Skip to main content

சமச்சீர் கல்வி அல்ல சமச்சீர் பாடத்திட்டமே


அன்பு நண்பர்களே, வணக்கம். தமிழகம் முழுவதும் இப்போது சமச்சீர்க்கல்வி என்பது பரவலாகவும், விரிவாகவும் பேசப்படுகிறது. இருந்தாலும் சில சாதாரண கேள்விகளும் அதற்குரிய விடைகளும் காணப்படாமலேயே இருக்கிறது. ஒரு சிறு முயற்சியாக என்னுடைய சில சாதாரண கேள்விகளுக்கு தமிழ் நாடு அறிவியல் இயக்க ஈரோடு மாவட்ட செயலாளரும், பொருளாதார வல்லுனருமாகிய தோழர் ந.மணி அவர்கள் விடை சொல்லியிருக்கிறார். அவை :



1. தமிழக அரசால் மிக ஆர்பாட்டத்துடன் கொண்டு வந்திருக்கும் இந்த "சமச்சீர்கல்வி" உண்மையிலெயே
சமச்சீர்கல்விதானா?"

சமச்சீரான கல்வி (சமமான தரத்தில்) என்னும்போது, உயர்தரமான அவரவர்க்கு ஏற்ற அல்லது தேவையான கல்வியைக் குறிக்கப்பெறும். சமமான தரம் உருவாக்குவதும் செயற்படுத்துவதும் பாடத்திட்டம் மட்டுமல்லாது பள்ளி வசதிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, அவர்தம் திறமை, பாட நூல்கள், தேர்வுமுறைகள், பள்ளி நிர்வாகம், ஆகிய பள்ளிக் கல்வியின் அங்கங்கள் அவற்றின் தொடர்பான யாவற்றையும் உள்ளடக்கிய ஒரு பெரும் திட்டம் என்பதில் ஐயமில்லை. கலைத்திட்டம், நன்கு பயிற்சி ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் மாணவர் விகிதம் இவற்றுள் ஏதாவது ஒன்று மட்டுமே சமமாக இருந்தால் மட்டும் சமச்சீர்க் கல்வியை உருவாக்க முடியாது (சமச்சீர் கல்விக்குழு அறிக்கை : பக் : 14)

இக்கல்விக் குழுவின் அறிக்கை 11 அத்தியாயங்களையும், 150 பக்கங்களையும் கொண்டது. சமச்சீர் கல்வியின் மேற்படி வரையறை மூன்றாவது அத்தியாயத்தில் துவக்கத்திலேயே வருகிறது. இதையெல்லாம் நன்கு அலசி ஆராய்ந்த தமிழக அரசுதான் ஒரே பாடத்திட்டத்தைக் காட்டி இதுவே சமச்சீர் கல்வி என்கிறது. எதுவும் இல்லாததற்கு இது பரவாயில்லை என்பதற்காகவோ அல்லது சமச்சீர் கல்வி என்னும் பெரும் திட்டத்தை நோக்கிய முதல்படி என்ற அளவிலோ இதைப் பாராட்டலாம்.

2. இந்த வகை சமச்சீர்கல்விதானா கல்வியாளர்களும், சமூக முன்னேற்ற சக்திகளும் எதிர்ப்பார்ப்பது?

அனைத்துப் பள்ளிகளும் தரமாக கல்வியை, அனைத்து மாணவர்களுக்கும் தர வேண்டும். எதுக்கும் லாயக்கு இல்லை, உருப்படவே உருப்படாது என சபிக்கிறார்களே அந்த மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமமான தரமான கல்வியைப் பெறவேண்டும். இது பொதுப்பள்ளி மற்றும் அருகமைப் பள்ளிகளால் மாத்திரமே சாத்தியம். ஒரு ஜன நாயக நாட்டில் குறைந்தபட்சம் கல்வியும் மருத்துவமும் எந்தவிதப் பாகுபாடும் இன்றி சரிசமமாக வழங்கப்படவில்லையெனில், எவ்வாறு ஜன நாயகம் ஆகும்? அது பண நாயகம் அல்லவா?

3. ஓராசிரியர் பள்ளி மற்றும் பெருமளவிலான ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது இதை எப்படி பாதிக்கும்?

சமச்சீர்க் கல்வி என்ற அரசின் சொல்லாடலைத் தவிர்த்து, "சமச்சீர் பாடத்திட்ட முறை" என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். இதில் கூடுதல் நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்பாடு உண்டா எனத் தெரியவில்லை. இன்றைக்கு ஓராசிரியர் பள்ளியாகவும், ஈராசிரியர் பள்ளியாகவும் குற்றுயிரும் குலையுயிருமாய் ஜீவித்துக் கொண்டிருக்கும், இப்பள்ளிகள் தொடங்கப்பட்டபோதே இவ்வாறு துவங்கப்பட்டவை அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் நிரம்பி வழிந்த இப்பள்ளிகளுக்கு இன்று ஏன் இந்த நிலை ஏற்பட்டது? 1950களில் தொடங்கப்பட்ட இப்பள்ளிகளுக்கு வயதும் ஐம்பதை எட்டியிருக்கும். அப்போது இப்பள்ளியைஸ் சுற்றியிருந்த மக்கள் தொகை எவ்வளவு? அய்ந்து பத்தாண்டுகளுக்குப் பின்னர் மக்கள் தொகை எவ்வளவு அதிகரித்திருக்கும்? இந்திய மக்கள் தொகை வளர்ச்சியை "Population explosion" என்றே வர்ணிக்கிறார்கள். இவ்வாறு துரிதமாக வளர்ந்த மக்கள் எங்கே சென்றார்கள்? ஒவ்வொரு கிராமத்திலும் துவக்கப்பட்ட தொடக்கப் பள்ளிகள் இன்றைக்கு உயர் நிலை/மேல் நிலைப் பள்ளியாக எழுந்து நின்றிருக்க வேண்டுமல்லவா? மாறாக் பெருகிவந்த மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இன்றி, கட்டிட வசதி இன்றி, பாதுகாக்கப்பட்ட குடி நீர் வசதியின்றி, துரத்தியடிக்கப்பட்டார்கள். எங்கும் செல்ல வழியற்ற நிலையில் சபிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளின் ஒரே புகலிடமாக அரசுப் பள்ளிகள் தழைத்தோங்கும் சூழ்னிலையில் ஓர்/ஈராசிரியர் பள்ளிகளில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.

4. மெட்ரிக் பள்ளிகள் அடித்து வரும் கொள்ளைகள் இனி இருக்காதா?

"பாம்பும் சாகாமல், தடியும் ஒடியாமல்" என்று கிராமத்தில் ஒரு பழமொழியுண்டு. அப்படித்தான் யதார்தத்திற்கு புறம்பாக சமச்சீர் கல்வி இருக்கப் போகிறது. "எம்புருசனும் கச்சேரிக்குப் போனான்" என்ற கதையாய் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகள் தங்களுக்கு தக்க "கும்பகோண மெட்ரிக் பள்ளிகளுக்கு" அனுப்பி வருகிறார்கள். அதில் ஏதேனும் சிறு மாற்றம் ஏற்பட்டாலே பெரிய விஷயம். எனவே தற்போதைய சமச்சீர்க் கல்விக்கும் (பாடத்திட்டத்திற்கும்) மெட்ரிக் கல்விக் கொள்ளைக்கு எந்தவிதத்திலும் தடையாக்க இருக்கப் போவதில்லை.

5. சமீபத்தில், தலித் முரசில் (4 மாதங்களுக்கு முன்னர்) அழகிய பெரியவன் அவர்கள் செயல்முறை கற்றல் என்பது தலித் மாணவர்களுக்கு எதிரானது என்றும் அது அவர்களை பின்னோக்கி இழுத்து செல்கிறது என்றும் கூறி வரும் நிலையில் சமச்சீர்கல்வி என்பது எப்படி தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கும் உதவியாக இருக்கும்?

தலித் குழந்தைகள் மட்டுமல்ல. எந்தவொரு குழந்தையையும் அழகிய பெரியவனை சற்று உற்று நோக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். குழந்தையின் அனைத்துக் கற்றல் செயல்பாடுகளும் செயல்வழிக் கற்றலே. எனவே, செயல்வழிக் கற்றல் என்பது இயல்பாய் கற்ற்ல் என்று பொருள்படும். செயற்கையாய், செயல்வழிக் கற்றல் இன்றி, இயர்கைக்கு முரணாக கற்றுத்தரும்போது, தலித் குழந்தைகளோ தலித் அல்லாத குழந்தைகளோ எந்தவொரு குழந்தைக்கும் கடினமானதே. ஏற்கெனவே படிப்பறிவு உள்ள குடும்பக் குழந்தைகளுக்கு அந்த இடைவெளியை இட்டு நிரப்ப குடும்பத்தில் ஏற்பாடு உண்டு. ஆனால், கல்வியறிவு அற்ற, பின் தங்கிய மக்களின் குறிப்பாக தலித் மற்றும் அதையொத்த நிலையில் வாழும் குழந்தைகளுக்கு கற்றுத் தர யார் இருக்கிறார்கள்? செயல்வழிக் கற்றலே சால சிறந்தது.

6. வட இந்திய தலித் தலைவர்கள் பலரது பேச்சுக்களிலும், கட்டுரைகளிலும் தலித் மக்கள் முன்னேற்றத்திற்கு ஹிந்தி வேண்டாம்; ஆங்கிலம் தான் வேண்டும் என் கின்றனர். சமீபகாலமாக பல்வேறு அபத்த தீர்ப்புகளை சொல்லி வரும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கர்னாடக மா நிலத்தில் தாய்மொழி வழி கல்வி அமல்படுத்த முயன்றதை குறை சொல்லியிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, வசந்தி தேவி தொடங்கிய கல்வியாளர்களும், ஜன நாயக சக்திகளும் காலம் காலமாக தாய்மொழி வழி கல்விதான் சிறந்தது என்று வாதிட்டு வருகின்றனர். அரசு அறிவித்துள்ள சமச்சீர்கல்வி இது குறித்து என்ன சொல்கிறது?

................ இதற்கான பதிலும் இன்ன சில கேள்விகளின் பதில்களும் நாளைய பதிவில்.


Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற