Skip to main content

தண்டோராக்காரர்கள் {தென்னிந்தியாவில் தேசியவாத அரசியலும், பொழுதுபோக்கு ஊடகங்களும் 1880-1945} - சு. தியடோர் பாஸ்கரன்


தமிழ் வாசகர்களுக்கு தியடோர் பாஸ்கரன் என்ற பெயர் ஒன்று போதும் புத்தகத்தை எடுக்க. சினிமா குறித்ததாகட்டும், இயற்கை குறித்ததாகட்டும் இவர் ஒவ்வொரு புத்தகத்திற்கு செய்யும் ஆய்வுகள், எடுக்கும் தரவுகள் என எல்லாம் அந்த புத்தகத்திற்கு மிகவும் சிறப்பு சேர்ப்பவை.

எளிய மக்களை வெகுவாக கவரும் வெகுசன கலைகளாக உருவெடுத்த மேடை நாடகம், அதை தொடர்ந்து வந்த மௌன படங்கள், பின் வந்த முழுநீள பேசும் படங்கள் ஆகியவவை 1880இல் தொடங்கி 1945 வரைக்குமான காலகட்டத்தில் இந்திய மக்களை அக்கால தமிழகம் அல்லது மெட்ராஸ் ராஜதானி பகுதி மக்களை ஆட்கொண்ட விதமே இந்நூல். சும்மா எதுவும் சொல்வதில்லை, தியடோர் பாஸ்கரன் அவர்கள். ஒவ்வொரு தலைப்பின் பின்னும் தான் எடுத்தாண்ட தரவுகள் குறித்து ஒரு பெரும் பட்டியலே இடுகிறார். ஆம் மக்களே, The message bearers என்ற பெயரில் 1981 காலகட்டத்தில் தியடோர் பாஸ்கரன் அவர்களால் எழுதப்பட்ட இந்நூல் 35 வருடங்களுக்கு பின் தமிழ் வாசகர்களுக்கு அகநி பதிப்பகத்தின் நல்ல வடிவமைப்பில் வந்திருக்கிறது.

வெகு சுவாரசியமான பல்வேறு தகவல்கள் நூல் முழுக்க. “வெள்ளை வெள்ளை கொக்குகளா" என நாடக மேடையில் பாடி கே.பி. ஜானகியம்மாள் வெள்ளையர்களை வெரூட்டியதும், தியாக பூமி என்னும் திரைப்படம் வெள்ளையர்களால் தடை செய்யப்பட்டதுமே எனக்கு நினைவில் வரக்கூடிய சுதந்திரத்திற்கு முன்னான நாடக திரை தகவல்கள். ஆனால் இப்புத்தகம் படித்து முடித்த பின் எவ்வளவு கலாச்சார பண்பாட்டு தலையீடுகள் நாடகங்கள், மௌனப் படங்கள், திரைப்படங்கள் வழியாக தமிழக சென்னை ராஜதானி மக்களை இந்த காலக்கட்டத்தில் ஆட்கொண்டு இருக்கிறது என மலைப்பாக இருக்கின்றது.

முன்னது மேடை நாடகம், அதனைத் தொடர்ந்து மௌன படங்கள், பின்னாக பேசும் முழுநீள படங்கள், இறுதியாக விடுதலைகால படங்கள் என நான்கு பகுதிகளாக நூல் பிரிந்துள்ளது. ஒவ்வொரு பகுதி முடிவிலும் குறைந்தது 3 பக்கங்களுக்கு மிகாமல் தரவுகள். அதில் ஆசிரியரது உழைப்பு தெரிகிறது.

நவீன மேடை நாடகங்கள் எளிதாக மக்களை சென்றடைவதற்காக புராணங்களையே பேசுபொருளாக முதலில் கையில் எடுத்தன. இதில் சுவாரசியம் என்னவென்றால் இதே பாதையை தான் முழு நீளப் பேசும் படங்களும் எடுத்தன. சமூக நீதி, பாலின பேதம், தேசிய விடுதலை ஆகியவை குறித்தான பரீட்சார்த்த முயற்சிகளாக செய்யப்பட்ட சின்ன சின்ன தலையீடுகள் எப்படி பிரதான கருபொருட்களாக மாற்றம் கொண்டது என்பது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியது. வெறும் தலையாட்டல்கள், கைதட்டல்களோடு முடிந்துவிடுகின்ற கலைஞன் பார்வையாளன் உறவு கலை பார்வையாளனிடம் எழுப்பும் கேள்விகள் மூலமே தொடர்கிறது. பின் அந்த உறவும் அது தரும் இணக்கமுமே கலைகளின் வடிவத்தை உள்ளடக்கத்தை தீர்மானிக்கின்றன. ஆம், இப்படித்தான் என்பதற்கு சாட்சியாக புராணங்களை பேசுபொருளாக கொண்டு இயங்கிய மேடை நாடகங்கள் முழுநீள திரைப்படங்கள் பின் எவ்விதம் வெள்ளைக்காரர்களுக்கு தலைவலி கொடுக்க துவங்கியது என்பதையும் அதனால் கொண்டுவரப்பட்ட தணிக்கை முறை இவை குறித்து இப்புத்தகம் சிறப்பாக பேசுகிறது.

இராமர் சீதை காதையில் கதர் சட்டை மகிமையும், நாடகத்தின் பாடல்கள் பாட்டுப் புத்தகங்களாக வந்ததும், டூரிங் டாக்கீஸ் என்ற பெயர் வந்த விபரமும், கார் உதிரி பாகங்கள் விற்பனையாளர் படம் எடுத்ததும், சிறைக்கு பின் சுப்பிரமணியம் சிவா நடத்திய மேடை நாடகங்கள் - அரிசி விளைதல்-மகாபலிபுரம் சிற்பங்கள் - திருவிழாக்கள் - என இவையெல்லாம் மௌனப் படங்களின் கருப்பொருள்களாக ஆனதும்- மௌனப் படங்களை அடுத்து வந்த பேசும் படங்களில் ஸ்லைடு போட்டு பேசியதும் - வசனங்களை பேசுவதற்காக திரைக்கு முன்னதாக ஒருவர் பேசுவதும் - வாத்தியார் என்ற பெயர் ஆசிரியரோடு மட்டுமல்லாமல் கலைகளின் ஆசான் என்பதாக மாறிய கதையும் - மௌன படக் காலங்களில் ஸ்டூடியோ என்ற ஒன்றின்றி வெறும் வெட்டவெளியில் எடுக்கப்பட்டதும் - போர் காலங்களில் சினிமாக்களுக்கு அரசு ஆதர்வு எதிர்ப்பு - என சின்ன சின்ன சுவாரசியங்கள் செய்திகள் புத்தகத்தை வெகு சுவாரசியமாக கொண்டு செல்ல உதவுகின்றன.

அந்தந்த காலகட்டங்களில் அரசியல்வாதிகள் அல்லது ஆதிக்க அரசியலை எதிர்ப்பவர்களது ஆதரவும், தலையீடுமே கலைகளை வீரியமாக்கி இருக்கிறது, அர்த்தமுள்ள ஒன்றாக மக்களுக்கு நெருக்கமான ஒன்றாக மாற்றி இருக்கிறது. கடைசியாக, அதிகாரத்தை மிரட்டி இருக்கிறது, நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது, தடை செய்ய வைத்திருக்கிறது. வெகுசன மக்களின் பிரச்சனைகளை சமுக அவலங்களை எளிதாக மக்களின் மொழியில் சொல்கையில் அவை உத்வேகம் பெறுகின்றன, எழுச்சி கொள்கின்றன.

. மங்கையின் மொழிபெயர்ப்பு சிறப்பித்து சொல்ல வேண்டியது. எளிய வாக்கியங்களில் எளிதான வார்த்தை பிரயோகங்களில் செய்தியை வாசகர்களுக்கு கடத்துவதில் சிரமம் ஏதுமில்லை. தண்டோராக்காரர்கள் என்னும் பெயரும் வெகு பொருத்தம்.

சமூக அரசியல் கூறுகளை அலசி ஆராய்வதற்கான ஒரு பண்பாட்டு வழிமுறை ஒவ்வொரு சமூகத்திற்கும் தேவை என்பதாக ஒரு வரி வருகிறது. ஆம், அவை எளிய மக்களை தொடும் வகையில் இருந்தால் அக்கலையும் வளர போஷிக்கப்பட, அதனால் அக்கலை பேசும் பேசுபொருளும் மக்கள் உணர்வாக மாறும் என்பதுமே இப்புத்தகம்.

தண்டோராக்காரர்கள் {தென்னிந்தியாவில் தேசியவாத அரசியலும், பொழுதுபோக்கு ஊடகங்களும் 1880-1945} - சு. தியடோர் பாஸ்கரன், தமிழில் அ.மங்கை, அகநி வெளியீடு, விலை 220. பக்கங்கள் 239.






Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற