Skip to main content

அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி - அ. கரீம்

புத்தக கண்காட்சியில் பிப்ரவர் மாதம் வாங்கியது. அப்படியே தினமும் என்னைப் படி படி எனக் கேட்டுக் கொண்டே இருந்தது. அது சரி, இது போன்ற இன்னும் சில புத்தகங்களும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன, அதற்கு என்ன செய்ய இயலும்? எழுத்தாளருக்கு எழுத்து வர ஒரு mood தேவைப்படுவது போல வாசகருக்கும் வாசிக்க ஒரு mood தேவைப்படுகிறது. அப்படியான ஒரு மூடில் வாசிக்கத் துவங்கி ஒரே மூச்சில் முடித்த புத்தகம் தான் நண்பர் தோழர் அ. கரீம் அவர்களின் 'அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி'.
 
நான் ஒன்னும் பெரிய விமர்சகர் எல்லாம் இல்லை எழுத்தாளரின் வளர்ச்சியை அவருடைய முந்தைய எழுத்துக்கள் பற்றி எல்லாம் விமர்சிக்க. ஆனால், ஒன்னே ஒன்று தாழிடப்பட்ட கதவுகள் தந்த எதிர்ப்பார்ப்பை, சிதார் மரங்கள்... தாண்டி அகல்யாவுக்கும் ஒரே ரொட்டி அப்படியே தக்க வைத்துள்ளது. அதே வார்த்தைகளின் எளிமை, எளிய மனிதர்களின் வாழ்வு கூடியவரைக்கும் அச்சு அசலாய், தேவையற்ற வார்த்தைகள் திணிப்பு என இல்லாமல் சிறப்பாய் இருக்கு இத்தொகுப்பும் என சொல்லலாம். 
 
முதலிலேயே சொல்லிவிடுகிறேன் அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி, பஷீரின் கடைசி கிடாய், அன்பே ஆசியா... என இவை மூன்றோடு எம்ஜியாருக்கு வயசாயிடுச்சு எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. வறண்ட நிலத்தில் ஒரு பூ ஒரு “அட” போட வைத்தது. 
 
இந்திய குடியரசின் விடுதலைக்கு பின்னான இந்த 75 ஆண்டு காலத்தில் மக்களை மொத்தமாக நிராதரவாக விட்டுவிட்ட அரசு என்ற ஒன்று இதுவரையிலும் இருந்ததாக எனக்கு நினைவில்லை. ஒரு பெருந்நோய் தொற்று காலம் எந்த ஒரு அரசினையும் கொஞ்சமாகவாவது கருணையோடு இருந்திட செய்யும். ஆனால் எதுவும் இல்லாது போன ஒரு அரசினை அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி, கானல் நீர் உருவங்கள் உங்களுக்கு அடையாளம் காட்டும். கருணையில்லாத காலங்களிலும் கருணைக்கென ஏதோ ஒரு மனசு துடித்துக் கொண்டுதான் இருக்கிறது எனவே சொல்கிறது பல கதைகளும். நம்பிக்கை என்ற ஒன்றுதான் கடைசிவரை என ஒரு சொலவடை போல அநேக கதைகள் இருண்ட காலத்திலும் ஒரு ஒற்றை ஒளிக்கீற்றை அடையாளம் காண்பித்து நிற்கின்றன என்பதே இத்தொகுப்பின் பலம் என சொல்லலாம். 
 
ஒரு பக்கம் பெரும்பான்மை மதவாதம் சிறுபான்மை மதத்தை ஒடுக்கிவிட அத்தனை வன்முறைகளையும் சதிகளையும் அரங்கேற்றி இருந்திட சிறுபான்மை மதக் காவலர்களாக பழமைவாதிகள் மற்றும் அடிப்படைவாதிகள் தோன்றி வரவேற்பு பெறுவதும் அதனாலும் அச்சிறுபான்மை மதத்திற்கே பெரும் பகை நேருகிறது என்பதையும் அன்பே ஆசியாவில் பிரமாதமாக சொல்கிறார். சிறுபான்மையினரில் பழமைவாதம் அடிப்படைவாதம் செய்யும் ஒரு சிறிய தவறு எப்படி காலம் கடந்தும் அந்த சிறுபான்மையினரை குற்றப் பரம்பரை போல மாயத்தோற்றத்தை உருவாக்கி அப்பாவிகளை பழிவாங்குகிறது என சொல்லும் தஸ்தகீர்... சிறுகதை அருமை. இவை இரண்டும் ரொம்பவே ஸ்பெஷல் கதைகள்.
 
கிருமி நாசினிகள் இம்மண்ணின் இந்திய தேசத்தின் அசல் உருவத்தை தன்மையை அசத்தலாக நமக்கு நினைவுப்படுத்துகிறது. பஷீரின் கடைசி கிடாய் என்னைப் பொறுத்தவரை இத்தொகுப்பின் எனக்கு ஒரு freshness feeling தந்த கதை என சொல்வேன். பாஸ்கர் சக்தி என்னும் எளிய படைப்பாளியின் பல கதைகளிலும் இந்த எளிய மனிதர்களது innocence மற்றும் மனிதம் விலங்கினம் என பாகுபாடு இல்லாமல் சகல் உயிர்களையும் உறவாக காண்பதை நான் வாசித்து இருக்கேன். அது போன்ற ஒரு ஸ்பெஷல் கதை பஷீரின் கடைசி கிடாய்….
 
அந்த எம்ஜியாருக்கு வயசாயிடுச்சு ஒரு தனிப்பட்ட ரகம். தேசவிரோதியின் எஞ்சிய குறிப்புகள் மிக முக்கியமான ஒன்று. படித்துவிடுங்கள் மக்களே.. உங்களுக்கும் இக்கதை ரொம்பவே பிடிக்கும். 

 
நல்லதொரு தொகுப்பு. வாழ்த்துக்கள் தோழர் அ. கரீம்.

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற