Skip to main content

Posts

Showing posts with the label எதிர் வெளியீடு

ராஜ வனம் மற்றும் காடர் - நூல் அறிமுகம்

ராஜ வனம்   இத்தோடு அநேகமாக நான்கு அல்லது ஐந்து வனம் குறித்த நூல்களை வாசித்திருக்கிறேன். லஷ்மி சரவணக்குமாரின்{?} ஒரு புலி பற்றிய நூல், அருமைத் தமிழின் சொந்தக்காரர் என் பிரியத்துக்குரிய நக்கீரன் அவர்கள் எழுதிய காடோடி என்னும் classic, சமீபத்தில் என்னை மிகவும் ஈர்த்த பிரசாந்த் வே அவர்களின் சிறுகதை தொகுப்பான காடர் என்பதைத் தொடர்ந்து ஒரு வனம் குறித்த சிறுகுறுநாவல்.   வறீதையா கானஸ்தந்தின் அவர்களின் மொழியை படித்தவர்களுக்கு அதுவும் அவரது சமீபத்திய குமரி நிலப்பகுதி எழுத்தாளர்களின் (மீனவ சமூகத்தின்?) சிறுகதைகளை வாசித்ததன் மூலம் ஓரளவு நாஞ்சில் நாட்டு dialect எந்த பிரச்சனையும் இல்லாம சமாளிச்சுருலாம் என நினைத்தே ராஜவனம் எடுத்தேன்.   ஆனா அப்படி எல்லாம் இல்ல. இது கொஞ்சம் இன்னமும் மெனக்கட வேண்டி இருந்தது. ஆனாலும் சுகமான அனுபவம். மலையாளம் தமிழும் கலந்து திரிந்து ஒருவித இசைக்கோர்வையாக வரும் நாஞ்சில் நாட்டு வட்டார மொழி வழக்கு பிரமாதம், மயக்குகிறது. அநேகமாக காடுகளை களமாக கொண்டு எழுதுபவர்களால் வனங்களின் அந்த தாவர வளம், வகைகள், விலங்கு வகையினம், மண் வளம் என்பனவற்றின் மீது ஒரு மையல் கொள்ளாமல் எழ...

நிழல் இராணுவங்கள் - இந்துத்துவாவின் உதிரி அமைப்புகளும் அடியாட்படைகளும் - நூல் அறிமுகம்

இவ்வளவு நாட்களாய் ஒன்னும் மண்ணுமாய் தானே பழகி வந்தோம். திடீரென்று அவர்கள் எங்களுக்கு எப்படி எதிர் ஆனார்கள்? எங்கள் மீது அவர்களுள் இத்தனை வன்மமா? இந்த வன்மம் திடீரென்று அவர்களுள் வந்துவிட்டதா, இல்லை அந்த வன்மம் அவர்கள் மனதில் இத்தனை நாள் இருந்த இடம் தெரியாமல் இருந்தது, இப்போது திடீரென்று பொங்கியதா? அவர்களின் இத்திடீர் வன்மம் ஏற்பட நாங்கள் என்னதான் செய்து விட்டோம்? – கலவர பூமிகளில் பாதிக்கப்பட்ட வா ழ்விழந்த மத சிறுபான்மையினர்களின் கேள்விகள் தான் இவை. இங்கே இந்திய திருநாட்டில் பெரும்பாலும் கலவரங்களின் பொது இரை இஸ்லாமியர்களே. எப்படி இந்து மக்கள் இஸ்லாமியர்களுக்கு மீதான மத துவேஷத்திற்கு இரையானார்கள்? இந்திய நாட்டில் கிட்டத்தட்ட 90 சதமானமாக இருக்கும் இந்து மக்களுக்கு வெறும் 5.3 சதமானம் மட்டுமே மக்கள் தொகை கொண்ட இஸ்லாமிய மக்களின் மீதான பயம் ஏன்? ஆர்.எஸ்.எஸ் ஒரு டிசிப்பிளின் சொல்லிக் கொடுக்கிற, தேசபக்தியை ஊட்டுகிற ஒரு அமைப்பு, அவ்வளவே. அதை போய் நாட்டில் நடக்கிற கலவரங்கள் பலவற்றிற்கும் பங்காளிகள் ஆக்குவது சரியா? ஆங்காங்கே தீவிரவாத குணம் கொண்ட இந்து அமைப்புகள் சில செய்யும் ...