Skip to main content

நீண்ட காத்திருப்பு - அறிமுகம்


எந்த அதிர்ச்சி தரும் தகவலும் இல்லை. ரொம்ப சுவாரசியமாக திரில்லர் போன்றும் இல்லை. இலங்கை போர் தொடர்பான புத்தகங்களில் நம்மால் புத்தகத்தை கீழே வைக்காமல் நெஞ்சம் கனத்து படிக்க முடியாமல் வைக்கப்பட்ட புத்தகங்களில் இது சேராது. ஆனாலும், ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது, இப்புத்தகம் தன்னுடைய வார்த்தைகளில் அதை பொதிந்து வைத்திருக்கிறது. ஒரு மூச்சில் படித்துவிட என்னால் முடிந்தது.

போரில் சிறைபிடிக்கப்பட்ட ஒரு இராணுவ அதிகாரியின் சிறை அனுபவமும், விடுதலைக்கான பின்னான சில தினங்களுமே இப்புத்தகம். இலங்கை கடற்படையின் அதிகாரி கொமடோர் அஜித் போயகொட போரில் விடுதலைப்புலிகளால் சிறைபிடிக்கப்படுகிறார். அவரோடு அப்போரில் கைதான ஒருவர் என தொடங்கி, பின் 22 பேர் இணைகின்றனர். சிறை வாழ்வின் ஆரம்ப காலங்களில் விடுதலைக்கான எந்த சிந்தனையும் இல்லை, எனினும் மரணம் குறித்த பயமும் அவர்களுக்கு அவ்வளவாக இல்லை. ஆனாலும் போரில் இராணுவம் முன்னேறும் தருணங்களில் இவர்கள் சிக்கலுக்கும், புலிகள் முன்னேறும் தருணங்களில் ஆசுவாசமும் பெறுகிறார்கள்.

இந்தப் புத்தகத்தின் கதாநாயகர் கடைசிவரை கொமடோராகவே இலங்கை அரசின் பிரதிநிதியாகவே நடந்துகொள்கிறார். அதைவிட முக்கியம், புலிகளும் அவ்வாறே நடத்த முயல்கின்றனர். ஆனால், அதன் பின்னே செஞ்சிலுவை சங்கத்தின் பங்கும், உலகத்தின் பார்வையில் கண்ணியமானவர்கள் என்ற தோரணையுமே இருக்கிறது என்பதையும் அவர் குறிப்பிடாமல் இல்லை. “சார், என்ற விளியிலே கடைசிவரை நடத்துகின்றனர்; அவர் மேல் தாக்குதல் நடத்தப்படவில்லை; சில வேளைகளில் தனித்த மரியாதையும் கிடைக்கிறது.

சிறைவாழ்க்கையிலும் அவரது எதிர்கால நம்பிக்கை என்பது ஒன்று கடந்தகாலங்களின் நினைவிலும், இரண்டு, எப்படியும் இந்த நொடி வாழ்ந்து கடந்துவிட்டால் அடுத்த நொடி காத்திருக்கிறது என்ற எண்ணமும் தருகிறது. சிறைவாழ்வில் ரொம்ப கடினமான பொழுதுகளிலும் இந்த எண்ணங்களுமே 8 வருடத்தை கடக்க வைத்திருக்கிறது.

கொமடோர் புலிகள் மீது வைக்கும் விமர்சனமாக 30 வருட போர் என்பது மனங்களை அயர்ச்சிக்குள்ளாக்கியது என்பதும், 10 வருட காலத்திற்குள்ளாகவே அவர்களை இலக்கை எட்டி இருக்க வேண்டும் என்பதாக மட்டுமே இருக்கிறது. சிங்களவராக இருந்தும் தமிழ் மக்கள் மேல் அவருக்கு வெறுப்பு என்பது இல்லை. மாறாக போரில் பாதிக்கபட்ட பாவப்பட்டவர்கள் என்பதாகவே தமிழர்கள் மீதும் சிங்களவர்கள் மீதுமே இருக்கிறது. இலங்கை ராணுவத்தையும் அவர் விமர்சனம் செய்கிறார். முன்னேற்றம் கண்டு கடந்து சென்ற ராணுவம் இலக்கில்லாமல், இதயமே இல்லாமல் சூறையாடிய தன்மையும் சொல்லி இருக்கிறார்



விடுதலை பெற்று சுனாமி சமயத்தில் உதவி செய்துவிட தெற்கு இலங்கை நோக்கிய பயணத்தில் தன்னை சிறையில் வைத்திருந்த புலிகளின் பிரதிநிதிகளை பார்க்கிறார். அவர்களும் சேர் எப்படி இருக்கிறீர்கள் என விசாரிக்கிறார்கள். ஒருவர் படகுபயணம் செய்து அவர் குழந்தையுடன் இவரை கண்டு செல்கிறார். இதில் தான் மானுட சாரம் வெளிப்படுகிறது.

சிறைக்காலத்தில் தன்னை புலிகளின் உளவாளி ஆக செயல்படுகிறார் என அரசு குற்றச்சாட்டு வைக்க விடுதலைக்கு பின்னான காலத்தில் அதை அவர் மறுத்து தன்னை நிரூபிக்கிறார். ஆனாலும், சந்தேக நிழல் இன்னமும் மீதி இருக்கிறது. விடுதலை பெற்றதன் பின்னான உலகம் அவருக்கு பெரிய தளர்வையும், வருத்தத்தையுமே தருகிறது. அதிலே தான் இப்புத்தகமும் பிறக்கிறது.

இதை படிக்கும் போது என் நினைவுக்கு ஷோபாசக்தியின் "கொரில்லா"நினைவுக்கு வராமலில்லை. இப்புத்தகத்திலும் ஒரு இடத்தில் இவ்வாறு வருகிறது. அது "புலிகள் சிங்கள இராணுவத்தினரை சிறைபிடித்து அவர்களை நடாத்திய தன்மைக்கும், எதிர் இயக்கத்தவர்/ஒற்றர்கள்/நம்பிக்கை துரோகிகள் என்று சிறைபிடித்து அவர்களை நடத்திய தன்மைக்கும் பாரிய வித்தியாசம் இருக்கிறது.

வடலி பதிப்பகம் வெளியீடு, 204 பக்கங்கள், நீண்ட காத்திருப்பு- கொமடோர் அஜித் போயகொட, தமிழில் : தேவா

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

பேரன்பின் பூக்கள் - நூல் அறிமுகம்

புக்ஸ் பார் சில்ரன் மற்றும் சித்திரச் செவ்வானம் இலக்கியம்(?) வெளியீடு. இந்த ஆண்டில் நான் வாசித்த இறுதி புத்தகம். 350 ரூபாய்க்கு 399 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம், அதுவும் சிறார் கதைகள் என்னும்போதே ஒரு பயம் மற்றும் தயக்கம் இருந்தது. என்ன பயம், ஏன் தயக்கம் என கேட்டது புத்தக அட்டையில் இருந்த யூமா வாசுகியின் பெயர். மனுசன் சூப்பருங்க. யூமா வாசுகி, நீதிமணி, விஷ்ணுபுரம் சரவணன் என இன்னும் சில பெயர்கள் சிறார் இலக்கியம் எடுக்கையில் எனக்கு எந்த தயக்கமும் கொடுக்காதவர்கள ாக இருக்கிறார்கள். அப்படியே புத்தகத்தை திறந்தா பூனை, நாய், எலி, கிளி, மாடு, குரங்கு என எல்லாமும் என்னவெல்லாம் கதைகள் சொல்லுது.. அப்படியே கட கடவென பக்கங்கள் வெகு வேகமாக நகர, அட இன்னும் என்னவெல்லாம் இருக்குன்னு மனசுக்குள்ள குறுகுறுப்பு. தொடர்ந்து கடந்தா அடுத்தாற்போல சிவப்பு மிளகாய் மூக்கன், இட்லி கண்ணன், தோசை நாக்கன் என பூதங்கள், அப்ப மரம், புலி, சிங்கம், முள்ளம்பன்றி என அட போங்க அமர்க்களம்.. அப்படியே இட்லி கண்ணன், தோசை நாக்கன் கதையை அபி கீர்த்தனா குட்டிகளிடம் நம்ம கற்பனையையும் மிக்ஸ் பண்ணி சொன்ன என்னா சிரிப்பு, அப்பா அடு...

கலிலியோ - எஸ்.சிவதாஸ் -- நூல் அறிமுகம்

  20 வருடங்கள் கழிந்த பின்னும் அந்த வாசிப்பு இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது . மேட்டுப்பாளையத்திலிருந்து ஈரோடு நோக்கிய பேருந்து பயணத்தில் முழுக்க நின்றுகொண்டே வாசித்த அந்த புத்தகமும் அந்த வாசிப்பு அனுபவமும் பசுமையாக இருக்கிறது . அப்போது தான் நான் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்திருந்தேன் . என் தலைவன் தோழர் பேராசிரியர் நா . மணி அவர்கள் தான் இந்தப் புத்தகத்தை வாசித்து பாருங்க என கொடுத்தார் . அந்தப் புத்தகம் தான் அறிவியல் வெளியீட்டில் வந்திருந்த “ வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் ”. பேரா . எஸ் . சிவதாஸ் என்ற மலையாள எழுத்தாளரின் எழுத்து தமிழில் அழகிய மொழிபெயர்ப்பாக வந்திருந்தது . முதன்முதலில் அவர்கள் வெளியிட்ட அந்த வடிவம் (landscape) மிக சிறப்பானது . தமிழில் வழவழ தாளில் அப்படி ஒரு லேஅவுட்டில் நான் இதுவரையிலும் கூட எந்த ஒரு புத்தகத்தை யும் வாசித்ததே இல்லை . புத்தக வடிவமைப்பை விடவும் அந்த எழுத்து நடை வெகு சுவாரசியம் . கதைகளின் வழியே அறிவியல் சொல்லல் என சொல்லலாமா ? தெரிய...

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்...