போர்
ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது.
அந்த டவுன்
அநேகமாக வெறிச்சோடி விட்டது.
எஞ்சிய சிலரும்
வெளியே வந்தால் தலையில் குண்டு
விழுமோ என்ற கவலையிலேயே
அநேகமாக சிதிலடமைந்த இன்னும்
வீடுகள் என எப்படித்தான்
அழைக்கப்படுகிறதோ என்ற
நிலையில் இருக்கும் கட்டிடங்களில்
ஒண்டி இருக்கின்றனர்.
தினமும்
சாப்பிடுவது என்பதெல்லாம்
அங்கே பெரும் கனவு. ஒரு
பக்கம் அரசு போராளிகளை
நசுக்குகிறோம் என்ற பெயரில்
அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக
கொன்று குவிக்கிறது.
புதைக்க கூட
இடமில்லை. இறுதிசடங்கு
என்ற மரியாதையும் பலருக்கு
இல்லை. இது
சிரியாவில் உள்ள தராயா
நகரத்தில்.
இப்படியான
ஒரு துன்பவியல் நிகழ்வு
நடக்கும் இடத்தில் போர்காலத்தில்,
ஒரு நூலகம்
அமைக்கப்படுகிறது, அங்கே
புத்தகங்கள் விநியோகமும்
நடைபெறுகின்றது; வாசிப்பும்
விவாதமும் நடைபெறுகின்றது
என்பதை எல்லாம் என்னவென்று
சொல்ல. ஒரு
சிலிர்ப்பான அனுபவம்.
ஆம்,
மொத்தமாக
வன்முறையினை நம்பாமல்
தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய
அடிப்படைவாத குணமற்ற ஒரு
போராளி குழு ஒன்று குண்டுகளின்
மழையில் சிதிலமடைந்துள்ள
பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில்
இருந்து புத்தகங்களை தேடி
எடுக்கின்றனர். சேதம்
அதிகம் உள்ள புத்தகங்களை
தவிர்த்து மீதம் இருப்பவற்றை
சேகரிக்கின்றனர். சுத்தம்
செய்கின்றனர். முறையாக
நூலகங்களில் அடுக்குவது போல்
எண்ணிட்டு அடுக்குகின்றனர்.
இவ்வளவும்
செய்த பிறகு அந்த கேள்வியை
அவர்கள் எதிர்கொள்கின்றனர்.
நூலகத்திற்கு
வாசகர்கள் எங்கிருந்து
வருவார்கள்? வருவார்களா?
ஆனால்,
அவர்களின்
அந்த கேள்வியை அர்த்தமற்றதாக்கி
வந்து நின்றனர் மக்கள்.
சரியான உணவில்லை,
மின்சாரம்
இல்லை, மருந்துகள்
இல்லை, ஆனாலும்
வாசிப்பை நோக்கி மக்கள்
வந்தனர். புத்தகம்
வாசித்தல் மட்டுமல்ல தீவிர
வாசிப்பு கொண்ட இளம் போராளி
ஒருவர் புத்தகம் வாசிக்க
மக்கள் கேட்கின்றனர்,
விவாதம்
செய்கின்றனர், அவர்
விவாத தலைமையும் கொள்கிறார்.
நம்ப முடியாத
ஒன்றாக நீங்கள் நினைத்தால்,
வேறு வழியில்லை
எனக்கு உங்களை காலச்சுவடு
பதிப்பகம் வெளியீடு
வெளியிட்டிருக்கும் இந்த
புத்தகத்தை வாசிக்க சொல்வதை
விட.
அப்படியா
ஒரு நூலகமா, இந்த
சூழலிலா, எப்படி
நூலகம் நடத்தப்படுகின்றது
என்ற நமது ஆவலை போலவே பிரான்ஸ்
நாட்டு பத்திரியாளர் தெல்ஃபின்
மினூய் அவர்களுக்கும் எழ
அவர்கள் மிக சிரமப்பட்டு
தராயா நகரத்தின் போராளி ஒருவரை
தொடர்பு கொள்கிறார்.
வீடியோ கால்தான்
எப்பொழுதும். உங்கள்
நூலகத்தை பற்றி பேசுங்கள்
என்ற சொன்ன போது அந்த போராளி
இடைவிடாமல் பேசுகிறார்,
நூலகத்தின்
வாயிலாக அந்த தாராயா நகரின்
கலாச்சாரம், பண்பாடு,
எழுத்தாளர்கள்,
சிரிய கவிஞர்கள்,
தாராயா நகரின்
போர்க்குணமிக்க வரலாறு என
எல்லாம் வெளிப்படுகிறது.
மினூய் அதை
அப்படியே வார்த்தைகளில்
வடிக்க, இதோ
இந்த நூல் நம் முன்னே.
இறுதியாய்
ஒரு கொடும் நாளில் பஷாரின்
விமானங்கள் அம்பரல்லா குண்டுகள்
போட்டு தராயா நகரை தகர்க்க,
அந்த நூலகமும்
தகர்க்கப்படுகிறது.
போராளிகள்
வேறு வழியின்றி நகரத்தை விட்டு
செல்கின்றனர். ஆனாலும்,
என்ன அந்த
போராளிகள் போகும் இடம் தோறும்
வாசிப்பை விதைப்பார்கள்,
தராயா நகரம்
என்ற ஒன்று முற்றாய் இற்று
விழும் வரை எவரோ ஒருவர் அங்கே
சிதிலங்களில் ஒரு பக்கத்தை
எடுத்து வாசித்து கொண்டிருப்பார்
என்றே தோன்றுகிறது.
எஸ்.
ஆர்.
கிருஷ்ணமூர்த்தி
அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு
மிக சிறப்பு. என்ன
எளிமை. வார்த்தைகளில்
சிக்கனம். அதைவிட
வரிகளின் நீளம் குறைவு.
வாசிப்பை
நேசிப்போர், ஏன்
இந்தப் புத்தகத்தை தவறவிடவேண்டும்.
என்ன செய்ய
தோழர், படிக்கக்
நேரமே கிடைக்கலே என்று
சொல்வோரும் இப்புத்தகத்தை
வாசித்துவிடலாம்.
சிரியாவில்
தலைமறைவு நூலகம், தெல்ஃபின்
மினூய், தமிழில்
: எஸ்.
ஆர்.
கிருஷ்ணமூர்த்தி,
காலச்சுவடு
வெளியீடு, விலை:
175, பக்கங்கள்
: 144.
குறிப்பு
: என்
நண்பர் தோழர் ஜெ.பாலசரவணன்
மார்ச் மாத புதிய புத்தகம்
பேசுது இதழில் எழுதியுள்ள
இந்த நூல் அறிமுகத்தை கட்டாயம்
வாசியுங்கள். அது
இந்த அறிமுகத்தை விட உங்களுக்கு
பல செய்திகள் எளிமையாக சொல்லும்.
https://bookday.co.in/book-introduction-library-of-the-underground-in-syria/
Comments