Skip to main content

சாதனை தொடர்கிறது.. .

பட்டுக்கோட்டை பக்கத்தில் குறிச்சி என்றொரு கிராமம்। அங்கேதான் இந்த அதிசயம் நிகழ்கிறது. ஒரு அசலான பள்ளி. அசலான என்றால் குழந்தைகளை குழந்தைகளாக பாவித்து அவர்கள் அறிவூட்டி (படிப்பு புகட்டியல்ல), அவர்களை சமூகத்தோடு இணக்கமானவர்களாக, அதன் மேன்மைக்காக உழைப்பவர்களாக மாற்றுகின்ற வேலையை செய்கிறது அப்பள்ளி. இந்த வருடம் நாடெங்கும் தனியார் பள்ளிகளில் பள்ளிக் கட்டணம் அசாதாரணமாய் உயர்ந்துள்ளதை எடுத்து போராட்டம் நடந்து வருகிறது. இப்பள்ளியில் கட்டணமும் குறைவு. மேலும் கட்டணத்தை தவணைகளிலும் கட்டலாம், கட்ட முடியாதவர்களுக்கு நல்ல உள்ளங்களின் மூலமும் அவர்களின் படிப்பை தொடரவும் பள்ளியே உதவி செய்கிறது. பொருளாதாரத்தில் தாழ்ந்து இருந்த காலத்தும், தங்கள் திறமைகளால் அனைவரது கவனத்தையும் இப்பள்ளி குழந்தைகள் வெகுவாக கவர்ந்து வருகின்றனர்.மாணவ மணிகள் தங்கள் ஆசிரியரிடம் சிரித்து பேசி இயல்பாக உரையாடுவதை அதிசயத்துடனும் சற்று பொறாமையோடும் நான் கவனித்தேன். இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனம் நடத்துகிற பள்ளி அது. வகுப்பறைகள் யுக மௌனம் கலைத்து, மிக்க உயிர்ப்போடு இருக்கும் அந்த அதிசயத்தினை என்னவென்று சொல்வது.

வகுப்பறையின் உட்புற சுவர்கள் நிறத்தினை இழந்து குழந்தைகளின் கனவுகளை எழுத்தோவியங்களாக அனிந்து மகிழும் நிகழ்வு வேறு எந்த பள்ளியிலும் நிகழாதது. குழந்தைகள் படிப்போடு சேர்த்து பாட்டுக்களோடும் மண்ணின் மணம் மிக்க கலைகளோடும் வளர்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமா, அந்த குழந்தைகள் கதை சொல்லும் போது அவர்கள் உடல் அசைவுகள் கதையை நம்முன்னே திரையிடும். அநேகமாக அங்கு மட்டும்தான் குழந்தைகள் நாடகக் குழு என்ற ஒன்று தமிழகத்தில் இருக்கிறது.

ஐபீஇஏ பள்ளியின் கல்வியாளரும் என் ஆசானுமான(அவர் கோபிக்காதிருக்கனும்) தோழர் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஆலோசனையின் பேரில் புதுவை லாஸ்பேட்டையில் சென்ற வருடம் 2008 நவம்பர் 14 அன்று விவேகானந்தா பள்ளியில் குழந்தைகளுக்கான திரைப்பட விழாவில் அவர்கள் நாடகத்தை மேடையேற்றினோம். பூமி வெப்பமயமாதல் (global warming) என்கிற அவர்களின் நாடகம் சுமார் 500 குழந்தைகளின் ஆரவாரத்தோடும், கரிசல் மனிதர் கி.ரா அவர்களின் மனநிறைவோடும் நடந்தது. அத்தினத்திற்கு முன்பே அவர்களின் திறனை மிகவும் திறம்பட அவர்கள் பெருமையுற மேடையேற்றினார் அவரது பள்ளியில், ஜே.கே . அவரது பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல அப்பகுதியில் உள்ள எல்லா பள்ளிகளின் மாணாக்கர்கள் முன்னும் அவர்களது நாடகம் மிகுந்த கரவொலியோடு அப்பகுதி அதிர நடந்தது. அடுத்த சில தினங்களுக்கு அப்பகுதி முழுக்க அந்நாடகத்தை பற்றியே பேச்சு.

இதுவே அவரது சாதனைகள் தாம். பின் என்ன? அப்பள்ளி சென்ற இரு வருடங்களாக பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. விடுதலை வீரர் என்.சங்கரய்யா தொடங்கி வைத்த பாரம்பரியம் பின் எப்படி இருக்கும்? 16 பிள்ளைகளில் 16 பேரும் தேர்ச்சி. முதல் மதிப்பெண் பெற்றவர் பெயர் பிரித்வி‍(475). தோழர் வேணுகோபாலும் அவரது மனைவியும் (புலியை முறத்தால் விரட்டியடித்தவர்களின் பிரதநிதி) இராஜியும் சொன்னார்கள் அக்குழந்தை இன்னும் கூடுதல் மதிப்பெண் தனக்கு வந்திருக்க வேண்டும் என வருந்துவதாக. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கப்போறார்களாம். இன்றும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது எனது செல்போனுக்கு காலை 7:30 மணியிலிருந்தே எஸ்.எம்.எஸ், பல்வேறு நண்பர்களிடமிருந்தும் பள்ளியின் ரிசல்ட் கேட்டு வந்தது. அதில் பலரும் நான் போன முறை தகவல் சொன்ன பிறகே இப்பள்ளி குறித்து அறிந்தவர்கள். மிக்க மகிழ்ச்சி. உழைப்பின் அறுவடை காலத்தை வரவேற்க எத்தனை உள்ளங்கள் தயாராக உள்ளது?

2002ல் தொடங்கி அவர்களின் பரிசோதனைகள் வெற்றியாக பரிமளிக்கும் வித்தை அவர்கள் உழைப்பிற்கும், அர்ப்பணிப்பிற்கும் சான்றுதானே. இவ்வெற்றியின் பின் உள்ள அப்பள்ளியின் தாளாளர் தோழர் தனபால், பிற ஆசிரியர்கள், தோழர் கிருஷ்ணன், ஜேகே, இன்ன பிறரும் நம்மின் உளமார்ந்த பாராட்டுக்களுக்கு உரியவர்கள்.
பிற பிள்ளைகள் பெற்ற மதிப்பெண்கள் : தீபா(336), பாலகீர்த்தனா(330), ராஜதுரை(388), சிவராஜன்(436), சீனிவாஸ்(438), வெங்கடேஷ்(400), விக்னேஷ்வரன்(272), சரவணன் ஆர்(411), பாஸ்கர்(397), பாலாஜி(333), நவநீத்(394), வினோத்(351), விக்னேஷ்(319), தமிழரசு(333), பிரதீப்(421), பாலா(286), சரவணன் எஸ்.வி.(223), திருமேனி(401), சிவராஜன்(436), சரவணன்(421.

நாளை உலகின் நம்பிக்கை பாத்திரங்களாக, அன்பின் வடிவங்களாக, உண்மையின் உறைவிடங்களாக, சமத்துவ உலகை சமைக்க இருக்கும் இவர்களை நாம் உளமார பாராட்டுவோம். அது மட்டுமல்ல, இப்பள்ளி பற்றி பலரிடமும் பேசுவோம். காசி, இராமேசுவரம் போவது பாவத்தை தொலைக்க. குறிச்சி செல்வோம், குழந்தைகளை கண்டு நாம் மனிதம் காணுவோம். வெற்றி பாதையில் பள்ளி செல்லட்டும். அன்பின் வழி உலகம் அமையட்டும்.


நண்பர்களே, நான் இப்பள்ளியைப் பற்றி எழுதியதைவிடவும், விருதுநகர் பாண்டியன் கிராம வங்கி ஊழியரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட செயலரும், தன் வலைப்பூவில் பல்வேறு விஷயங்களை வைத்து நம்மை நாளும் மலைக்க வைக்கும் தோழர் ஜா. மாதவராஜின் இந்த வலைப்பூ முகவரியில்
மிக சிறப்பாக எழுதியுள்ளதையும் படியுங்களேன். http://mathavaraj.blogspot.com/2008/10/blog-post_30.html

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற