Skip to main content

ஏன் அவர்கள் அப்படி செய்தார்கள்?

இப்போது டிசம்பர் மாதம், 1993ஆம் ஆண்டு. இடம்: பேருந்து நிலையம், அயோத்தியா நகரம். காட்சி : 8 வயது சிறுமி கிழிந்த துணி, கலைந்த தலை, கண்ணில் வெறுமை, தொலைத்த நம்பிக்கை என‌ பிச்சைக் கோலத்துடன் கையில் தட்டும், இடுப்பில் ஒரு குழந்தையோடும். சேகர் குப்தா, இந்தியா டுடே பத்திரிகையின் நிருபர் இந்தக் காட்சியை காண்கிறார். என்னவோ தோன்றி சிறுமியின் அருகில் செல்கிறார்.

குனிந்து சிறுமியிடம் கேட்கிறார், "உன் பேர் என்ன?".

சிறுமி,ஒரு வெறுப்புடன் "ஷமீம் பானு" என்கிறாள்.

குப்தா: "ஏன் பிச்சை எடுக்கிறாய்?, பள்ளிக்கு செல்லலாமே".

சிறுமி, "வேறு வழியில்லை, பசிக்குதே" என்கிறாள். அவளே தொடர்ந்து "நானும் பள்ளிக்கு சென்றிருந்தேனே" என்றாள். சொல்லுகையில் அவள் கண்ணில் தோன்றிய ஒளி என்னவென்று விவரிக்க இயலாததாய் இருந்தது. ஒரு கணம் நற்காலத்தின் நினைவுகள் மின்னியதாக இருக்கலாம்.

"அப்போதெல்லாம், என் வாப்பா என்னை அவரது பளபளவென துடைத்த சைக்கிளில் என்னை முன் வைத்தும், என் அண்ணனை பின்னாடி வைத்தும் பள்ளிக்கு கூட்டி செல்வார். வழியில் எப்படியோ என்னை தேடி வந்து என்னை முத்தமிடும் பட்டாம்பூச்சியை பார்க்கலாம், பள்ளியை நோக்கி ஹோவென கத்தி குதித்து வரும் பிள்ளைகளை பார்க்கலாம்" என்றாள்.

சேகர் குப்தா: "இப்போது என்ன ஆயிற்று?".

சிறுமி, "அதெல்லாம் ஒரு வருடத்திற்கு முன்பு. அன்றைக்கு காலை சாப்பிட்டுவிட்டு தூளியில் இருந்த என் குட்டித் தம்பியோடு நான், வாப்பா, அம்மா, அண்ணன் என அனைவரும் விளையாடிக் கொண்டிருந்தோம். திடீரென்று பெரிய கூச்சல். கதவை தடதடவென யாரோ தட்டினார்கள். வாப்பாதான் கதவை திறந்தார். எதிரே நெற்றியில் பெரிய குங்கும கீற்றோடும் கையில் ஆயுதங்களோடும் பலர். அவர்கள்தான் கூச்சலிட்டிருக்க வேண்டும். "கட்வா" என்று ஒருவன் கத்திக்கொண்டு ஒருவன் கையிலிருந்த சூலாயுதத்தால் என் வாப்பாவை குத்தினான். மற்றொருவன் இரும்பு தடி போன்ற ஒன்றால் என் அம்மாவை மண்டையில் அடித்தான். என் அண்ணனை ஒருவன் அரிவாளால் வெட்டினான். தீடீரென்று என் தம்பி அழத்தொடங்க அவனை தூக்கிக்கொண்டு என் வீட்டு பின் கதவை திறந்துகொண்டு ஓடத் தொடங்கினேன். போன பிறந்தநாளுக்கு வாப்பா வாங்கிக் கொடுத்த என் பாவாடையெல்லாம் கல் தட்டியும், முள் தடுத்தும் கிழிந்து போனபோதும் நான் என் தம்பியோடு பல மணி நேரம் ரொம்ப தூரம் ஓடினேன். எங்கோ விழுந்துவிட்டேன். கண் விழித்து பார்த்தபோது அயோத்தியின் மறு கோடியில் நான் இருந்தேன். சிலர் உதவியோடு என் வீடு இருக்கும் இடத்திற்கு வந்து பார்த்தபோது அங்கே வெறும் புகை மண்டலங்களும், பாத்திரம், பாதணி இவை யாவும் வீதிதோறும் இரைந்து முற்றிலும் மண்மேடாக இருந்தது." அவள் கண்ணில் பெருகிய கண்ணீர் சேகர் குப்தாவின் தொண்டையை அடைத்தது.

சிறுமி கேட்டாள், "(வோ லோக் ஹைசா க்யோன் கியா)ஏன் அவர்கள் அப்படி செய்தார்கள்?".


Comments

dear gopi

you have posted an excellent piece that demands an emotional justice in a land sought to be poalrised on communal lines.

s v venugopalan
ramgopal said…
தொடர்ச்சியாக நான் வலைப்பூவில் இல்லாத போதும் தாங்கள் தொடர்ந்து வந்து பின்னூட்டம் செய்ததற்கு நன்றி. இந்த பகுதி புதுவையில் 09.05.2009 அன்று bsnleu, befi, aiiea, jipmer hospital employees union and confederation of state government employeஎச் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் தோழர் ஆர். முத்துசுந்தரம் (aisgf - secretaர்ய்) பேசியதிலிருந்து பதிவு செய்யப்பட்டது.

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

ஆனை மலை - வாசிப்பு அனுபவம்

அடர் காட்டுக்குள், பழங்குடிகளின் வாழ்வோடு உடன் பயணம் செய்ய வாய்ப்பு கொடுத்த உங்கள் நாவலுக்கு மிக்க நன்றி. எல்லாம் மரமே, பறப்பன எல்லாம் காக்கா, குருவியே என மட்டுமே சுட்டியிருந்த எனக்கு காடு என்பதுள்ளான வாழ்வு ஒன்று உண்டு என்பதை நக்கீரன் காடோடியில் உணர்த்தியிருந்தார். அதை மீண்டும் மீண்டும் நினைவூட்டியதற்கு உங்களுக்கு பெரு நன்றி தோழர். காடு என்பதற்குள்ளும் ஒரு உலகம் இயங்குகிறது, சென்னையின் நதிக்கரையோரம் வாழ்ந்திடும் குடும்பங்கள் / அவ்வளவாக கவனம் பெறாத ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள(வைக்கப்பட்டுள்ள) அந்த கீழ்த்தட்டு மக்கள் வாழிடங்கள் மத்தியிலும் ஒரு உலகம் இயங்குகிறது, அங்கிருக்கும் மனிதர்கள் மட்டுமே அல்ல உயிரினங்களும் முக்கியமே, வேறெங்கும் அவ்வளவாக காணக் கிடைத்திராத மனிதர்கள்-விலங்கினங்கள் இடையேயான பரஸ்பர உறவு, பேச்சுவார்த்தை என்பது இவ்விடங்களில் ஆழமாக, அழகாக இருக்கிறது என சாதாரணர்களுக்கு உரைத்திடவே ஒரு படைப்பு தேவைப்படுகிறது. அவ்வகையில் இப்படைப்பு ‘ஆனைமலை” முக்கியத்துவம் பெறுகிறது என நினைக்கிறேன். இந்நாவலில் கூடுதலாக மனிதர்கள்-விலங்குகள்-மரங்கள்/செடிகள் என முக்கோண ஒரு உறவாடலும், உரையாடலு...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச ப...

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் - நூல் அறிமுகம்

 கொரானா ஊரடங்கு காலத்தில் புத்தகங்கள் வாய்ப்பு கிடைத்தும் பல்வேறு காரணங்களால் புத்தக வாசிப்பு என்பது ஒன்றும் அத்தனை ஜுரூராக நடக்கவில்லை. அவ்வப்போது படிக்க வேண்டும் படித்தே ஆக வேண்டும் என எனக்குத் தோன்றியது என சில மட்டுமே படித்தேன். அப்படி ஜனவரி 2020 புத்தக கண்காட்சியில் வாங்காமல் விட்டுவிட்ட ஒரு புத்தகம் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் அவர்களின் நினைவுகளும் நிகழ்வுகளும் புத்தகம். ரிவோல்ட் வெளியீடு. புலம் டிசைன். வெண்மணி படுகொலை அதையொட்டிய நிகழ்வுகள் என்பதாலே புத்தகம் வெகு விரைவாக தடதடத்து செல்கிறது. தொய்வே இல்லை. ஓரிரவு பொழுதில் படித்து முடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது இப்புத்தக வாசிப்பு. பாரதி புத்தகாலயத்தாரின் வெளீயீட்டில் வந்த வெண்மணி : வாய்மொழி வரலாறு, தென்பரை முதல் வெண்மணி வரை முதலான புத்தகங்களின் வரிசையில் ரிவோல்ட் வெளியீட்டின் இப்புத்தகமும் படிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வெண்மணி படுகொலை வரலாற்று கொடும்நிகழ்வில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் என்பதோடு மற்றொன்று கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் ஆகியோரின் பங்களிப்பும் என மும்முனைகள் இருக்கின்றன. இதில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய இயக்கங...