Skip to main content

யானைகள் அழியும் பேருயிர்


தமிழ்நாட்டு அறிஞர், எழுத்தாளர் பலர், மற்ற துறைகலில் ஆர்வம் காட்டுமளவுக்கு விலங்கியல் மற்றும் இயற்கை வரலாறு குறித்து ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில், அவையே மனித நல்வாழ்வின் பொதுத் தேவை என் இன்னும் அவர்களால் உணர்ந்து கொள்ளப்படவில்லை போலும். குறிப்பாக 'டிஸ்கவரி, அனிமல் பிணானட், நேஷனல் ஜியாகரஃபிக், போகோ போன்ற சானல்கள் தமிழக வீடுகளுக்குள் வந்துவிட்ட பிறகும்கூட, நமது சிந்தனைகளின், செயல்பாடுகளின் நிலை மிகவும் வருந்ததக்கதே. நம்மில் உணர்வு கொண்டோரை கேள்விக்குள்ளாக்கி, புரட்டிப் போடும் மேற்கண்ட காட்சிப்படிம சானல்கள் குழந்தைகளுக்கானது என்று நமது 'பெரியவர்கள்' சொல்வதும் மிகுந்த வேதனைக்குரியது. ........................

ஒரு 40 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்த வனப்பகுதி ஒன்று மனிதத் தலையீட்டால் அழியும் போது 1500 வகை பூக்கும் செடி, கொடிகளும், 700 வகை மரங்களும், 150 வகைப் பூச்சி, புழுக்களும், 100 வகை ஊர்வனவும், 60 வகை நீர் நில வாழ்விகளும் அழிந்து போகின்றன என்றும், ஒரு மழைக்கானக மரம் 400 வகைப் பூச்சிகளுக்க்கு வாழிடமாக இருக்கிறது என்றும் ஐ.நாவின் சுற்றுச் சூழல் அறிவிக்கை ஒன்று சுட்டிக் காட்டுகிறது. இதையெல்லாம் சமன் செய்திட மேற்கண்டொர் மனிதரை நம்புகிறார்களா? அல்லது கடவுளையா?

காலங்காலமாக ஆங்கிலம் தெரிந்தவர், ஆங்கிலம் தெரியாதவரை ஏய்த்து வருவது அல்லது ஆளுமை செலுத்துவது இன்னும் மேலோங்கியே இருக்கிறது. இது இயற்கையியல் துறையிலும் உச்சத்திலிருப்பது, உண்மையைத் தேட விரும்பும் சாதாரண மக்களுக்கு ஒரு பெரும் தடைகல்லாகும். ஆகவே மக்களின் இயர்கையான வேகத்தைக் கட்டுப்படுத்த அதிகார வர்க்கம் எப்போதும் ஒரு அந்நிய மொழியையே அறிவியலிலும் பின்பற்றுவது கூரிய உள்நோக்கம் உடையதே. ..................


............... இயற்கை நேயம் என்பது மேட்டுகுடி மக்களின் பொழுதுபோக்கு அல்ல, பொது மக்களின் புறச்சூழலறிவு என்பதை புரியவைக்க வேண்டும். அதற்கேற்றவாறு புழங்க கலைச்சொற்களை மீட்க வேண்டும், உயிரினங்களின்றி நாமில்லை என்ற கணக்கீட்டை மக்களும் உணர்த்த வேண்டும், முறையாக அவை நுகரப்பட வேண்டும், இவற்றுக்காக பாடுபட நாம் அணியமாக வேண்டும் என்பனவே இந்நூலின் அடித்தளம்.

"எழுத்தைக் குறை, பட்த்தை அதிகரி' என்ற பழைய ஐரோப்பியக் கருத்தியலை தமிழில் நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் இந்நூல், அரிய நூலல்ல என்றாலும் தமிழ்ச் சூழலில் ஒரு அரிய முயற்சியாகும். 16 தலைப்புகளில் அன்றைய, இன்றைய சூழல்களின் பன்முகப் பார்வையோடு, யானைகள் பற்றிய ஒரு கருத்தமைப்பாக, எல்லோரும் உயிரினங்கள் மீது ஒரு மறுபார்வை பெற வேண்டும் என்ற நோக்கில் இதை உருவாக்கியிருக்கிறோம். பறவையையோ, யானையையோ, மற்ற எந்த ஒரு உயிரினத்தையோ, நினைத்தவுடன், புதிய படிமங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் இந்நூல் வழியே மக்களை வேண்டுகிறோம். ஏனெனில் வரலாற்றுக் காலம் முதல் இன்று வரை, மிகப் பலமுறை யானை, புலிகளை மனிதர்களே கொண்று வருகின்றனர். மாறாக சில முறைகளே யானையும், புலியும் மனிதரைக் கொன்றிருக்கின்றன. ..............

யானைகள் அழியும் பேருயிர்
இயற்கை வரலாற்றுச் செவ்வியல்
ச.முகமது அலி க. யோகானந்த்
மலைப்படுகடாம் பதிப்பகம், 65, வேளாங்கண்ணி காரமடை சாலை, மேட்டுப்பாளையம் - 641 301.விலை : 100.00

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

ஆனை மலை - வாசிப்பு அனுபவம்

அடர் காட்டுக்குள், பழங்குடிகளின் வாழ்வோடு உடன் பயணம் செய்ய வாய்ப்பு கொடுத்த உங்கள் நாவலுக்கு மிக்க நன்றி. எல்லாம் மரமே, பறப்பன எல்லாம் காக்கா, குருவியே என மட்டுமே சுட்டியிருந்த எனக்கு காடு என்பதுள்ளான வாழ்வு ஒன்று உண்டு என்பதை நக்கீரன் காடோடியில் உணர்த்தியிருந்தார். அதை மீண்டும் மீண்டும் நினைவூட்டியதற்கு உங்களுக்கு பெரு நன்றி தோழர். காடு என்பதற்குள்ளும் ஒரு உலகம் இயங்குகிறது, சென்னையின் நதிக்கரையோரம் வாழ்ந்திடும் குடும்பங்கள் / அவ்வளவாக கவனம் பெறாத ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள(வைக்கப்பட்டுள்ள) அந்த கீழ்த்தட்டு மக்கள் வாழிடங்கள் மத்தியிலும் ஒரு உலகம் இயங்குகிறது, அங்கிருக்கும் மனிதர்கள் மட்டுமே அல்ல உயிரினங்களும் முக்கியமே, வேறெங்கும் அவ்வளவாக காணக் கிடைத்திராத மனிதர்கள்-விலங்கினங்கள் இடையேயான பரஸ்பர உறவு, பேச்சுவார்த்தை என்பது இவ்விடங்களில் ஆழமாக, அழகாக இருக்கிறது என சாதாரணர்களுக்கு உரைத்திடவே ஒரு படைப்பு தேவைப்படுகிறது. அவ்வகையில் இப்படைப்பு ‘ஆனைமலை” முக்கியத்துவம் பெறுகிறது என நினைக்கிறேன். இந்நாவலில் கூடுதலாக மனிதர்கள்-விலங்குகள்-மரங்கள்/செடிகள் என முக்கோண ஒரு உறவாடலும், உரையாடலு...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச ப...

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் - நூல் அறிமுகம்

 கொரானா ஊரடங்கு காலத்தில் புத்தகங்கள் வாய்ப்பு கிடைத்தும் பல்வேறு காரணங்களால் புத்தக வாசிப்பு என்பது ஒன்றும் அத்தனை ஜுரூராக நடக்கவில்லை. அவ்வப்போது படிக்க வேண்டும் படித்தே ஆக வேண்டும் என எனக்குத் தோன்றியது என சில மட்டுமே படித்தேன். அப்படி ஜனவரி 2020 புத்தக கண்காட்சியில் வாங்காமல் விட்டுவிட்ட ஒரு புத்தகம் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் அவர்களின் நினைவுகளும் நிகழ்வுகளும் புத்தகம். ரிவோல்ட் வெளியீடு. புலம் டிசைன். வெண்மணி படுகொலை அதையொட்டிய நிகழ்வுகள் என்பதாலே புத்தகம் வெகு விரைவாக தடதடத்து செல்கிறது. தொய்வே இல்லை. ஓரிரவு பொழுதில் படித்து முடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது இப்புத்தக வாசிப்பு. பாரதி புத்தகாலயத்தாரின் வெளீயீட்டில் வந்த வெண்மணி : வாய்மொழி வரலாறு, தென்பரை முதல் வெண்மணி வரை முதலான புத்தகங்களின் வரிசையில் ரிவோல்ட் வெளியீட்டின் இப்புத்தகமும் படிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வெண்மணி படுகொலை வரலாற்று கொடும்நிகழ்வில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் என்பதோடு மற்றொன்று கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் ஆகியோரின் பங்களிப்பும் என மும்முனைகள் இருக்கின்றன. இதில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய இயக்கங...