Skip to main content

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது. அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது. எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர். தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு. ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது. புதைக்க கூட இடமில்லை. இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை. இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில்.

இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில், ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது, அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல. ஒரு சிலிர்ப்பான அனுபவம். ஆம், மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்றனர். சேதம் அதிகம் உள்ள புத்தகங்களை தவிர்த்து மீதம் இருப்பவற்றை சேகரிக்கின்றனர். சுத்தம் செய்கின்றனர். முறையாக நூலகங்களில் அடுக்குவது போல் எண்ணிட்டு அடுக்குகின்றனர். இவ்வளவும் செய்த பிறகு அந்த கேள்வியை அவர்கள் எதிர்கொள்கின்றனர். நூலகத்திற்கு வாசகர்கள் எங்கிருந்து வருவார்கள்? வருவார்களா?

ஆனால், அவர்களின் அந்த கேள்வியை அர்த்தமற்றதாக்கி வந்து நின்றனர் மக்கள். சரியான உணவில்லை, மின்சாரம் இல்லை, மருந்துகள் இல்லை, ஆனாலும் வாசிப்பை நோக்கி மக்கள் வந்தனர். புத்தகம் வாசித்தல் மட்டுமல்ல தீவிர வாசிப்பு கொண்ட இளம் போராளி ஒருவர் புத்தகம் வாசிக்க மக்கள் கேட்கின்றனர், விவாதம் செய்கின்றனர், அவர் விவாத தலைமையும் கொள்கிறார். நம்ப முடியாத ஒன்றாக நீங்கள் நினைத்தால், வேறு வழியில்லை எனக்கு உங்களை காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு வெளியிட்டிருக்கும் இந்த புத்தகத்தை வாசிக்க சொல்வதை விட.

அப்படியா ஒரு நூலகமா, இந்த சூழலிலா, எப்படி நூலகம் நடத்தப்படுகின்றது என்ற நமது ஆவலை போலவே பிரான்ஸ் நாட்டு பத்திரியாளர் தெல்ஃபின் மினூய் அவர்களுக்கும் எழ அவர்கள் மிக சிரமப்பட்டு தராயா நகரத்தின் போராளி ஒருவரை தொடர்பு கொள்கிறார். வீடியோ கால்தான் எப்பொழுதும். உங்கள் நூலகத்தை பற்றி பேசுங்கள் என்ற சொன்ன போது அந்த போராளி இடைவிடாமல் பேசுகிறார், நூலகத்தின் வாயிலாக அந்த தாராயா நகரின் கலாச்சாரம், பண்பாடு, எழுத்தாளர்கள், சிரிய கவிஞர்கள், தாராயா நகரின் போர்க்குணமிக்க வரலாறு என எல்லாம் வெளிப்படுகிறது. மினூய் அதை அப்படியே வார்த்தைகளில் வடிக்க, இதோ இந்த நூல் நம் முன்னே.

இறுதியாய் ஒரு கொடும் நாளில் பஷாரின் விமானங்கள் அம்பரல்லா குண்டுகள் போட்டு தராயா நகரை தகர்க்க, அந்த நூலகமும் தகர்க்கப்படுகிறது. போராளிகள் வேறு வழியின்றி நகரத்தை விட்டு செல்கின்றனர். ஆனாலும், என்ன அந்த போராளிகள் போகும் இடம் தோறும் வாசிப்பை விதைப்பார்கள், தராயா நகரம் என்ற ஒன்று முற்றாய் இற்று விழும் வரை எவரோ ஒருவர் அங்கே சிதிலங்களில் ஒரு பக்கத்தை எடுத்து வாசித்து கொண்டிருப்பார் என்றே தோன்றுகிறது.

எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு மிக சிறப்பு. என்ன எளிமை. வார்த்தைகளில் சிக்கனம். அதைவிட வரிகளின் நீளம் குறைவு.

வாசிப்பை நேசிப்போர், ஏன் இந்தப் புத்தகத்தை தவறவிடவேண்டும். என்ன செய்ய தோழர், படிக்கக் நேரமே கிடைக்கலே என்று சொல்வோரும் இப்புத்தகத்தை வாசித்துவிடலாம்.

சிரியாவில் தலைமறைவு நூலகம், தெல்ஃபின் மினூய், தமிழில் : எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி, காலச்சுவடு வெளியீடு, விலை: 175, பக்கங்கள் : 144.

குறிப்பு : என் நண்பர் தோழர் ஜெ.பாலசரவணன் மார்ச் மாத புதிய புத்தகம் பேசுது இதழில் எழுதியுள்ள இந்த நூல் அறிமுகத்தை கட்டாயம் வாசியுங்கள். அது இந்த அறிமுகத்தை விட உங்களுக்கு பல செய்திகள் எளிமையாக சொல்லும்.
https://bookday.co.in/book-introduction-library-of-the-underground-in-syria/

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

பேரன்பின் பூக்கள் - நூல் அறிமுகம்

புக்ஸ் பார் சில்ரன் மற்றும் சித்திரச் செவ்வானம் இலக்கியம்(?) வெளியீடு. இந்த ஆண்டில் நான் வாசித்த இறுதி புத்தகம். 350 ரூபாய்க்கு 399 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம், அதுவும் சிறார் கதைகள் என்னும்போதே ஒரு பயம் மற்றும் தயக்கம் இருந்தது. என்ன பயம், ஏன் தயக்கம் என கேட்டது புத்தக அட்டையில் இருந்த யூமா வாசுகியின் பெயர். மனுசன் சூப்பருங்க. யூமா வாசுகி, நீதிமணி, விஷ்ணுபுரம் சரவணன் என இன்னும் சில பெயர்கள் சிறார் இலக்கியம் எடுக்கையில் எனக்கு எந்த தயக்கமும் கொடுக்காதவர்கள ாக இருக்கிறார்கள். அப்படியே புத்தகத்தை திறந்தா பூனை, நாய், எலி, கிளி, மாடு, குரங்கு என எல்லாமும் என்னவெல்லாம் கதைகள் சொல்லுது.. அப்படியே கட கடவென பக்கங்கள் வெகு வேகமாக நகர, அட இன்னும் என்னவெல்லாம் இருக்குன்னு மனசுக்குள்ள குறுகுறுப்பு. தொடர்ந்து கடந்தா அடுத்தாற்போல சிவப்பு மிளகாய் மூக்கன், இட்லி கண்ணன், தோசை நாக்கன் என பூதங்கள், அப்ப மரம், புலி, சிங்கம், முள்ளம்பன்றி என அட போங்க அமர்க்களம்.. அப்படியே இட்லி கண்ணன், தோசை நாக்கன் கதையை அபி கீர்த்தனா குட்டிகளிடம் நம்ம கற்பனையையும் மிக்ஸ் பண்ணி சொன்ன என்னா சிரிப்பு, அப்பா அடு...

கலிலியோ - எஸ்.சிவதாஸ் -- நூல் அறிமுகம்

  20 வருடங்கள் கழிந்த பின்னும் அந்த வாசிப்பு இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது . மேட்டுப்பாளையத்திலிருந்து ஈரோடு நோக்கிய பேருந்து பயணத்தில் முழுக்க நின்றுகொண்டே வாசித்த அந்த புத்தகமும் அந்த வாசிப்பு அனுபவமும் பசுமையாக இருக்கிறது . அப்போது தான் நான் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்திருந்தேன் . என் தலைவன் தோழர் பேராசிரியர் நா . மணி அவர்கள் தான் இந்தப் புத்தகத்தை வாசித்து பாருங்க என கொடுத்தார் . அந்தப் புத்தகம் தான் அறிவியல் வெளியீட்டில் வந்திருந்த “ வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் ”. பேரா . எஸ் . சிவதாஸ் என்ற மலையாள எழுத்தாளரின் எழுத்து தமிழில் அழகிய மொழிபெயர்ப்பாக வந்திருந்தது . முதன்முதலில் அவர்கள் வெளியிட்ட அந்த வடிவம் (landscape) மிக சிறப்பானது . தமிழில் வழவழ தாளில் அப்படி ஒரு லேஅவுட்டில் நான் இதுவரையிலும் கூட எந்த ஒரு புத்தகத்தை யும் வாசித்ததே இல்லை . புத்தக வடிவமைப்பை விடவும் அந்த எழுத்து நடை வெகு சுவாரசியம் . கதைகளின் வழியே அறிவியல் சொல்லல் என சொல்லலாமா ? தெரிய...

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்...