Skip to main content

குரங்குபெடல் - review

 

குரங்கு பெடல் இரண்டு நாட்கள் முன்பு பார்த்த படம். முதலிலேயே சொல்லிடறேன். அந்த லாங் ஷாட், டிரோன் ஷாட் என்பதாக தொடங்கி விஎபெக்ஸ் சரியில்ல என்பது மாதிரியான சினிமா மொழி எல்லாம் எனக்கு தெரியாது. நான் எல்லாம் ஒரு சராசரி தமிழன், சினிமாவும் முக்கியமான உலகம் என்று நம்புகிறேன். அதன் மாயாஜாலத்தில் மகிழ்ந்து போகிறேன், அவ்வளவே.

Disclaimer எல்லாம் முடிஞ்சு, இனி விஷயத்துக்கு வருவோமா.. உண்மையிலேயே என்னை மாதிரி 80களின் மக்களுக்கு இன்ப நினைவலைகளை இனிமையாய் மீட்டு கொடுக்கும், எனக்குக் கொடுத்த திரைப்படம் தான் குரங்கு பெடல். நான் ஒன்னும் கிராமத்தில் வளர்ந்தவன் இல்லை. ஆனால் காஞ்சிபுரம் மாதிரியான ஒரு டவுனில் எங்களுக்கு ஒரு குசால் சா இருந்தார், அவர் ஹவர் சைக்கிள் வச்சிருந்தார், நாங்களும் ஓட்டி இருக்கோம், பந்தயம் வைச்சிருக்கோம், விழுந்து முட்டி எல்லாம் பேத்து இருக்கோம், பார்த்துக்குங்க.

 

சைக்கிள்அதுதாங்க வாகனம். நம்ம மனசறிந்து நடக்கும் ஒரே வாகனம் அதுவே. இன்னைக்கு வரை அரை டிரவுசரில் இருக்கும் குசால் சா அப்போது வகை வகையாய் சைக்கிள் வைத்திருந்தார். வேகவதி பாலத்தின் கரையோரத்தில் (நான் கல்லூரி முடிக்கிற வரைக்கும் கூட அந்த பாலம் காஞ்சிபுரம் கூவமாகவே இருந்தது, இப்போ இல்ல) அவரது கடையில் ரிப்பேருக்கு வருகிற ஏராளமான சைக்கிள்களுக்கு நடுவே ஒரு ஓரமாக சின்னது பெரிதுமாக வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஹவர் சைக்கிள்கள். குட்டி பசங்களுக்கு கூட சைக்கிள் இருக்கும் அவரிடத்தில். ஸ்டெண்டே இருக்காது, வீல் பம்பர் இருக்காது, மணி இருக்காது, அது ஒரு எலும்புகூடு அவ்வளவே. ஆனா பாருங்க, அதுதான் கிடைக்கவே கிடைக்காது. கொஞ்சம் பெரிய பசங்களுக்கு, ஸ்டேண்ட் இருக்கும், கூடவே மனுசன் அவங்களுக்கு மட்டும் கறாராக டைம் பார்ப்பார், ஆனால் காசில் எல்லாம் பெரிசாக கண்டுக்க மாட்டார். எப்படா கடை திறப்பான் மனுசன், பெருக்கி முடிப்பான், சைக்கிள் டையரியை எடுப்பான் என தவம் கிடப்போம். ஒரு வழியாய் எடுத்து ஓட்ட ஓட்ட அவ்வளவு வேகமாக நேரம் ஓட்டமா ஓடி நம்மளை கஷ்டப்படுத்தும். ஆனாலும் என்ன, அன்றைக்கு ஷோ அவ்வளவே. இந்த மாதிரி காத்திருத்தல், சின்ன சின்ன ஏமாற்றம் என்ற உணர்வுநிலை அனுபவித்ததால் தானே தானோ என்னமோ இந்த காலத்து பூமர் பயலுக விட நான் மன உறுதியாய் இருக்கின்றேன்.

6ஆம் கிளாஸ் ஆண்டுத்தேர்வு லீவு நாட்களில் காஞ்சிபுரம் முனிசிபாலிட்டியில் எங்கள் வீட்டுக்கு எதிரே தண்ணீர் திறந்துவிடும் அன்பு என்பவரே எனக்கு ஆசான். பின்னாடி புடிச்ச படியே கூடவே ஓடிவருவார். அந்த கல்லும் மண்ணும், புல்லுமாக, கூடவே பய புள்ளைக அசிங்கத்தோடும் ஓட்டி பழகிய நாட்களை குரங்கு பெடல் எடுத்த மனுசன் மீண்டும் நினைவு படுத்திட்டாரு. அதற்கே வாழ்த்துகள் புடியுங்க. அப்படியாக நாமும் கத்துகிட்டோம். அன்னைக்கு புடிச்ச கிரகம், இப்ப வரைக்கும் பசையாய் ஒட்டி இருக்கு. சைக்கிள் கத்துக்கிட்ட பின்னாடி இறங்கவே மனசு வராது, என்னமோ உலகத்தையே சுத்தி வருகிற மாதிரி நினைப்பு, ரஜினி நடிச்ச படிக்காதவன் படத்தில சொல்வாரு இல்ல, லஷ்மி சொன்னா கேளு என்பது மாதிரியே நானும் சைக்கிளோட பேசுவேன்.

 அப்போ அட்லாஸ் தான் பேமஸ், இருந்தாலும் ஒலியும் ஒளியும் இடையே ஹெர்குலிஸ் காப்டன், டிரிங், டிரிங் என ஒரு விளம்பரம் வரும். எப்படா நமக்கும் ஒரு சைக்கிள் என்ற ஏக்கமே அநேகமாக எனக்கு இதுவரைக்கும் இருந்த பெரும் ஏக்கம் என நினைக்கிறேன். ஆனால் அதிக நாட்கள் இல்ல. எங்க அப்பா லோன் போட்டு 7ஆம் கிளாஸ் இறுதித் தேர்வில் ஆமாங்க அதே செர்ரி பழ சிவப்பு என்பாங்க இல்ல அந்த கலர்கேப்டன் சைக்கிள் புதிதாக வாங்கி கொடுக்க, அன்னைக்கு காஞ்சிபுரம் நகரெங்கும் இறக்க கட்டி பறக்க ஆரம்பித்தது, காலேஜ் இறுதி வரைக்கும் சைக்கிள் தாங்க வாகனம். அப்பா மீண்டும் லோன் போட்டு ஒரு கைனடிங் ஹோண்டா வாங்க, அப்பா சைக்கிள் என் வசமாகியது. என்னவெல்லாம் செய்து இருக்கேன், இரண்டு கை விட்டு ஓட்டி இருக்கேன், வாங்க அம்மா சும்மா வாங்க என தைரியம் சொல்லி முதன் முதலா டபுள்ஸ் ஏத்தி உணவு இடைவேளை முடிந்து ஆபீஸ் கொண்டு விடுகிறேன் என சொல்லி பெருமையாய் ஏறி வந்த அம்மாவை ஒரு இறக்கத்தில் கீழே தள்ளி இருக்கேன்.. இன்னும் என்ன என்னமோ

 

காஞ்சிபுரத்தில் 80, 90 களில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும். கலக்டர் ஆபீஸ் இல் இருந்து விளக்கடி கோயில் இடையே ஒரு பெரிய பள்ளத்தாக்கு போல் இருக்கும். அப்படியே இறக்கத்தில் சர் சர்ரென வேகமாக இறங்கி வர, திரும்ப புஸ் புஸ் என அந்த மேடு ஏறிய பொழுதுகள் எல்லாவற்றையும் என குரங்கு பெடல் நினைவூட்டியது. சின்ன சின்ன பொருட்களில் சின்ன சின்னதாய் ஏதோ செய்து அதிலும் பெரிய மகிழ்வினை அடைந்த ஒரு காலமும் இருக்கிறது என பனையோலை காத்தாடி, நுங்கு வண்டி, தீப்பட்டி போன் என அருமையாய் காட்சிப்படுத்தி இருக்கிறார் டைரக்டர்.

ஈரோட்டில் ஒரு மூன்றரை வருடம் என் வாழ்வில் மிக முக்கியமான வாழ்வினை வாழ்ந்திருக்கிறேன் என்பதால் கேட்கிறேன், அந்த ஆறு பவானி ஆறுதானே..?! அந்த பாலம் குமாரபாளையம் பாலமோ?!! (இல்ல என்பதாகவே நினைக்கிறேன்).

 சரி போதும் என நினைக்கிறேன், இதுக்கு மேல படிக்கிற பொறுமையை பலரும் இழந்துவிட்டார்கள் என புரிந்து கொண்டு முடிக்கிறேன். ஒரு டிவிஸ்ட், ஒரு உணர்வு ஏற்ற இறக்கம், ஒரு மாஸ் என எதையும் எதிர்பாராமல் ஒரு பீல் குட் படம் பார்க்கணுமா குரங்கு பெடல் பாருங்க.

 2000த்திற்கு பிறகு பிறந்தவர்களா நீங்கள், கியூ, காத்து இருப்பது என எதுவும் பிடிக்காதவரா நீங்கள், நீங்களும் பாருங்க, அப்பவும் உலகம் இயங்கியது, அப்போது பிறந்த நாங்களும் ஒரு ரசமான வாழ்க்கை வாழ்ந்து இருக்கோம், சின்ன சின்ன பரிசுக்கெல்லாம் விலை பாராமால் மகிழ்ந்து இருக்கோம், சின்ன சின்ன முரணில் கூட முறித்து கொள்ளாமல் அட போப்பா என மீண்டும் இணைந்து என ஒரு நல்ல வாழ்வுதான் வாழ்ந்திருக்கிறோம் என நீங்களும் தெரிந்து கொள்ள அவசியம் குரங்கு பெடல் பாருங்கள்.

 



 

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

ஆனை மலை - வாசிப்பு அனுபவம்

அடர் காட்டுக்குள், பழங்குடிகளின் வாழ்வோடு உடன் பயணம் செய்ய வாய்ப்பு கொடுத்த உங்கள் நாவலுக்கு மிக்க நன்றி. எல்லாம் மரமே, பறப்பன எல்லாம் காக்கா, குருவியே என மட்டுமே சுட்டியிருந்த எனக்கு காடு என்பதுள்ளான வாழ்வு ஒன்று உண்டு என்பதை நக்கீரன் காடோடியில் உணர்த்தியிருந்தார். அதை மீண்டும் மீண்டும் நினைவூட்டியதற்கு உங்களுக்கு பெரு நன்றி தோழர். காடு என்பதற்குள்ளும் ஒரு உலகம் இயங்குகிறது, சென்னையின் நதிக்கரையோரம் வாழ்ந்திடும் குடும்பங்கள் / அவ்வளவாக கவனம் பெறாத ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள(வைக்கப்பட்டுள்ள) அந்த கீழ்த்தட்டு மக்கள் வாழிடங்கள் மத்தியிலும் ஒரு உலகம் இயங்குகிறது, அங்கிருக்கும் மனிதர்கள் மட்டுமே அல்ல உயிரினங்களும் முக்கியமே, வேறெங்கும் அவ்வளவாக காணக் கிடைத்திராத மனிதர்கள்-விலங்கினங்கள் இடையேயான பரஸ்பர உறவு, பேச்சுவார்த்தை என்பது இவ்விடங்களில் ஆழமாக, அழகாக இருக்கிறது என சாதாரணர்களுக்கு உரைத்திடவே ஒரு படைப்பு தேவைப்படுகிறது. அவ்வகையில் இப்படைப்பு ‘ஆனைமலை” முக்கியத்துவம் பெறுகிறது என நினைக்கிறேன். இந்நாவலில் கூடுதலாக மனிதர்கள்-விலங்குகள்-மரங்கள்/செடிகள் என முக்கோண ஒரு உறவாடலும், உரையாடலு

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி