Skip to main content

கஜாப் புயலும் காவிரி டெல்டாவும் - வறீதையா கான்ஸ்தந்தின் == நூல் அறிமுகம்



கடல்புற வாழ்வியல் குறித்து சமீப காலங்களில் எழுத்துக்கள் மூலம் கவனம் ஈர்க்க செய்தவர் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்கள். இதோ பாரதி புத்தகாலயமும் வறீதையா அவர்களின் படைப்போடு, படைப்பு என சொல்லலாமா, ஆய்வு என சொல்லலாம். கஜாப் புயல் பின்னணியில் டெல்டா மாவட்டங்களின் கடல்புறத்தில் நிகழ்ந்த அழிவை, விவசாயிகளின் வாழ்வை அப்படியே இருபது ஆண்டு காலத்திற்கு சூறையாடிய கொடும் தன்மையை, இயற்கை அறிவு (அல்லது தொழில் சார் அடிப்படை அறிவு), அரசின் மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கை மெத்தனங்கள் மட்டுமல்லாது, எளிய மக்களை "லாபம்" என்னும் ஒற்றை இலக்கில் அழித்தொழிக்கும் கார்ப்பரேட் நல கொள்கைகளையும், அதிகாரிகளின் ஈவு இரக்கமற்ற ஊழல்களையும், இறுதியாய் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குறித்தும் பதிவிட்டிருக்கிறார்.

MNREGAதிட்டத்தால் கிராமங்களில் மக்கள் (இந்த நூலில் பெண்கள்) வயல் வேலைக்கு வருவதில்லை என்னும் ஒரு குற்றச்சாட்டு பலநாட்களாய் பலரும் சொல்லும் ஒன்று. இந்நூலிலும் ஒரு இடத்தில் ஒரு விவசாயி அப்படி சொல்வதாக வருகிறது. இது குறித்து "என்ன தோழர், இப்படி சொல்றாரு, அதுமட்டுமில்ல, வயலில் வேலை செய்வதையும் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரலாம்" எனவும் சொல்கிறாரே என என் நெருங்கிய தோழர் ஒருவரிடம் கேட்ட போது, “ தோழர் . அதுதான் சிபிஐஎம் புதுவையில் கேட்பதும். இது கேரளாவில் நடைமுறையில் இருக்கிறது. விவசாயிகளின் மானியத்தை அரசு இவ்வாறாகவும் ஈடு செய்யலாம். அவ்வாறு செய்வதன் மூலம், விவசாயிகளின் மானியம் அதன் உண்மையான பயன்பாட்டிற்கு பயன்படுகிறது மட்டுமல்லாது விவசாயத் தொழிலில் வேலை செய்ய ஆள் கிடைக்கவில்லை என்ற பிரச்சனையும் சமாளிக்கலாம். என சொன்னார். இது எனக்கு புதிய செய்தி.

இதுபோல கடலாடிகளின் மீனவர்களின் பேரழிவுக் காலங்களின் வாழ்க்கை போராட்டங்கள் பலதும் பதிவாகி இருக்கிறது. அரசு அதிகாரிகளின் போதாமை, செயலின்மை, ஊழல் முக்கியவை பேரிடர் இழப்புகளை விட கொடுமையானதாக இருக்கிறது. ஒரு பக்கம் பேரிடர் மேலாண்மை மீட்பு மையம் பேரிடர் காலங்களில் உயிரழப்புகளை தடுப்பதில் வெற்றி கண்டாலும், ”செண்டரில் தங்க வச்சீங்க, சோறு போடமாட்டீங்களா, எங்க உடமைகளை எப்படி விட்டு வருவது, “ என்ற கேள்விகளுக்கு இன்னும் விடையளிக்கப்படாமல் இருக்கிறது. போட்கள் வலைகள் வாங்கி கொடுப்பதில் உள்ள மெத்தனத்தை ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால், புயல் சூறையாடி நான்கு மாதங்கள் சென்ற பின் பார்க்கையிலும் மாணவர்களின் வீணாகிப் போன புத்தகங்களுக்கு மாற்றுப் புத்தகங்கள் கொடுக்காமல் இருப்பதை எப்படி ஏற்பது?

சுவையான பதிவுகளில் ஒன்று இப்படி இருக்கிறது. ஒரு மீனவரின் மனைவி இப்படி சொல்கிறாள், “பேரழிவோ அல்லது இயல்பு நிலையோ நாம்தான் அலைய வேண்டியிருக்கு. நடு இரவில் மீன் பிடிக்க போய் காலைல வந்துடறாங்க. படகு இழுத்து கடலுக்கு விடுவதில் இருந்து, பின்பு மீனோடு இழுத்தும், வீட்டில் சமைத்தும், துணி துவைத்தும், பெருக்கியிம் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கு. கடலுக்கு போகாத காலங்களில் ஆம்பளைக வீட்டுல ஒத்தாசை செய்ய கூடாதா?" . 

இன்னொரு இடம், “இந்த சேதுசமுத்திர திட்டம் மீனவர்களின் வாழ்வில் மண் அள்ளிப் போட இருக்கிறது. எங்க கட்சி இந்த திட்டத்தை ஆதரிபத்தாலும் நான் எதிர்க்கிறேன். அவிங்களுக்கு எல்லாம் தெரியும் என எப்படி நினைக்கிறாங்க என்று தெரியல. மீனவர்களுக்கு அறிவில்லையா என்ன? நல்லகண்ணு அய்யாகிட்டேயே சொல்லிட்டேன், இது சரிவராது என்று" என சொல்லும் கம்யூனிஸ்ட் கட்சி மீனவர் ஒருவர்.

பல கோடி ரூபாய்கள் கட்டி உருவாக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு உதவ முன்வந்த ஓ.என்.ஜி.சி நிறுவனம், கஜாப் புயல் பாதித்த இடங்களில் எந்த உதவியும் செய்யவில்லை என்பதும், நடந்த பேரழிவினை ஓரள்விற்கு மட்டுமே வெளிச்சத்துக்கு கொண்டு வந்து பின் ஊமையாகிவிட்ட ஊடகங்கள் மற்றும் சுனாமி காலம் போல் அல்லாது மறுவாழ்வு நடவடிக்கைகளைல் ஈடுபடாமல் காணாமல் சென்று விட்ட தொண்டு நிறுவனங்கள் என அனைத்தும் வருகிறது.

இவ்வாறாக பல செய்திகள் இருக்கும் புத்தகத்தில் எனக்கு சிக்கலாக தோன்றும் இடங்கள் சில உண்டு. அவற்றில் ஒன்று. MS சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பசுமைப் புரட்சி ஒரு சதியே என்ற தோரணையில் சொல்வதை எப்படி ஏற்பதென தெரியவில்லை. பசுமைப் புரட்சி ஒரு குறிப்பிட்ட இலக்கில் குறிப்பிட்ட சுருங்கிய காலத்தில் வந்த ஒரு செயல்பாடு அல்லவா, அது மட்டுமல்லாது அந்தக் காலத்து பஞ்சத்தை போக்கியதல்லவா? அதை ஒரேயடியாக மட்டையடியாக தீயதாகவே பார்பப்தில் சிக்கல் இல்லையா? (அதே சமயம், ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் நூலில் வருவது போல், பஞ்சங்கள் உண்டாக்கப்படுவதும் ஒரு கார்ப்பரேடின் நலத்திற்காக என்ற கருத்தும் என் நினைவுக்கு வராமலில்லை). ஆகவே, இந்தக் கேள்வி ஒரு clarityக்காக தானே தவிர, வறீதையாவை குறை சொல்வதற்காக அல்ல.

கஜாப் புயலும் காவிரி டெல்டாவும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு அமைப்பினர், நல்ல உள்ளங்கள், அரசு இயந்திரம் என பலரும் படிக்க வேண்டிய ஒன்று. பேரழிவுக் பின்னால வாழ்விலும், பேரவிழினை ஓரளவிற்கு தடுக்க கூடிய வழிகளையும் ஆலோசனை செய்ய வேண்டிய நேரம் இது. எப்படா பேரழிவு நிகழும், அந்த இடத்தை தங்கள் லாபத்திற்கு பயன்படுத்து காத்து கிடைக்கும் கார்ப்பரேட் கும்பலிலிருந்து இயற்கையும், மக்களையும் காத்திட வேண்டும் என எண்ணுவோரும் அவசியம் படித்தே ஆக வேண்டும்.

எப்போதும் போல் அல்லாமல் எழுத்துப் பிழையல்லாமல் பதிப்பித்த பாரதி புத்தகாலயத்தார் பாராட்டுக்குரியவர்கள்.


Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற