பட்டுக்கோட்டை பக்கத்தில் குறிச்சி என்றொரு கிராமம்। அங்கேதான் இந்த அதிசயம் நிகழ்கிறது. ஒரு அசலான பள்ளி. அசலான என்றால் குழந்தைகளை குழந்தைகளாக பாவித்து அவர்கள் அறிவூட்டி (படிப்பு புகட்டியல்ல), அவர்களை சமூகத்தோடு இணக்கமானவர்களாக, அதன் மேன்மைக்காக உழைப்பவர்களாக மாற்றுகின்ற வேலையை செய்கிறது அப்பள்ளி. இந்த வருடம் நாடெங்கும் தனியார் பள்ளிகளில் பள்ளிக் கட்டணம் அசாதாரணமாய் உயர்ந்துள்ளதை எடுத்து போராட்டம் நடந்து வருகிறது. இப்பள்ளியில் கட்டணமும் குறைவு. மேலும் கட்டணத்தை தவணைகளிலும் கட்டலாம், கட்ட முடியாதவர்களுக்கு நல்ல உள்ளங்களின் மூலமும் அவர்களின் படிப்பை தொடரவும் பள்ளியே உதவி செய்கிறது. பொருளாதாரத்தில் தாழ்ந்து இருந்த காலத்தும், தங்கள் திறமைகளால் அனைவரது கவனத்தையும் இப்பள்ளி குழந்தைகள் வெகுவாக கவர்ந்து வருகின்றனர்.மாணவ மணிகள் தங்கள் ஆசிரியரிடம் சிரித்து பேசி இயல்பாக உரையாடுவதை அதிசயத்துடனும் சற்று பொறாமையோடும் நான் கவனித்தேன். இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனம் நடத்துகிற பள்ளி அது. வகுப்பறைகள் யுக மௌனம் கலைத்து, மிக்க உயிர்ப்போடு இருக்கும் அந்த அதிசயத்தினை என்னவென்று சொல்வது.
வகுப்பறையின் உட்புற சுவர்கள் நிறத்தினை இழந்து குழந்தைகளின் கனவுகளை எழுத்தோவியங்களாக அனிந்து மகிழும் நிகழ்வு வேறு எந்த பள்ளியிலும் நிகழாதது. குழந்தைகள் படிப்போடு சேர்த்து பாட்டுக்களோடும் மண்ணின் மணம் மிக்க கலைகளோடும் வளர்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமா, அந்த குழந்தைகள் கதை சொல்லும் போது அவர்கள் உடல் அசைவுகள் கதையை நம்முன்னே திரையிடும். அநேகமாக அங்கு மட்டும்தான் குழந்தைகள் நாடகக் குழு என்ற ஒன்று தமிழகத்தில் இருக்கிறது.
ஐபீஇஏ பள்ளியின் கல்வியாளரும் என் ஆசானுமான(அவர் கோபிக்காதிருக்கனும்) தோழர் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஆலோசனையின் பேரில் புதுவை லாஸ்பேட்டையில் சென்ற வருடம் 2008 நவம்பர் 14 அன்று விவேகானந்தா பள்ளியில் குழந்தைகளுக்கான திரைப்பட விழாவில் அவர்கள் நாடகத்தை மேடையேற்றினோம். பூமி வெப்பமயமாதல் (global warming) என்கிற அவர்களின் நாடகம் சுமார் 500 குழந்தைகளின் ஆரவாரத்தோடும், கரிசல் மனிதர் கி.ரா அவர்களின் மனநிறைவோடும் நடந்தது. அத்தினத்திற்கு முன்பே அவர்களின் திறனை மிகவும் திறம்பட அவர்கள் பெருமையுற மேடையேற்றினார் அவரது பள்ளியில், ஜே.கே . அவரது பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல அப்பகுதியில் உள்ள எல்லா பள்ளிகளின் மாணாக்கர்கள் முன்னும் அவர்களது நாடகம் மிகுந்த கரவொலியோடு அப்பகுதி அதிர நடந்தது. அடுத்த சில தினங்களுக்கு அப்பகுதி முழுக்க அந்நாடகத்தை பற்றியே பேச்சு.
இதுவே அவரது சாதனைகள் தாம். பின் என்ன? அப்பள்ளி சென்ற இரு வருடங்களாக பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. விடுதலை வீரர் என்.சங்கரய்யா தொடங்கி வைத்த பாரம்பரியம் பின் எப்படி இருக்கும்? 16 பிள்ளைகளில் 16 பேரும் தேர்ச்சி. முதல் மதிப்பெண் பெற்றவர் பெயர் பிரித்வி(475). தோழர் வேணுகோபாலும் அவரது மனைவியும் (புலியை முறத்தால் விரட்டியடித்தவர்களின் பிரதநிதி) இராஜியும் சொன்னார்கள் அக்குழந்தை இன்னும் கூடுதல் மதிப்பெண் தனக்கு வந்திருக்க வேண்டும் என வருந்துவதாக. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கப்போறார்களாம். இன்றும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது எனது செல்போனுக்கு காலை 7:30 மணியிலிருந்தே எஸ்.எம்.எஸ், பல்வேறு நண்பர்களிடமிருந்தும் பள்ளியின் ரிசல்ட் கேட்டு வந்தது. அதில் பலரும் நான் போன முறை தகவல் சொன்ன பிறகே இப்பள்ளி குறித்து அறிந்தவர்கள். மிக்க மகிழ்ச்சி. உழைப்பின் அறுவடை காலத்தை வரவேற்க எத்தனை உள்ளங்கள் தயாராக உள்ளது?
2002ல் தொடங்கி அவர்களின் பரிசோதனைகள் வெற்றியாக பரிமளிக்கும் வித்தை அவர்கள் உழைப்பிற்கும், அர்ப்பணிப்பிற்கும் சான்றுதானே. இவ்வெற்றியின் பின் உள்ள அப்பள்ளியின் தாளாளர் தோழர் தனபால், பிற ஆசிரியர்கள், தோழர் கிருஷ்ணன், ஜேகே, இன்ன பிறரும் நம்மின் உளமார்ந்த பாராட்டுக்களுக்கு உரியவர்கள்.
பிற பிள்ளைகள் பெற்ற மதிப்பெண்கள் : தீபா(336), பாலகீர்த்தனா(330), ராஜதுரை(388), சிவராஜன்(436), சீனிவாஸ்(438), வெங்கடேஷ்(400), விக்னேஷ்வரன்(272), சரவணன் ஆர்(411), பாஸ்கர்(397), பாலாஜி(333), நவநீத்(394), வினோத்(351), விக்னேஷ்(319), தமிழரசு(333), பிரதீப்(421), பாலா(286), சரவணன் எஸ்.வி.(223), திருமேனி(401), சிவராஜன்(436), சரவணன்(421.
நாளை உலகின் நம்பிக்கை பாத்திரங்களாக, அன்பின் வடிவங்களாக, உண்மையின் உறைவிடங்களாக, சமத்துவ உலகை சமைக்க இருக்கும் இவர்களை நாம் உளமார பாராட்டுவோம். அது மட்டுமல்ல, இப்பள்ளி பற்றி பலரிடமும் பேசுவோம். காசி, இராமேசுவரம் போவது பாவத்தை தொலைக்க. குறிச்சி செல்வோம், குழந்தைகளை கண்டு நாம் மனிதம் காணுவோம். வெற்றி பாதையில் பள்ளி செல்லட்டும். அன்பின் வழி உலகம் அமையட்டும்.
நண்பர்களே, நான் இப்பள்ளியைப் பற்றி எழுதியதைவிடவும், விருதுநகர் பாண்டியன் கிராம வங்கி ஊழியரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட செயலரும், தன் வலைப்பூவில் பல்வேறு விஷயங்களை வைத்து நம்மை நாளும் மலைக்க வைக்கும் தோழர் ஜா. மாதவராஜின் இந்த வலைப்பூ முகவரியில்
மிக சிறப்பாக எழுதியுள்ளதையும் படியுங்களேன். http://mathavaraj.blogspot.com/2008/10/blog-post_30.html
வகுப்பறையின் உட்புற சுவர்கள் நிறத்தினை இழந்து குழந்தைகளின் கனவுகளை எழுத்தோவியங்களாக அனிந்து மகிழும் நிகழ்வு வேறு எந்த பள்ளியிலும் நிகழாதது. குழந்தைகள் படிப்போடு சேர்த்து பாட்டுக்களோடும் மண்ணின் மணம் மிக்க கலைகளோடும் வளர்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமா, அந்த குழந்தைகள் கதை சொல்லும் போது அவர்கள் உடல் அசைவுகள் கதையை நம்முன்னே திரையிடும். அநேகமாக அங்கு மட்டும்தான் குழந்தைகள் நாடகக் குழு என்ற ஒன்று தமிழகத்தில் இருக்கிறது.
ஐபீஇஏ பள்ளியின் கல்வியாளரும் என் ஆசானுமான(அவர் கோபிக்காதிருக்கனும்) தோழர் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஆலோசனையின் பேரில் புதுவை லாஸ்பேட்டையில் சென்ற வருடம் 2008 நவம்பர் 14 அன்று விவேகானந்தா பள்ளியில் குழந்தைகளுக்கான திரைப்பட விழாவில் அவர்கள் நாடகத்தை மேடையேற்றினோம். பூமி வெப்பமயமாதல் (global warming) என்கிற அவர்களின் நாடகம் சுமார் 500 குழந்தைகளின் ஆரவாரத்தோடும், கரிசல் மனிதர் கி.ரா அவர்களின் மனநிறைவோடும் நடந்தது. அத்தினத்திற்கு முன்பே அவர்களின் திறனை மிகவும் திறம்பட அவர்கள் பெருமையுற மேடையேற்றினார் அவரது பள்ளியில், ஜே.கே . அவரது பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல அப்பகுதியில் உள்ள எல்லா பள்ளிகளின் மாணாக்கர்கள் முன்னும் அவர்களது நாடகம் மிகுந்த கரவொலியோடு அப்பகுதி அதிர நடந்தது. அடுத்த சில தினங்களுக்கு அப்பகுதி முழுக்க அந்நாடகத்தை பற்றியே பேச்சு.
இதுவே அவரது சாதனைகள் தாம். பின் என்ன? அப்பள்ளி சென்ற இரு வருடங்களாக பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. விடுதலை வீரர் என்.சங்கரய்யா தொடங்கி வைத்த பாரம்பரியம் பின் எப்படி இருக்கும்? 16 பிள்ளைகளில் 16 பேரும் தேர்ச்சி. முதல் மதிப்பெண் பெற்றவர் பெயர் பிரித்வி(475). தோழர் வேணுகோபாலும் அவரது மனைவியும் (புலியை முறத்தால் விரட்டியடித்தவர்களின் பிரதநிதி) இராஜியும் சொன்னார்கள் அக்குழந்தை இன்னும் கூடுதல் மதிப்பெண் தனக்கு வந்திருக்க வேண்டும் என வருந்துவதாக. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கப்போறார்களாம். இன்றும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது எனது செல்போனுக்கு காலை 7:30 மணியிலிருந்தே எஸ்.எம்.எஸ், பல்வேறு நண்பர்களிடமிருந்தும் பள்ளியின் ரிசல்ட் கேட்டு வந்தது. அதில் பலரும் நான் போன முறை தகவல் சொன்ன பிறகே இப்பள்ளி குறித்து அறிந்தவர்கள். மிக்க மகிழ்ச்சி. உழைப்பின் அறுவடை காலத்தை வரவேற்க எத்தனை உள்ளங்கள் தயாராக உள்ளது?
2002ல் தொடங்கி அவர்களின் பரிசோதனைகள் வெற்றியாக பரிமளிக்கும் வித்தை அவர்கள் உழைப்பிற்கும், அர்ப்பணிப்பிற்கும் சான்றுதானே. இவ்வெற்றியின் பின் உள்ள அப்பள்ளியின் தாளாளர் தோழர் தனபால், பிற ஆசிரியர்கள், தோழர் கிருஷ்ணன், ஜேகே, இன்ன பிறரும் நம்மின் உளமார்ந்த பாராட்டுக்களுக்கு உரியவர்கள்.
பிற பிள்ளைகள் பெற்ற மதிப்பெண்கள் : தீபா(336), பாலகீர்த்தனா(330), ராஜதுரை(388), சிவராஜன்(436), சீனிவாஸ்(438), வெங்கடேஷ்(400), விக்னேஷ்வரன்(272), சரவணன் ஆர்(411), பாஸ்கர்(397), பாலாஜி(333), நவநீத்(394), வினோத்(351), விக்னேஷ்(319), தமிழரசு(333), பிரதீப்(421), பாலா(286), சரவணன் எஸ்.வி.(223), திருமேனி(401), சிவராஜன்(436), சரவணன்(421.
நாளை உலகின் நம்பிக்கை பாத்திரங்களாக, அன்பின் வடிவங்களாக, உண்மையின் உறைவிடங்களாக, சமத்துவ உலகை சமைக்க இருக்கும் இவர்களை நாம் உளமார பாராட்டுவோம். அது மட்டுமல்ல, இப்பள்ளி பற்றி பலரிடமும் பேசுவோம். காசி, இராமேசுவரம் போவது பாவத்தை தொலைக்க. குறிச்சி செல்வோம், குழந்தைகளை கண்டு நாம் மனிதம் காணுவோம். வெற்றி பாதையில் பள்ளி செல்லட்டும். அன்பின் வழி உலகம் அமையட்டும்.
நண்பர்களே, நான் இப்பள்ளியைப் பற்றி எழுதியதைவிடவும், விருதுநகர் பாண்டியன் கிராம வங்கி ஊழியரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட செயலரும், தன் வலைப்பூவில் பல்வேறு விஷயங்களை வைத்து நம்மை நாளும் மலைக்க வைக்கும் தோழர் ஜா. மாதவராஜின் இந்த வலைப்பூ முகவரியில்
மிக சிறப்பாக எழுதியுள்ளதையும் படியுங்களேன். http://mathavaraj.blogspot.com/2008/10/blog-post_30.html
Comments