Skip to main content

மாடுகளின் வேலைநிறுத்தம், துள்ளி, உழைப்பாளி வாத்து

 

சிறார்களுக்கான புத்தகம் நம்மை மாதிரி பெரிசுகள் ஏன் படிக்க வேண்டும் என என் நண்பர்கள் சிலர் நினைக்கிறார்கள். எந்தப் புத்தகத்திலும் என்ன புதுசா இருக்கப் போகுது என நினைக்கும் நண்பர்களும் இருக்கிறார்கள். ஆனால் நான் தொடர்ந்து சிறார்களுக்கென வரும் நூல்களையும் ஆர்வத்துடன் படித்து வருகிறேன். என்னமோ அதில் ஒரு சந்தோஷம் கிடைக்கிறது. 
 
அப்படியாக நான் வாசித்த மூன்று நூல்களை மட்டுமே இங்கு பேசப் போகிறேன். மூன்றுமே புக்ஸ் பார் சில்ரன் வெளியீடு. மூன்றுமே அன்பு வாகினி என்பவர் மொழியாகத்தில் வந்துள்ளது. 1. துள்ளி 2. உழைப்பாளி வாத்து 3. மாடுகளின் வேலைநிறுத்தம். 
 
இப்புத்தகங்கள் ஏற்கெனவே புக்ஸ் பார் சில்ரன் வெளியிட்ட ஆதி வள்ளியப்பன் அவர்களின் மொழியாக்கத்தில் நீ கரடி என யார் சொன்னது, இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் என்பவனவற்றின் வகை சார்ந்தது. இவையெல்லாம் சிறார்களுக்கு என மட்டுமே எழுதப்பட்டதா என தெரியவில்லை. அவ்வாறு இருக்கவும் வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. நேற்றைய இரவு என் குழந்தைகளுடனான நேரத்தில் நான் இவ்வாறு சொன்னேன், “எனக்கென்னவோ, இவை குழந்தைகளுக்காகவென எழுதப்பட்டதாக தெரியவில்லை. ஆலைத் தொழிலாளர்களுக்காக எழுதப்பட்டிருக்கலாம். அல்லது ரஷ்ய புரட்சிக்குப் பின் சோஷலிச ரஷ்ய அரசால் குழந்தைகளுக்கு என எழுதப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்”. 
 
 
இந்தப் புத்தகங்களின் சிறப்பம்சமே இவைகுறித்து குழந்தைகளுடன் நீண்ட நேரம் உரையாடலாம். உரையாடலில் ஒரு நேர்மை தானாகவே அமையும். அவை அநேக சிறார் இலக்கியத்திலும் சாத்தியப்படுவதில்லை என்பதான என் அவதானிப்பு. ஏதோ ஒரு குறியீடாக வைத்து தற்காலத்தைய சமூகம், சுற்றி இருப்பவர்கள் என நேரடித் தொடர்புபடுத்தி பேச விவாதிக்க இயலுகிறது. இக்காலத்திலும் தொடரும் சமூகப் பிரச்சனைகள், சீரழிவுகள் குறித்து ஒரு எளிமையான உரையாடல் நடத்த பெரிதும் உதவும் புத்தகங்களாக இவை இருக்கின்றன என்பதே இவற்றின் சிறப்பு. 
 
வேலைநிறுத்தம் எதற்காக அப்பா? மாடு தானே முதலில் வேலைநிறுத்தம் செஞ்சிச்சு, பின் ஏன் அதனோட வாத்து, கோழி இவையெல்லாமும் சேர்ந்துச்சு? நீதானே சொல்வே, தேனி மாதிரி உழைக்கனும் என பெரியவங்க சொல்வாங்கன்னு, ஆனா அந்த வாத்து அப்படிதானே உழைத்திச்சு, பின் எதற்கு சுரண்டல் என எதெல்லாமோ சொல்லுற? அவளோ சின்ன மீன்கள் ஓண்ணா சேர்ந்தா மட்டும் பெரிய மீன் பயந்திடுமாப்பா? ஒரு வேளை ஒண்ணா சேர்ந்த சின்ன மீன்களில் ஒன்றோ அல்லது சின்ன குருப்போ லேசா பயந்தா கூட என்ன ஆகும் சொல்லு கண்ணு? என ஏகப்பட்ட கேள்விகள் விவாதங்களில் வந்தன. 
 
கேள்விகள் எழுப்ப, விவாதிக்க வாய்ப்புகள் பலவும் தந்து நிற்கின்றன இப்புத்தகங்கள். அட்டை வடிவமைப்பும் அமர்க்களம்.வாழ்த்துகள்
 
புக்ஸ் பார் சில்ரன். அன்பு வாகினி என்பாருக்கும் புரட்சிகர
வாழ்த்துகள்

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற