சென்றதற்கு அவர்
கொடுத்த விலை இரண்டு கால்களும்,
ஒரு
கையும்,
அழகான
வாழ்க்கையும்.
ஆனால்
அவர் பெற்றது அவரது குழந்தைகள்
குறிப்பாக பாதிக்கப்பட்ட
பெண் குழந்தை பெற்ற தைரியமும்,
நம்பிக்கையும்,
நெஞ்சுரமும்,
அவரது
அரசியல் பாதையை குழந்தைகள்
தொடர்வதும்.
இந்தியாவெங்கும்
ஒடுக்குதலுக்கு எதிராக களம்
கொண்டு வாழ்விழந்த கம்யூனிஸ்டுகள்
பட்டியல் ஏராளம்.
அதில்
பாந்த் சிங்கும் ஒருவர்.
தமிழகத்திலும்
சட்டென நினைவுக்கு வருபவர்
இடுவாய் ரத்தினசாமி.
சமீபத்திய
தியாகி நெல்லை தோழர்.
அசோக்.
இவர்களைப்
போன்றவர்களின் வாழ்க்கை
வரலாறும் சிறிய புத்தகமாகவாவது
பாரதி புத்தகாலயம் கொண்டு
வரவேண்டும்.
வேறு
யார் கொண்டு வருவார்?
வாசிங்கப்பா
பாந்த் சிங் புத்தகத்தை.....
Comments