Skip to main content

நிழல் இராணுவங்கள் - இந்துத்துவாவின் உதிரி அமைப்புகளும் அடியாட்படைகளும் - நூல் அறிமுகம்

இவ்வளவு நாட்களாய் ஒன்னும் மண்ணுமாய் தானே பழகி வந்தோம். திடீரென்று அவர்கள் எங்களுக்கு எப்படி எதிர் ஆனார்கள்? எங்கள் மீது அவர்களுள் இத்தனை வன்மமா? இந்த வன்மம் திடீரென்று அவர்களுள் வந்துவிட்டதா, இல்லை அந்த வன்மம் அவர்கள் மனதில் இத்தனை நாள் இருந்த இடம் தெரியாமல் இருந்தது, இப்போது திடீரென்று பொங்கியதா? அவர்களின் இத்திடீர் வன்மம் ஏற்பட நாங்கள் என்னதான் செய்து விட்டோம்? – கலவர பூமிகளில் பாதிக்கப்பட்ட வாழ்விழந்த மத சிறுபான்மையினர்களின் கேள்விகள் தான் இவை. இங்கே இந்திய திருநாட்டில் பெரும்பாலும் கலவரங்களின் பொது இரை இஸ்லாமியர்களே. எப்படி இந்து மக்கள் இஸ்லாமியர்களுக்கு மீதான மத துவேஷத்திற்கு இரையானார்கள்? இந்திய நாட்டில் கிட்டத்தட்ட 90 சதமானமாக இருக்கும் இந்து மக்களுக்கு வெறும் 5.3 சதமானம் மட்டுமே மக்கள் தொகை கொண்ட இஸ்லாமிய மக்களின் மீதான பயம் ஏன்?

ஆர்.எஸ்.எஸ் ஒரு டிசிப்பிளின் சொல்லிக் கொடுக்கிற, தேசபக்தியை ஊட்டுகிற ஒரு அமைப்பு, அவ்வளவே. அதை போய் நாட்டில் நடக்கிற கலவரங்கள் பலவற்றிற்கும் பங்காளிகள் ஆக்குவது சரியா? ஆங்காங்கே தீவிரவாத குணம் கொண்ட இந்து அமைப்புகள் சில செய்யும் வன்முறைகளுக்கும், தவிர்க்க முடியாமல் ஏற்படுத்துகிற உயிரிழப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் தொடர்பு படுத்துவது நிச்சயமாக சரியான ஒன்றாக இருக்க முடியாது தானே? கவனமா பாருங்க, நம்ம இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத் பல விஷயங்களில் பாஜகவோடு ஒன்றாக இருந்தாலும், தேர்தல்களில் தனித்து நிற்கவில்லையா, அப்படின்னா இந்து மக்கள் கட்சியும் பாஜகவும் ஒரு மரத்து கிளைகள் என்று சொல்வது தப்புதானே? வி.எச்.பி, இந்து மக்கள் கட்சி, பஜ்ரங் தள், அனுமன் சேனா, ஸ்ரீராம் சேனா, அபினவ் பாரத் என்ற பெயரில் அமைப்புகள் பலவும் தனித்தே பதிவு செய்திருக்கின்றன என்பது மட்டுமல்ல, அவைகளில் சிலவற்றிற்கு தேசிய தலைமை மாநில தலைமையும் கூட இருக்கின்றன என்கையில், பாஜகவும் அவர்களும் வேறு வேறுதானே?

நண்பர்களே, இந்தக் கேள்விகள் உங்கள் உள்ளும் எழுகிறதல்லவா? அப்படியென்றால், உங்களுக்கு உதவ சமீபத்தில் எதிர் வெளியீடு மூலமாக இ.பா.சிந்தனின் பிசிறில்லா எளிய மொழிபெயர்ப்பில் திரேந்திர கே.ஜாவின் புத்தகமான “நிழல் இராணுவங்கள்” இருக்கிறது.

வெவ்வேறு பெயர்களில் தனித்தனியே அமைப்புகளாக பதிவு செய்திருப்பினும், இவை அனைத்தும் சித்தாந்தத்தில் மற்றும் அதன் விளைவாக மத துவேஷத்திலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு ஒத்திசைவாகவே இருப்பதை இப்புத்தகம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அது மட்டுமில்லாமல், எல்லா அமைப்புகளின் தலைமைகளும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் கீழ் ஏதோ ஒரு காலத்தில் இருந்தவர்களாக இருப்பதையும் நாம் பார்க்க முடிகிறது. வெளியே பார்ப்பதற்கு தனித்தனி அமைப்புகளாக செயல்டுவது போல் தோற்றமளித்தாலும், தேர்தல் காலங்களில் பாஜகவிற்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதில் மிகப் பெரும் அளவிற்கு உதவுபவைகளாகவும் பல சமயங்களில் நேரடியாக அந்தந்த அமைப்புகளின் தலைவர்கள் பாஜக கட்சியின் வேட்பாளர்களாக தேர்தலில் நிற்பதையும் நாம் காண முடிகிறது. அப்படித்தான் இந்து யுவ வாகினி என்னும் அமைப்பின் தலைவராக இருந்த யோகி ஆதித்யநாத் தற்போது பாஜகவின் முதல்வராக இருப்பதையும் நாம் பார்க்க முடிகிறது. இந்த உதிரி அமைப்புகள் எனப்படுவைகள் நிகழ்த்தும் அரசியல் கொலைகள், கலவரங்கள் உள்ளிட்ட படுபாதக செயல்களுக்கு இவைகள் தனித்தனியே உள்ள fringe elements என சொல்லி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தன் மீது குற்றங்களின் / படுபாதகங்களின் நிழல்கள் விழா வண்ணம் ஒரு நல்ல பெயரை தேக்கி வைத்துக் கொள்ளும் ஒரு மோசடியை செய்வதை இந்தப் புத்தகம் அம்பலப்படுத்துகிறது.

சமீபத்தில் 370 சட்ட திருத்தம் மூலம் லடாக் பகுதியில் இருக்கும் பெரும்பகுதி புத்த மத மக்களின் ஒரு நீண்ட நாள் கோரிக்கை நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம் என்று பெருமை கொள்ளும் பாஜகவின் பின் உள்ள சூதை விளங்கிக் கொள்ள பஞ்சாப் மாநிலங்களில் அதே போல் சீக்கிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் ராஷ்டிரீய சீக் சங் என்ற பெயரில் செயல்படும் விதமும் அதன் நோக்கமும் இப்புத்தகத்தை படிக்கையில் விளங்குகிறது. நாளை புத்த மதமும் இந்து மதத்தில் அடக்கமே என்று சொல்லி அந்த மதத்தை அழிக்கவே இந்த போலி பெருமை என்பதும் விளங்குகிறது. இந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் பிடியில் சிக்காமல் மக்களைக் காக்க அவர்கள் கைகொள்ளும் அதே மத செயல்பாடுகளை மத கொண்டாட்டங்களை தன் வயப்படுத்துவது என்னும் கேரளத்து முற்போக்கு அமைப்புகளின் செயல்பாடுகள் மீது நம்பிக்கையின்மையே நிலவுகிறது.
இந்தப் புத்தகம் சொல்லும் மிக முக்கிய அம்சமாக நான் பார்ப்பது, என்னதான் இந்துத்துவா என்ற சொல்லில் அனைத்து இந்து மக்களுக்காக உழைப்பதாக சொன்னாலும், ஆதிக்க சாதியினரின் கருத்தியலை அப்படியே தக்க வைக்கவே ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அதன் நிழல் இராணுவங்கள் செயல்படுவதை இப்புத்தகம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஆதிக்க சாதியினரின் கருத்தியல் என்பது இந்து தர்மத்தில் உயர் பிரிவினராக கருதப்படும் பிராமணர்களின் கருத்தியலே, பார்ப்பனீயமே. தனக்கு கீழாக மக்கள் இருக்கிறார்கள் என்ற புரிதலில் அவர்களை எல்லா விதங்களிலும் ஒடுக்கி, தங்களை விட கீழாகவே அவர்களை வைத்திருக்கும் சூழ்ச்சி செயல்பாடுகளே, சூதான கருத்தியலே பார்ப்பனீயம். இந்த கருத்தியல் தான் தாங்களே சாதி அடுக்கில் கீழாக இருக்கிறோம் என்பதை உணராமல் பிற்படுத்தப்பட்ட சாதியினர் பட்டியலின சாதியினரை ஒடுக்குவதற்கும் காரணமாக இருக்கிறது. இந்த புரிதலில் தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தவிர மற்ற அதன் பெரும்பாலான நிழல் இராணுவ அமைப்புகளின் தலைமைப் பகுதியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மிகுதியாக இருக்கிறார்கள். இங்கேதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வெல்லும் சூத்திரம் இருப்பதாக நான் உணர்கிறேன். அது பிற்படுத்தப்பட்ட சாதியனர் மற்றும் பட்டியலின மக்கள் ஆகிய இரு பிரிவினரிடமும் சாதி அடுக்கில் கீழாக இருப்பதற்காகவே, ஆம், சாதி என்ற பேதம் நீங்காமல் பார்த்துக் கொள்வதற்காகவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் நிழல் இராணுவங்களான அமைப்புகளும் செயல்படுகின்றன என்பதை அம்பலப்படுத்திட வேண்டும்.

மேலும், இந்த அமைப்புகளுக்கு பெரிதான கொள்கைகள் இலட்சியங்கள் இருப்பதாக சொல்லிக் கொண்டாலும், உண்மையில் அவைகள் காசு பார்ப்பதையே பிரதான வேலையாக கொண்டிருக்கிறது என்பதும் அம்பலமாகிறது. அது மட்டுமல்லாது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் ஓர் இராணுவ ஒழுங்கினை கொண்டிருப்பார்கள் என்பதையும் அவர்களின் ஒழுக்க கேட்டினையும் இப்புத்தகம் சில இடங்களில் சொல்லாமல் விடவில்லை. காங்கிரஸ், சமாஜ்வாடி, அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகளும் ஆதிக்க சாதியினரை பகைத்துக் கொள்ள கூடாது என்ற புரிதலில் கொள்கையில் ஆர்.எஸ்.எஸ் வளர உதவினார்கள் என்பதும் இப்புத்தகத்தின் மூலம் விளங்குகிறது.

அவசியம் வாங்கி படிங்க.. விலை ரூ.220/- தான். எதிர் வெளியீட்டின் பதிப்பக வலைப்பக்கத்தில் ஆர்டர் செய்தால் விலை ரூ.200 மட்டும் தான். அவர்களின் டெலிவரி ஸ்பீடும் சூப்பர் (அடுத்த நாளே வந்துவிட்டது). நல்ல இலகுவான மொழிபெயர்ப்பிற்கு இ.பா சிந்தன் தோழருக்கு, வாழ்த்துக்கள்.

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற