Skip to main content

மயானக்கரையின் வெளிச்சம் - நூல் அறிமுகம்

மௌனத்தின் சாட்சியங்கள் என்னும் நாவலிலிருந்து அடுத்த கட்டத்திற்கு சிறுகதை தொகுப்புடன் தோழர் சம்சுதீன் ஹீரா. முதலில் வாழ்த்துகள் தோழர்.

2001-2002 காலக்கட்டத்தில் நான் உதகையிலிருந்து சனி ஞாயிறு விடுமுறைக்காக விஜயா பதிப்பகம் செல்லும்போதும் என்னை தொந்தரவு செய்தது அந்த தெரு முனையில் மணல் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்தியபடி நின்ற அதிரடிபப்டைவீரர்களின் அந்த செக் போஸ்ட் தான். மத கலவரங்கள் நடந்து முடிந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழிந்தபின்னரும் அந்த இடைப்பட்ட காலத்தில் ஏதும் பிரச்சனைகள் இல்லாத காலத்தும் கடந்து செல்லும் ஒவ்வொருவரையும் குறுகுறு என பார்த்தப்படி நின்றிட்ட அக்காவலர்கள் பெரும்பான்மை மதத்தை சேர்ந்தவனான என்னையே தொந்தரவு செய்திடுகையில் சிறுபான்மை மதத்தினருக்கு எத்தகையதொரு கடும் அவஸ்தையாக இருந்திருக்கும்!! அந்த உளவியல் தலையீடு இருக்கிறதல்லவா அதிலிருந்து தொடங்குகிறது சிறுபான்மை மதத்தினருக்கான அவஸ்தையும், அவமானமும். இது சிறுபான்மை மதத்தினருக்கு மட்டுமல்ல, ஒடுக்கபப்ட்ட மக்களுக்கும் தான். காலம் காலமாக எங்கு குற்றம் நடந்தாலும் எந்தவித தடயமும் கிடைத்திராக காலத்தும், முகாந்திரம் ஏதுமற்று இருந்தும் நேரிடையாக காவல்துறை இறங்குவதும் ஊருக்கு வெளியே இருக்கிற தலித் மக்களின் வீடுகள் தான். ஆனால் இந்த உளவியல் தலையீடு சிறுபான்மை மதத்தினருக்கு, ஒடுக்கப்பட மக்களின் ஒரு சிலரை மட்டுமே radicalஆக தூண்டி அடிப்படைவாதம், அராஜகவாதம் பக்கம் கொண்டு சேர்க்க, கலவரங்களில் கை ஓங்கியபடியே இருக்கும் பெரும்பான்மை மத, ஆதிக்க சாதி மக்களுக்கோ அவர்கள் கைகளை பலபப்டுத்தியதாக இருக்கிறது. அதன் சாட்சியங்களின் ஒன்றுதான் திருப்பூர் நகரத்தில் தலையெடுக்கு மத தூண்டல் கலவர முயற்சிகள். 
 
இந்தப் பின்னணியை புரிந்து கொள்கையில் இச்சிறுகதை தொகுப்பின் கதையாசிரியரது உளவியலை புரிந்து கொள்ள இயலும். என்னப்பா ஒரே சோகமாக, இருளாக அத்தனை கதைகளும் இருக்கிறதே ஒவ்வொரு கதை முடிந்த பின்னரும் அடுத்த கதைக்கு போவதற்கு முன்னால் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுதலும், ஒரு தைரியத்தையும் வரவழைக்க வேண்டியிருக்கிறதே என நீங்களும் எண்ணினால் அதற்கான பதிலும் இதுதான். இக்கதைகளில் சொல்லப்பட்ட இன்னல்களை விட துன்பதுயரங்களை விட நாட்டில் நடப்பது பன் மடங்கு என்கிற உண்மையையும் கவனத்தில் வைத்துக் கொண்டு படித்திடுகையில் தான் இக்கதை தொகுப்பிற்கான தேவை புரிந்திடும். 
 
இது உண்மையா அல்லது என் அவதானிப்பா என தெரியவில்லை. மௌனத்தின் சாட்சியங்கள் எழுதும் பொழுதைவிட இத்தொகுப்பு எழுதுகையில் இன்னமும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் அதற்கான கொடும் சூழலாக நாவலுக்கும் இச்சிறுகதை தொகுப்பிற்கும் இடையேயான காலம் இருந்திருக்கிறது இன்னமும் இருக்கிறது என்பதே என் அவதானிப்பு. 
 
நான் ஒவ்வொரு கதையாக செல்லப் போவதில்லை. mainstream media மட்டுமேவோ அல்லது வாட்சப் யூனிவர்சிட்டியை மட்டும் நம்பியவராக இருந்திட்டால் இத்தொகுப்பின் கதைகளுக்கான நிகழ்களம் என்பது எங்கிருக்கிறது என்ற கேள்வியும் கதைக்காலம் எந்த ஆண்டு என்பதுமான கேள்வியும் எழக் கூடும். ஆனால் இன்னமும் செய்திகளை கவனப்படுத்துகிற சமூகவலைத்தளங்களையும் கவனிப்பவராக இருப்பின் இத்தொகுப்பின் கதைக்களமும் காலமும் புரிபடும். 

 
 
இன்னொன்றும் குறிப்பிட்டாக வேண்டும். இந்த தொகுப்பின் கதை மாந்தர்களின் பெரும்பாலும் இஸ்லாமியர்களே. அவர்கள் பெரும்பான்மை வாத அடிப்படைவாதம், பாசிசம் செய்யும் கொடூரங்களில் சிக்கித் தவிப்பதையேதான் எல்லா கதைகளும் சொல்கிறது. தன்னுடைய மதத்தை நாட்டின் மதமாக கொண்டிருக்கப் போவதாக அறிவித்து அந்நாட்டில் குடியேற வாய்ப்பிருந்தும் எந்த மதமும் அரசு மதமாக கொண்டிராத தேசமே பாதுகாப்பு என நம்பி இருந்திட்ட இருக்கும் தேசமே உயிர் என நினைத்து வாழும்மக்களின் எதிர்பார்ப்பும் ஆசையும் நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக அசிங்கமாக அருவருப்பாக அபாயகரமாக தவிடுபொடியாவதை வேறு எப்படித்தான் எழுதுவது? இப்படித்தான் எழுதியாக வேண்டும்.
 
இறுதியாக அந்தப் புகழ்பெற்ற பாடல் சொல்வது போல, இன்று இஸ்லாமியர்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு தானே, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தானே என்றிருந்திட்டால் நாளை என்பது எவருக்குமில்லை. அது மட்டுமல்ல, பாபர் மசூதியோடு முடிவதாக இல்லை நிகழ்ச்சிநிரல் என காசி மசூதியையும் ASI கொண்டு அங்கு அதற்கு முன்னர் கட்டிடம் ஏதும் இருந்துள்ளதா என பார்க்க அனுமதியும் கிடைத்துவிட்ட நேற்றைய பின்னணியில் சூதின் வீச்சும், அச்சமும் இன்னமும் மேலோங்குகிறது. 
 
நண்பர்களே, இருள் தான் அவலம் தான் சோகம் தான். ஆனால் உண்மையும் யதார்த்தமும் அப்படியாகவே இருக்கையில் வேறு என்னதான் செய்வது, எழுதுவது?!! 
 
 
வாசித்துவிட்டு சோகத்தை சுகிக்க சொல்லவில்லை ஹீரா யதார்த்தத்தை புரிந்துகொண்டு வினையாற்ற சொல்கிறார். பாரதி புத்தகாலயத்திற்கும் வாழ்த்துகள்.

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற