Skip to main content

காதலிக்கு ரோஜா, காதலனுக்குப் புத்தகம்...






முந்தைய இரண்டு வாரங்களில் புதிய புத்தகங்கள் படிக்காதவருடைய உரையாடலில் எந்த நறுமணமும் கமழ்வதில்லை.
- சீனப் பழமொழி.


புத்தகத்தைப் பெறுவதற்குச் சில உபாயங்கள் இருக்கின்றன என்று தமது நூலுக்கான முன்னுரை ஒன்றில் இப்படி எழுதுகிறார் எழுத்தாளர் கல்கி; “முதலாவது இரவல் வாங்குவது. இரண்டாவது யாரிடமிருந்தாவது திருடி எடுத்து வருவது. மூன்றாவது காசு கொடுத்து வாங்குவ்து. ஆனால், பெரும்பாலானோர்க்கு இந்த கடைசி உபாயம் சித்திப்பதில்லை”.

கல்கியின் நையாண்டியை ரசிப்போம். ஆனால், எப்படியாவது ஒரு வழியில் படிக்கிற ஏற்பாட்டைச் செய்து கொள்ளுங்கள் என்பதுதான் வாசிப்பு இயக்கத்துகாரர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.


புத்தக வாசிப்பு உள்ளபடியே ஓர் இனிமையான அனுபவம் என்றும், நமக்குள்ளேயே நாம் துவக்கும் ஒரு ரசமான பயணம் என்றும் கண்டுபிடித்து விடுபவர்கள் வாசிப்பை விடவேமாட்டார்கள்.


எழுத்துக்களை முதன்முதலாகச் சமைத்தவர்களை வணங்கத் தோன்றுகிறது. தற்செயலாகத் தனது கருவிகள் மண்ணிலோ, பாறையிலோ பட்டுக் கீறியதிலிருந்து சித்திரங்களை உருவாக்கியவர்கள் உழைப்பாளி மனிதர்களே. சித்திர வடிவங்கள் ஏதோ ஒரு இறுக்கம் கலைந்த நாளில், ‘ஜெம்’ கிளிப்பைப் பிரித்து போட்ட மாதிரி, தன் உருவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை பெற்று ஆர அமர கை, கால்களை நீட்டி வெவ்வேறு கோணங்களில் எழுத்துக்களாக மலர்ந்திருக்கக்கூடும். சித்திர வடிவாகவே இருக்கிற எழுத்துக்கள் சில மொழிகளில் நீடிக்கவே செய்கின்றன. பேசு மொழியும், எழுத்து மொழியும் முதன்முதல் நிகழ்த்திக் கொண்ட சந்திப்பின் இசை நிச்சயம் சுவாரசியமாக இருந்திருக்க வேண்டும்.

காற்றின் விசித்திர நுட்பத்தால் ஒலிகளை எழுப்பத் துவங்கிய மனிதர்கள் அவற்றை மொழியாக உருவாக்கிய காலத்தைப் போலவே, எழுத்தின் உருவாக்கமும் அதற்கான மனித உழைப்பும் பெருமிதம் நிறைந்தவை.


பனையோலைகளில் எழுத்துக்கள் பதிந்ததை, செல்லரித்ததாக வேடன் பாடுகிற கலம்பகப் பாடல் (“பேச வந்த தூத, செல்லரித்த ஓலை செல்லுமோ..”) உழைப்பாளி மக்களிடமிருந்து எழுத்துக்கள் விலகிவிட்ட காலத்தைக் காட்டுகிறது. ஆதிக்க சக்திகளின் வேரூன்றிய காலம், பெரும்பகுதி மக்களை அறியாமையில் அழுத்திய காலமாக அறியபட வேண்டியது. ஆனால், பண்டிதர்களையும், மேதாவிகளையும் விஞ்சிய கதையாடல்களையும், சொல்லாட்ல்களையும் கால காலமாக மரபணுக்களில் தேக்கிய மக்கள் இருக்கவே செய்கின்றனர் நாட்டுப்புறங்களில்.


நாகரிகத்தின் வளர்ச்சியில் அவர்களது பதிவுகள் பின்னர் அறிவுஜீவிகளை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறதையும் காலம் மௌன புன்னகையோடு கடந்து போய்க் கொண்டிருக்கிறது.


வாய்ப்பற்ற மக்களும் இன்று வாசிப்பின் வாசலில் பெருகும் வேளையில், வாசிக்க இயலுவோர் புத்தகங்களைக் கொண்டாட முன்வாருங்களேன் என்ற கோரிக்கை முழக்கதைத் தான் உலக புத்தக தினம் எழுப்புகிறது.


1923ல் ஸ்பெயின் நாட்டில் ‘கெட்டலோனியா’ நகரின் புத்தக விற்பனையாளர்கள் ‘மிகையில் டே செர்வாண்டிஸ்’ என்ற எழுத்தாளர் மறைந்த ஏப்ரல் 23ம் தேதியை புத்தக தினமாக்கும் முன்மொழிவைச் செய்தார்கள் என்று சொல்லப்படுகிறது.


புனித ஜார்ஜ் தினமாக அந்த நாள் ஏற்கனவே அந்தப் பகுதியில் கொண்டாடப்பட்டு வந்திருந்தது. அந்த நாளில் ஆண்கள் தமது காதலிக்கு ரோஜாவைப் பரிசளித்து அன்பைப் பரிமாறுவது வழக்கம். 1925லிருந்து ரோஜா அளித்த காதலனுக்கு, பெண்கள் இந்த நாளில் புத்தகத்தைப் பதில் பரிசாக வழங்கத் துவங்கினார்கள். ஆண்டு முழுவதும் விற்பனையாகிற புத்தகங்களில் பாதி ஏப்ரல் 23 சமயத்தில் விற்கப்பட்டு விடுகிற கேட்டலோனியாவில், 40 லட்சம் ரோஜாக்களுக்கு ஈடாக 4 லட்சம் புதிய புத்தகங்கள் கை மாறுமாம்.

1985ல் யுனெஸ்கோ நிறுவனம் உலக புத்தக தினத்தையும், புத்தக உரிமை தினத்தையும் ஏப்ரல் 23ல் அனுசரிப்பதென முடிவெடுத்தது. அதற்கு முக்கிய காரணம், இந்த தினம், நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறந்த தினம்! அவரது நினைவு தினமும்கூட. வேறு சில முக்கிய படைப்பாளிகளின் நினைவு தினமுமாகப் பதிவாகி இருக்கிற ஏப்ரல் 23, புத்தகங்களுக்கு மட்டுமல்ல, புத்தக வாசகர்களுக்கும் கொண்டாட்ட நாள்தான். படைத்துக் காட்டுகிற உழைப்பாளியிடம் படித்துக் காட்டுகிற சேவையைச் செய்தவர்கள் நம் முன்னோர்.

பார்வையற்றோரும் பயில மொழி உருவாக்கப் பட்டுள்ள உலகில் விழியின் பயனை வாசிப்பில் தேடச் சொல்கிறது புத்தக தினம்.


புத்தகங்களைக் கொண்டாடுங்கள்!


எஸ். வி. வேணுகோபாலன்.
( bank workers unity, ஏப்ரல், 2009 )

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற