Skip to main content

கதிரேசன் செட்டியாரின் காதல்

ரொம்ப நாளாயிடுச்சு… இல்ல இல்ல ரொம்ப வருஷமாயிடுச்சு.. ஒரு துப்பறியும் நாவல் படிச்சு.. வாசிக்க துவங்கிய காலத்தில், சுஜாதா, அசோகன் பாக்கெட் நாவல் என எத்தனை எத்தனை படிச்சிருப்போம். ஹூம்ம். இப்ப போய் அதையெல்லாம் நினைச்சுப் பார்க்கிறதா என கூட சில சமயம் நினைச்சிருக்கேன். அதெல்லாம் ஒரு பெருமையா என.,., ஆனாலும் ஒரு துப்பறியும் நவீனம் ஒரு பத்து வருடம் முன்பு வந்திருக்கு என்றவுடனே பழைய நினைவின் எள்ளல்கள் எல்லாம் போய் உடனே ஆர்டர் செய்து வாங்கி படித்தும் முடித்துவிட்டேன்.
 
நான் வாசித்த துப்பறியும் நாவல்களில் இது வேறு ரகம். அதாவது துப்பறியும் ஹீரோ இல்லை, அந்த துப்பறியும் ஹீரோ காமெடியாக பேசுகிறேன் என பெண்களை இழிவாக கேலி செய்வதில்லை, ஆஹா இந்த ஹீரோ நல்லவர் அவரிடம் ராகவன் instinct என்ற ஒன்று உள்ளதே என வியக்கவும் இடமில்லை. அவ்வாறான வியப்பின் மூலம் வாசகராகிய நாம் துப்பறிவாளனாக மாறாமல் அங்கும் ஹீரோவிற்காக காத்திருக்கிறோம். சத்யஜித் ரேயின் பெலூடா நூல்கள் எல்லாம் துப்பறியும் மர்ம நாவல்கள் தான். ஆனால் அவை எல்லாம் நம்முள் ஒரு scandalous thing என்பது போல ஒரு எண்ணத்தை உருவாக்காது, வாசிக்கும் வாசகருக்கு எல்லா துப்புகளையும் பொதியாது அப்படி அப்படியே வைத்துவிட்டு, வாசகனும் ஒரு துப்பறிவாளானாக மாறும் வித்தையை கைவரப் பெற்றிருக்கும். தமிழில் வீ.பா கணேசன் அவர்களின் நல்ல நடையில் பாரதி புத்தகாலயம் பல புத்தகங்கள் பெலூடா வரிசை என வெளியிட்டிருக்கிறது. அதையும் வாசியுங்கள்.
 
கடந்த இரண்டு பத்திகளை படித்தவர்களுக்கு என்னடா இவன் அந்த நாவல் பெயரையே எப்படா சொல்வே என கோபம் வருகிறதல்லவா அவ்வாறாக இந்நாவல் இல்லை. அப்படியாபட்ட அபத்தங்களும், மேதாவித்தனங்களும் இல்லாமல் இயற்கையிலாளர் திரு.மா.கிருஷ்ணன் அவர்கள் தமிழில் எழுதிய ஒரே துப்பறியும் நவீனமான “கதிரேசன் செட்டியாரின் காதல்” என்னும் நவீனம் குற்றங்கள் நடந்த விதம், அந்த சூழல், கிடைக்கும் துப்புகள், சந்தேகப் புள்ளி விழும் நபர்கள் எல்லாவற்றையும் வாசகர்களிடம் உடனே மறைக்காது காட்டி நம்மையும் ஒரு துப்பறிவாளானாக ஆக்குகிறது.
 


 
மா. கிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய முதுமைக் காலத்தில் எழுதியிருக்கும் இந்நவீனத்தின் கதைக்காலம் அநேகமாக 1960கள் எனலாம். மதுரக்குப் பக்கத்தில இருக்கிற ஒரு கிராமத்துல செட்டியார் ஒருத்தரு வீட்டு வேலைக்காரனும் நாயும் கொலயாகி கிடக்க, அக்கொலகள செஞ்சவங்க ஆரு என கண்டுபிடிப்பது தான் இந்நவீனம். இதற்கு முன்பான வாக்கியம் போலவே மொழிநடை என்பது பேச்சுநடையாக மா.கிருஷ்ணன் நம்மோடு உட்கார்ந்து கதை சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. எனக்குப் பிடித்து இருக்கிறது. கதை வெகு சுவாரசியமாக செல்கிறது.ஆம், துப்பறியும் நாவல்களுக்கே தேவையான ஒரு விறுவிறுப்பினை கொண்டு இருக்கிறது.
 
படித்து முடித்தபின் யார் இந்த மா. கிருஷ்ணன் என்ற போதுதான் வெகு காலத்திற்கு முன்பு நான் வாசித்த காலச்சுவடு வெளியீடான மழைக்காலமும் குயிலோசையும் என்ற இயற்கை சூழலியல் நூலின் ஆசிரியர் என்பது தெரிந்தது. அதனால் தான் இந்நவீனத்திலேயும் ராஜபாளையம் நாயை விட கோம்பை நாயை எப்படி வித்தியாசம் கொண்டது, அதற்கு எப்படி உணவளிப்பது, அது எப்படி பழகும், அதை எப்படி பழக்க வேண்டும், அதற்கு எப்படி மாத்திரை அளிப்பது உள்ளிட்ட பல விவரங்கள் வருகிறது என புரிந்து கொண்டேன்.
 
ஒரு changeக்கு, ஒரு இளைப்பாறலுக்கு, ஒரு விறுவிறுப்பிற்கு என இந்நவீனத்தினை அவசியம் படிக்கலாம். 
 
இதைப் படித்த சந்தோஷத்தில் அப்படியே பாரதி புத்தகாலயம் வெளியிட்டு இருக்கும் சத்யஜித் ரேவின் பெலூடா கதைகளையும் படியுங்கள். எல்லாம் தான் படிப்போமே!

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

பேரன்பின் பூக்கள் - நூல் அறிமுகம்

புக்ஸ் பார் சில்ரன் மற்றும் சித்திரச் செவ்வானம் இலக்கியம்(?) வெளியீடு. இந்த ஆண்டில் நான் வாசித்த இறுதி புத்தகம். 350 ரூபாய்க்கு 399 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம், அதுவும் சிறார் கதைகள் என்னும்போதே ஒரு பயம் மற்றும் தயக்கம் இருந்தது. என்ன பயம், ஏன் தயக்கம் என கேட்டது புத்தக அட்டையில் இருந்த யூமா வாசுகியின் பெயர். மனுசன் சூப்பருங்க. யூமா வாசுகி, நீதிமணி, விஷ்ணுபுரம் சரவணன் என இன்னும் சில பெயர்கள் சிறார் இலக்கியம் எடுக்கையில் எனக்கு எந்த தயக்கமும் கொடுக்காதவர்கள ாக இருக்கிறார்கள். அப்படியே புத்தகத்தை திறந்தா பூனை, நாய், எலி, கிளி, மாடு, குரங்கு என எல்லாமும் என்னவெல்லாம் கதைகள் சொல்லுது.. அப்படியே கட கடவென பக்கங்கள் வெகு வேகமாக நகர, அட இன்னும் என்னவெல்லாம் இருக்குன்னு மனசுக்குள்ள குறுகுறுப்பு. தொடர்ந்து கடந்தா அடுத்தாற்போல சிவப்பு மிளகாய் மூக்கன், இட்லி கண்ணன், தோசை நாக்கன் என பூதங்கள், அப்ப மரம், புலி, சிங்கம், முள்ளம்பன்றி என அட போங்க அமர்க்களம்.. அப்படியே இட்லி கண்ணன், தோசை நாக்கன் கதையை அபி கீர்த்தனா குட்டிகளிடம் நம்ம கற்பனையையும் மிக்ஸ் பண்ணி சொன்ன என்னா சிரிப்பு, அப்பா அடு...

கலிலியோ - எஸ்.சிவதாஸ் -- நூல் அறிமுகம்

  20 வருடங்கள் கழிந்த பின்னும் அந்த வாசிப்பு இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது . மேட்டுப்பாளையத்திலிருந்து ஈரோடு நோக்கிய பேருந்து பயணத்தில் முழுக்க நின்றுகொண்டே வாசித்த அந்த புத்தகமும் அந்த வாசிப்பு அனுபவமும் பசுமையாக இருக்கிறது . அப்போது தான் நான் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்திருந்தேன் . என் தலைவன் தோழர் பேராசிரியர் நா . மணி அவர்கள் தான் இந்தப் புத்தகத்தை வாசித்து பாருங்க என கொடுத்தார் . அந்தப் புத்தகம் தான் அறிவியல் வெளியீட்டில் வந்திருந்த “ வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் ”. பேரா . எஸ் . சிவதாஸ் என்ற மலையாள எழுத்தாளரின் எழுத்து தமிழில் அழகிய மொழிபெயர்ப்பாக வந்திருந்தது . முதன்முதலில் அவர்கள் வெளியிட்ட அந்த வடிவம் (landscape) மிக சிறப்பானது . தமிழில் வழவழ தாளில் அப்படி ஒரு லேஅவுட்டில் நான் இதுவரையிலும் கூட எந்த ஒரு புத்தகத்தை யும் வாசித்ததே இல்லை . புத்தக வடிவமைப்பை விடவும் அந்த எழுத்து நடை வெகு சுவாரசியம் . கதைகளின் வழியே அறிவியல் சொல்லல் என சொல்லலாமா ? தெரிய...

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்...