Skip to main content

Posts

Showing posts with the label பகத்சிங்

வாழும் மூதாதையர்கள் - தமிழகப் பூர்வகுடி மக்கள் அறிமுகம்

இரண்டு முக்கிய முன்முடிவுகள் உடைபடுவதில் இருந்து "வாழும் மூதாதையர்கள்" நூல் தொடங்குகிறது. “காட்டில் இருந்து அவர்களை சமதளத்தில் இறக்கி அவர்களை நாகரிகமயப்படுத்த வேண்டும்" என்ற குரலில் ஒரு அபத்தம் இருப்பது இப்புத்தகம் படிக்கையில் தெரிய வரும். அதே சமயம் "மனிதர்களற்ற காடுகள் அல்லது காடுகள் காட்டு விலங்குகளுக்காவே " என்ற குரலின் பின் இருக்கும் ஆபத்தை முகவுரையிலேயே விளக்கி இப்புத்தகத்தை அறிமுகம் செய்கிறார் நூலாசிரியர்.  நூலாசிரியரின் இந்தக் கவலையே இப்புத்தகத்தில் தமிழக பழங்குடிகள் குறித்த ஒரு விரிந்த அறிமுகத்தை தமிழ் சமூகத்திற்கு செய்கிறது என புரிந்துகொள்ளலாம். பழங்குடிகள் குறித்த அறிவாக தமிழ் சமூகத்தில் என்ன இருக்கிறது?! பழங்குடிகள் அநாகரிகமாக சொன்னால் காட்டுமிராண்டிகள், நாகரிகமாக காட்டுவாசிகள் என்பதாக சொன்னாலும் அவர்கள் அறிவற்ற மூடர்கள், விதி வந்ததே வாழ்க்கை என வாழ்பவர்கள், சமதள மக்களிடம் பயந்து இருப்பவர்கள், ஆபத்தானவர்கள், நாகரிக வாழ்வு குறித்த எந்தவித நாட்டமும் இல்லாதவர்கள் என்பதாக இருப்பதாக கொள்ளலாம். இவை அத்தனையும் பொய் என்பதனையும் அவர்களும் முன்னேற்றம் ...

பகத்சிங் கடிதங்கள்

கீழ்கண்ட கடிதம், அவர் தமது சகோதரர் குல்தாருக்கு எழுதிய கடைசிக் கடிதம். மத்திய சிறை, லாகூர்/ 3 மார்ச்சு 1931. அன்புள்ள குல்தாருக்கு, உன்னுடைய கண்களில், இன்று கண்ணீரைக் கண்டதும் நான் பெரிதும் மனத்துய‌ரம் அடைந்தேன். இன்று நீ பேசியதில் வேதனை நிரம்பியிருந்தது. உன் கண்ணீரை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. இளைஞனே! மன உறுதியுடன் படித்து அறிவை வளர்த்துக்கொள். உடல்நலத்திலும் கவனமாக இரு; நான் வேறென்ன சொல்வது? உலகின் நாட்டமெல்லாம் கூட்டிக்கழித்து லாப நஷ்டம் பார்ப்பதிலே செல்லுகையில், எங்கள் நாட்டமெல்லாம் எட்டிடுதல் இன்னல்களின் உச்சகட்டம். உலகைத் தூற்றோம் நாம், விதியைப் பழியோம் நாம் மலைபுரண்டிடினும் நிலைகுலையோம் நாம்; சில கணமே வாழ்ந்திருவேன் உலகீரே! விடியல் தீபம் நான், அணையவே விழைகின்றேன் விட்டுச் செல்கிறேன் எண்ணத்தின் மின்னல்கள் மண்பாண்டமிது மண்ணிலே கலந்திடுமே. நல்லது, விடைபெறுகிறேன்; நாட்டு மக்களே; மகிழ்ச்சியாக இருங்கள்; நான் என் பயணத்தில் செல்கிறேன்; தைரியமாக இருக்கவும், நமஸ்தே! உனது சகோதரன், பகத் சிங் ஆதாரம்: எப்போதாவாது எண்ணிப்பாருங்கள்... (தியாகச் செம்மல்களின் கடிதங்கள் ), மொழியாக்கம் :...