ஜோல்னா பை,அதை பயன்படுத்தும் எவருக்கும் மூன்றாம் கை. அவர் நிச்சயமாக பத்திரிகையாளர், இல்லை இல்லை கம்யூனிசஸ்ட் என்று அது கொடுக்கும் முகவரிகள். முதன் முதலில் எங்கள் வீட்டில் அதை பயன்படுத்தியது என் அண்ணன்தான். அநேகமாக அவன் தன் முதன் சம்பளத்தில் முதலாய் அதையே வாங்கியிருக்க வேண்டும். அந்த நாள். முதன் முதலாய் அவன் வீட்டிற்கு அதை ஒரு இரவு கொண்டு வருகிறான். அடடே! சத்தியமாக அன்றுதான் அவன் என்னைவிட பெரியவன் என்று நினைத்தேன். கம்பீரமாக, ஒரு தேஜஸுடன் அவன் அன்று இருந்தான் என்றே நினைக்கிறேன். பின் ஒரு நாளில் தெரிந்து கொண்டேன், அவனுக்கு அப்பை கிடைத்ததற்கு காரணம் சிவராமன் தோழர். BEFI சங்கம் அண்ணனுக்கு கொடுத்த அடையாள அட்டை அப்பை என்று தோழர் சிவராமனை (வெகுநாட்களுக்கு பின்) கண்டபோது தெரிந்து கொண்டேன். பின் வெண்தாடியில் எப்போதும் புன்னகை வழியவிடும் கியூபா போய் விட்டுவந்த தோழர் கிருஷ்ணனும், ஹாஹாஹா என்று அனைத்து அங்கங்களும் அதிர சிரிக்கும் தோழர் வேணுவும் என் அவதானிப்பை அறுதி செய்தனர்.
இன்னும் இருக்கு ஜோல்னாவோடு என் ஜோர் பயணம்.............
Comments
ஏன் ஏற்கெனவே செய்த என் பதிவு உங்கள் பிளாக்கில் இடம் பெறவில்லை?
முகப்பில் Bank Workers Unity இதழில் இடம்பெற்ற கட்டுரையை வெளியிட்டு எங்களை
கவுரவப்படுத்தியுள்ளமைக்கு எங்கள் நெகிழ்ச்சி கலந்த நன்றி.
வாழ்த்துக்களுடன்
எஸ் வி வேணுகோபாலன்