"வணக்கம் தோழர்". "வணக்கம், எப்படி இருக்கீங்க". "டீ சாப்பிடலாமா" "சரி தோழர். இந்த சோம்நாத் சொன்னதை பார்த்தீகளா" செல்போனில் எவரோ அழைக்க, பார்த்துவிட்டு கட் செய்தேன். "என்னது தோழர், அவரது கட்சியை விட்டு தூக்கிட்டோம்ல, பின்ன என்னவாம்" "அட ஏன் தோழர், அவர் சொல்றாரு, கட்சியோட இந்த தோல்விக்கு பிரகாஷ் காரட்தான் காரணமாம்" "என்னங்க, இது. ஏன் இப்படியெல்லாம் உளறிகொட்டுகிறார்" இம்முறையும் செல்போனில் எவரோ அழைக்க, பார்த்துவிட்டு கட் செய்தேன். "இதுகூடவா தெரியாது, கம்யூனிஸ்ட் கட்சியில் கூட்டு தலைமைதானே முடிவு செய்வது, தனி நபர் எப்படி பொறுப்பாக முடியும்." "அப்படி சொல்லுங்க தோழர், அந்த ஆள் எப்படி இத்தனை வருஷமா கட்சியில் இருந்தார், எப்படி கட்சி இப்படிபட்ட ஆளையெல்லாம் வைச்சுக்கிட்டுது" மீண்டும் செல்போனில் எவரோ அழைக்க, பார்த்துவிட்டு கட் செய்தேன். "யார் தோழர், என்ன முக்கியமோ கட் பண்றீங்க" "முக்கியம் கிக்கியம்லாம் இல்ல தோழர், எங்க வூட்டம்மாதான். வேறு வேலை இல்ல, ஊருக்கு போனாலும் நாளைக்கு மூணு நாலு தடவை போன...