Skip to main content

Posts

Showing posts with the label கல்வி

புதுவையில் பாரதி புத்தகாலயம் – மாற்றுக் கல்விக்கான முதல் வாசிப்பு முகாம்

புதுவையில் பாரதி புத்தகாலயம் –  மாற்றுக் கல்விக்கான  முதல் வாசிப்பு முகாம் 23.08.2014. அன்று ஆகஸ்ட் 23 சனிக்கிழமை. புதுவையில் முதல்முறையாக பாரதி புத்தகாலயம், புதுவை அறிவியல் இயக்கம் மற்றும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைந்து நடத்தும் ஆசிரியர்களுக்கான் வாசிப்பு முகாம் NKC அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி, குருசுக்குப்பத்தில் நடைபெற்றது. மதியம் 0300 மணி என்று சொல்லியிருந்தோம். உருவையாறு பள்ளி ஆசிரியர் சதீஷ், பாரதி புத்தகாலய ராம்கோபால், புதுவை அறிவியல் இயக்கத்தின் விஜயமூர்த்தி, முருகவேல், ஆசிரியர் விசாகன் என எல்லாரும் காத்திருந்தோம். நேரங்கள் கழிய கழிய ஒன்று, இரண்டு என ஆசிரியர்கள் வருகையில் நம்பிக்கையற்று நின்றிருந்த எங்களுக்கு முகாம் ஆரம்பிக்கையில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வந்தது நம்பிக்கையும் மகிழ்வினையும் தந்தது. ஆசிரியர் சதீஷ் தொடங்க, வரிசையாய் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களை தாங்களே அறிமுகப்படுத்தினார்கள். விரைவில் சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவரும், பேராசிரியருமான நா. மணி அவர்கள் எழுதிய “பள்ளிக்கூட தே...

எனக்கு ஏன் இல்லை கல்வி - களப்பணிக்கான கையேடு

எப்போதும் போலத்தான் அன்றும் அபிகுட்டி ஒரு கேள்வி கேட்டது. ஒரு போக்குவரத்து சிக்னலில் வண்டியுடன் காத்திருந்த அந்த அரும்பொழுது. “ஏம்ப்பா, அவர் யாரு? ”, “ அவரா பிச்சைக்காரர்ம்மா ”. உடனே அடுத்த கேள்வி, “அவர் ஏன் இப்படி இருக்காரு ”, “ அவர் அப்படித்தான்ம்மா, அவருக்கு வேலை செய்ய முடியாது அதனாலதான் மற்றவங்ககிட்ட காசு வாங்கி அந்தக் காசுல சாப்பாடு வாங்கி சாப்பிடுவார்ம்மா ”.  இப்படித்தான் குழந்தைகள் ஒரு கேள்விக்கு அவர்கள் திருப்தியடைகிற பதிலை நாம் சொல்லிவிட்டால் கேள்விகளை சரம்சரமாக தொடுப்பார்கள். அப்படி தொடரும் கேள்விகள் நம்மால் விடை காண இயலாவிட்டாலோ அல்லது அவர்களுக்கு புரியும்படி சொல்லத் தெரியாவிட்டாலோ பட்டென்று அறும்.  “அவர் எப்பப்பா வேலை முடிப்பாரு, அவர் வீடு எங்கிருக்கு, எனத் தொடங்கி அவர் பசங்கள் எல்லாம் எந்த ஸ்கூல்ல படிப்பாங்க? என்ற கேள்விக்கு என்ன சொல்வது என விளங்காமல் நான் விழி பிதுங்கி நிற்க அபிக்குட்டி ” ச்சே, போப்பா“ என்ற ஒற்றை முனகலுடன் கேள்விகளை அப்போதைக்கு முடித்துக்கொண்டது. எனக்குத்தான் மிகப் பாவமாக போய்விட்டது. ஆமாங்க, அவருக்கு குடும்பம் என்ற ஒன்று இருக்கிறதா? அப்ப...

காட்டிலே ஒரு பள்ளி - நீதிக்கதை!!

,e;jpahtpy; jw;NghJ cs;s fy;tp epiyia nrhy;tjhf ePq;fs; epidj;jhy; mjw;F ehd; nghWg;gy;y Tpyq;Ffspd; gs;sp – xU ePjpf;fij Kd;ndhU fhyj;jpy; fhl;by; xU rpy tpyq;Ffs; mth;fsJ r%fj;jpy; ngUfp tUk; rpf;fy;fis Ghpe;J nfhs;s KbntLj;J $l;lk; Nghl;L xU gs;sp njhlq;FtJ vd KbntLj;jd. gs;spapy; ghlj;jpl;lkhf XLjy;> VWjy;> ePe;Jjy;> gwj;jy; vd vy;yh tpyq;Ffspd; nghJthd Fzq;fNs ,Uf;fl;Lk; vd KbT nra;jd. midj;J tpyq;FfSk; midj;J ghlq;fSk; fw;f Ntz;Lk; vd KbthdJ. thj;J Mrphpaiutpl kpf ed;whf ePe;jp “ rpwg;G ” vd Njh;r;rp fpNuLk; ngw;wJ. gwg;gjpYk; mt;thNw. Mdhy; vd;d nrhy;y> thj;jpdhy; XLtjpy; Nrhgpf;f Kbatpy;iy. mjdhy; ghtk;> mJ gs;sp tpl;Lk; rpwpJ Neuk; XLtjpy; gapw;rp vLf;f Ntz;b ,Ue;jJ. vjpy; rpwg;ghf ,y;iyNah mjpy; jhNd gapw;rp vLf;f Ntz;;Lk;. XLk; gapw;rpapy; $Ljy; ftdk; nrytopf;f> nrytopf;f mJ jd;Dila tiyg;gpd;dy; fhy;fs; NrjKw> ePe;Jtjpy; “ Rkhh; ” fpNuNl vLf;f Kbe;;jJ. Mdhy; thj;ij jtpu NtW ahUk; mJ Fwpj;J ftiyg;gltpy;iy.      ...

பாவ்லோ பிரையரேவும் அறிவொளி இயக்கமும்

பாவ்லோ பிரையரே - மிக சமீபகாலமாக பாரதி புத்தகாலயத்தின் புண்ணியத்தில் தமிழகத்தில் ஒரு சில வாசகர்களுக்கும், பல பார்வையாளர்களுக்கும் ஒரு அறிமுகமான பெயராக இருக்கிறார். வாழ்த்துக்கள்.  அவரது ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி நூலினை தொடர்ந்து அவர் இந்தியாவில் எப்போதோ நிகழ்த்திய உரையாடலினை (கவனிக்கவும், உரையல்ல!) சற்றும் சளைக்காமல், ஒரே நேரத்தில் தமிழிலும், அதன் ஆங்கில மூலத்தினையும், விற்பனை சந்தை குறித்து பயமோ தயக்கமோ இல்லாமல், சமூக கடமையாக மட்டுமே கருதி அச்சிட்டு வெளியிடும் அவர்களின் பணி சிறக்க நாம் அனைவரும் அப்புத்தகங்களை, “இருளும் ஒளியும்” நூலில் தோழர் ச. தமிழ்செல்வன் சொல்வதைப் போல தோள் வலிக்க ஏந்தி பொதுவெளியில் சேர்ப்போம். அது ஒன்றே நம் கடமை. நிற்க. பாவ்லோ பிரையரே குறித்து இன்னமும் இன்னமும் ஏதாவது செய்திகள் கிடைக்காதா, அவை நமக்கு ஏதேனும் சொல்லிச் செல்லாதா என ஒரு அதிகாலை வேளையில் இணையத்தை துழாவிய போது ஒரு அதிசயமான, ஆச்சரியமான செய்தி கிடைத்தது. இன்னமும் மாறா புல்லரிப்போடே தொடர்கிறேன்.  ஆண்டு 1962, இடம் பிரேசில் நாடு. MOVEMENT FOR BASIC EDUCATION என்ற பெயரில் அங்கும...

மாற்றுக் கல்விக்கான புத்தக வாசிப்பு முகாம்

மாற்றுக் கல்விக்கான அடுத்த புத்தக வாசிப்பு முகாம் (ஜனவரி 8,9) ”அடடா, நான் விட்டுவிட்டேனே, என்னை கொஞ்சம் “அலர்ட்” பண்ணியிருக்கக் கூடாதா, மிஸ் பண்ணிட்டேனே”, “தோழர், இப்படியிருக்கும் என்று சொல்லியிருக்கக் கூடாதா, நான் கூட வந்திருப்பேனே”, “புதிய ஆசிரியன் அக்டோபர், நவம்பர் மாத இதழ் படித்தேன், ஐயா, அடுத்த முகாம் எப்போது?” “அடுத்த முகாமிற்கு என் பெயரை இப்பொழுதே எழுதிவிடுங்க” என்று கடந்த செப்டம்பர் 4,5 தேதிகளில் ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் ஈரோடு அறிவியல் இயக்கம் நடத்திய முதல் புத்தக வாசிப்பு முகாமிற்கு வர இயலாத பலருடைய ஆதங்கத்தினையும், ஏக்கத்தினையும் போக்கும் வகையில் அடுத்த வாசிப்பு முகாம் இதோ வருகின்ற புதிய வருடத்தில் (2011) ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் ஈரோடு நகரிலேயே நடைபெற உள்ளது. சென்ற முகாம் குறித்த பதிவுகள் www.puthiyaaasiriyan.com என்கிற வலைத்தளத்திலும் காணலாம். புதிய ஆசிரியன் இதழின் அக்டோபர், நவம்பர் மாதங்களில் காணலாம். http://www.puthiyaaasiriyan.com/index.php?year=2010&month=10&pageid=6 http://www.puthiyaaasiriyan.com/index.php?year=2010&month=11&pageid...

ஒற்றை வைக்கோல் புரட்சி யல்ல ஒற்றை புத்தக வாசிப்பு புரட்சி

நண்பர்களே, இதெல்லாம் இந்தியாவில் நடக்குமா? சாத்தியம் தானா? ஒரேஒரு புத்தகம், அதை வைத்து கொண்டு இரண்டு நாள் விவாத அரங்கம். அந்த அரங்கத்திற்கு நாமே காசு அனுப்பி கலந்து கொள்ள வேண்டும். வெறும் 30 பேர் மட்டுமே அனுமதி. முதல் முயற்சியாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு கிளை இந்த அரிய நிகழ்வை சாத்தியமாக்கவிருக்கிறது. பாவ்லோ பிரயரே என்கிற பிரேசில் நாட்டு கல்வியாளர் எழுதிய "ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை" (Pedagogy of the oppressed) என்கிற மகத்தான புத்தகத்தின் (பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு) மீதான விவாத அரங்கு பவானி சாகர் அணை அருகில் வருகிற செப்டம்பர் மாதம் 4 5 தேதிகளில் நடக்க விருக்கிறது. இந்த நாட்டில் புரட்சி என்கிற வார்த்தை போன்றே கல்வியாளர் என்கிற பதமும் மிகவும் கொச்சைப்படுத்தப்படுகிறது. கல்வி நிறுவனம்(?) வைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் கல்வியாளர்கள் என்கிற மிக மோசமான அர்த்தம் இங்கே நிலவுகிறது. கல்வியாளர் என்றால் என்ன? மாற்றுக் கல்வி என்றால் என்ன? வாருங்களேன் அற்புதமானதொரு சுகானுபவத்தில் நாமும் கலப்போம். .. வாசிப்பு முகாம் அழைப்பு ஒடுக்கப்பட்டோரின் மாற்...

சமச்சீர் கல்வி அல்ல சமச்சீர் பாடதிட்டமே (பாகம் - 2)

சென்ற பதிவின் தொடர்ச்சி 6. வட இந்திய தலித் தலைவர்கள் பலரது பேச்சுக்களிலும், கட்டுரைகளிலும் தலித் மக்கள் முன்னேற்றத்திற்கு ஹிந்தி வேண்டாம்; ஆங்கிலம் தான் வேண்டும் என் கின்றனர். சமீபகாலமாக பல்வேறு அபத்த தீர்ப்புகளை சொல்லி வரும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கர்னாடக மா நிலத்தில் தாய்மொழி வழி கல்வி அமல்படுத்த முயன்றதை குறை சொல்லியிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, வசந்தி தேவி தொடங்கிய கல்வியாளர்களும், ஜன நாயக சக்திகளும் காலம் காலமாக தாய்மொழி வழி கல்விதான் சிறந்தது என்று வாதிட்டு வருகின்றனர். அரசு அறிவித்துள்ள சமச்சீர்கல்வி இது குறித்து என்ன சொல்கிறது? தாய், தவ்தை அல்லது குடும்பத்திலிருந்து குழந்தையின் பிறப்பு முதல் கற்றுக் கொள்ளும் மொழியே தாய் மொழி. இந்தத் தாய் மொழியே சிந்தனை மொழி. இதுவே படைப்பாற்றலுக்கு ஆணிவேர். உயிரைக் கொடுத்து ஆங்கிலம் மட்டும் படிக்க வைத்தால் அவர் நல்ல வேலைக்குக்கூட செல்லலாம். நல்ல வருவாய் ஈட்டலாம். ஆனால் நல்ல மனிதனாக, குடிமகனாக இருக்க முடியாது. நல்ல "ரோபோ"வாக இயங்க முடியும். சாதியத்தால் வதைபட்டு சீரழிந்து போயுள்ள தலித் மக்கள் ரோபோக்களாக மாறினாலும...

சமச்சீர் கல்வி அல்ல சமச்சீர் பாடத்திட்டமே

அன்பு நண்பர்களே, வணக்கம். தமிழகம் முழுவதும் இப்போது சமச்சீர்க்கல்வி என்பது பரவலாகவும், விரிவாகவும் பேசப்படுகிறது. இருந்தாலும் சில சாதாரண கேள்விகளும் அதற்குரிய விடைகளும் காணப்படாமலேயே இருக்கிறது. ஒரு சிறு முயற்சியாக என்னுடைய சில சாதாரண கேள்விகளுக்கு தமிழ் நாடு அறிவியல் இயக்க ஈரோடு மாவட்ட செயலாளரும், பொருளாதார வல்லுனருமாகிய தோழர் ந.மணி அவர்கள் விடை சொல்லியிருக்கிறார். அவை : 1. தமிழக அரசால் மிக ஆர்பாட்டத்துடன் கொண்டு வந்திருக்கும் இந்த "சமச்சீர்கல்வி" உண்மையிலெயே சமச்சீர்கல்விதானா?" சமச்சீரான கல்வி (சமமான தரத்தில்) என்னும்போது, உயர்தரமான அவரவர்க்கு ஏற்ற அல்லது தேவையான கல்வியைக் குறிக்கப்பெறும். சமமான தரம் உருவாக்குவதும் செயற்படுத்துவதும் பாடத்திட்டம் மட்டுமல்லாது பள்ளி வசதிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, அவர்தம் திறமை, பாட நூல்கள், தேர்வுமுறைகள், பள்ளி நிர்வாகம், ஆகிய பள்ளிக் கல்வியின் அங்கங்கள் அவற்றின் தொடர்பான யாவற்றையும் உள்ளடக்கிய ஒரு பெரும் திட்டம் என்பதில் ஐயமில்லை. கலைத்திட்டம், நன்கு பயிற்சி ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் மாணவர் விகிதம் இவற்றுள் ஏ...

ஆசிரியர் என்கிற ஆளுமை

"ராஜு, என்னப்பா பார்த்து ரொம்ப நாளாச்சு, எங்கே போனே?" "அது ஒண்ணும் இல்லப்பா, நம்ம ஜேம்ஸ் வாத்தியார் இல்லே, அவருக்கு மேலுக்கு முடியாம இருக்காரா, ஒரு எட்டு பார்த்துட்டு வர்ற ஈரோடு போயிருந்தேன்". "ஏன்ப்பா உனக்கு இந்த வேண்டா த வேலை. அந்தாளு உன்னை எத்தனை தடவை அடிபின்னியிருப்பாரு. அவர் சிரிச்சு ஒரு நாளாவது பார்த்திருப்போமா?" "அது ஒண்ணும் இல்ல சங்கர், அவர் என்னை அடிச்சு துவைச்சது என்னவோ உண்மதான். ஆனா, நான் இப்படி இருக்கேனா அதுக்கு அவரும் ஒரு காரணம் தெரியுமா". ===================================== "மச்சி, உனக்கு விஷயம் தெரியுமா?, நம்ம கணக்கு சுந்தரம் வாத்தியாரை நேத்து எவனோ வண்டியிலே இடிச்சுட்டு போயிட்டானாம், நல்ல அடியாம்" "அட பாவமே" "டேய் என்னடா, பாவமேன்னு சொல்றே. அவரெல்லாம் ஒரு வாத்தியார்ன்னு சொல்றதுக்கே அவமானமாயிருக்கு. ஒரு நாளாச்சும் ஒழுங்கா பாடம் நடத்தியிருக்காரா. எப்பப் பாரு வட்டி, பிஸினஸ்ன்னுட்டு. அவருக்கு நல்லா வேணும்டா" மேற்சொன்ன உரையாடல்களை நம்மில் அநேகரும் பேசியிருக்கக் கூடும். பள்ளி/கல்லூரி முடிந்து ஆண்டுகள் உருண்...