Nine
Rupees An Hour – disappearing livelihoods of Tamil Nadu. இந்நூலின்
ஆசிரியர் அபர்ணா கார்த்திகேயன்.
இவர்
பி.சாய்நாத்
அவர்களின் மாணவி. இப்போதே
ஊகித்திருப்பீர்கள் தானே!
ஆமா,
இந்த
நாட்டின் எளிய மனிதர்களும்
அவர்களது வாழ்வும்,
தொழிலும்
அவர்கள் கலையும் தான் பேசுபொருள்.
நூலின்
அடிசரடாக இருக்கும் விஷயங்கள்
எளிய மனிதர்களின் அயராத
உழைப்பும் அந்த உழைப்பை
உழைப்பாகவே அங்கீகரிக்காத
பாங்கும், அதை
appropriateசெய்யாத
பொருளாதார பயன்களும் -
பரம்பரை
பரம்பரையாக பார்த்து வரும்
தொழிலை தனக்குப் பின்னே கடத்த
விரும்பயும் கடத்த துணியாத
வாழ்வு நிச்சயமற்ற சூழல் -
தனித்திறன்
கொண்ட தொழில்கள், அவைகளால்
கிடைக்கும் அங்கீகாரம் ஆனால்
வாழ்வு ஏற்றம் பெறாத பொருளாதாரம்
என்பவனவே. அதே
போல, ஏழை
எளியர்களின் நாட்டுப்புறக்
கலைகள் எனப்படும் அவர்களின்
கலைஞானமும், அக்கலைஞர்களின்
அன்றாட வாழ்வும் அக்கலைகளுக்கும்
அக்கலைஞர்களுக்குமான சமூக
placing என்பனவும்
இந்நூலில் பேசுபடு பொருளாக
இருக்கிறது.
இந்தியாவெங்கும்
போலவே தமிழகத்திலும் விவசாயம்
தொடர்து நட்டம் தரும் தொழிலாக
மாறி அத்தொழிலின் பங்குதாரர்கள்
(விவசாயிகள்,
விவசாய
கூலிகள் இன்ன பிற) தற்கொலை
செய்துகொள்வது, பத்தமடை
பாய் - காஞ்சிபுரம்
சேலை - திருப்பாச்சி
அரிவாள் ஆகிய ஒரு காலத்திய
மவுசு மிக்க பொருட்களுக்கு
காலப்போக்கில் மவுசு குறைய
அந்த தொழிலும் அதன் கண்
தொழிலாளர்களும் நலிவு காண்பது
என்பனவற்றோடு நாட்டுப்புறக்
கலைகளான கரகாட்டம்,
ஒயிலாட்டம்,
கட்டைக்
கூத்து, பொய்க்கால்
குதிரை ஆட்டம் ஆகிய கலைகளின்
தேய்வும், அந்த
கலைஞர்களின் நலிவடைந்து
வரும் வாழ்வும் ஆகியன ஓரளவு
நாம் அறிந்த விஷயங்களே.
பின் என்ன
இருக்கு, இந்நூலில்?
இவ்வளவு
ஆழம் என சொன்னா தெரியாது,
அளந்து
பார்த்தா ஆபத்து புரியும்
என சொல்வார்கள். அது
போல ஒவ்வொரு தொழிலின் நசிவும்,
பொருளாதார
பின்னடைவுகளும் அத்தொழிலில்
ஈடுபட்டவர்களை கண்டு அவர்களை
பேட்டி எடுக்கையில் வரும்
உண்மைகள் அதிர்ச்சியளிக்கிறது.
வழக்கம்
போல் எல்லா தொழில்களிலும்
கால நேரம் இன்றி பெண்கள்
நாளின் பெரும்பகுதி நேரங்கள்
உழைப்பிலே செலவிடுகின்றனர்.
கணவன்
அதிகாலை எழுந்து பனையேறி கள்
இறக்க அவரோடு எழுந்து பனைவெல்லம்
தயாரிக்கும் பெண்களில் ஒருவர்
பிரசவம் முடிந்து ஒரு மாதத்திலேயே
அந்த கொதிகலன் உட்கார்ந்து
நாள்முழுக்க வேலை செய்ததை
சொல்லுகையில் நம்முள் ஏறும்
அதிர்வு சொல்லி முடியாது.
என்ன
செய்ய, எங்களுக்கு
வேறு வழி என வாக்கியமே புத்தகம்
நெடுக வருகிறது. வழி
சொல்ல வேண்டிய அரசும் சமூகமும்
வாய் மூடி இருப்பதும் புரிகிறது.
உலகமயம்
எல்லா எளிய மக்களின் வாழ்வையும்
தூக்கி எறிந்திருக்கிறது.
நூல்
முழுவதும் புலம்பல்கள்,
துயரங்கள்,
கண்ணீர்
கதைகள் மட்டுமே இல்லை.
மாறாக,
துறை சேர்ந்த
வல்லுநர்களிடத்து இப்பிரச்சனைகளின்
தன்மையையும், பிரச்சனைகளுக்கான
அசல் காரணிகள், தீர்வுகள்
எனவும் விவாதிக்கப்படுகின்றன.
அதுவே
இந்நூலின் சிறப்பு.
விவசாயிகள்/சிறுகுறு
தொழில்கள்-வங்கிகள்
ஆதரவு குறித்து ஸ்டேட் பாங்க்
ஆப் இந்தியா ஊழியர்கள்
சங்கத்தின் முன்னாள் தலைவர்
தோழர் தாமஸ் பிரான்கோ அவர்களின்
பேட்டி மிக முக்கியமானது.
விவசாய
சங்கங்கள் உண்மையில் அவரை
தாராளமாக உதவ கோரலாம்.
விவசாய
கடன் அப்படியே தள்ளுபடி செய்ய
விவசாயிகள் நினைப்பதில்லை,
மாறாக
அவர்கள் உண்மையில் திருப்பி
கட்டவே விரும்புகிறார்கள்,
பட்டினியாய்
கிடந்தாலும். திடீரென்று
எதிர்பாராத நடக்கும் பேரழிவுகளில்
மட்டுமே அவர்கள் தள்ளுபடியினை
கோருகிறார்கள் என்பதிலிருந்து
வங்கிகள் உலகமயத்திற்குப்
பின்னான காலங்களில் விவசாயம்
மற்றும் சிறுகுறு தொழில்கள்
ஆகிய இந்நாட்டின் அடிப்படை
தொழில்களுக்கான ஆதரவை
விலக்கிக்கொள்ள கட்டாயப்படுத்தபட்டன
என்பதையும் நன்றாகவே சொல்லுகிறார்
தோழர் பிராங்கோ.
இந்நூலின்
அடுத்த இரு பிரமாதமான பேட்டிகள்,
ஒன்று
பி.சாய்நாத்
அவர்களுடையது மற்றொன்று
இசைமேதை டி.எம்.கிருஷ்ணா
அவர்களுடையது. பரம்பரை
தொழில்களின் பின்னே பரம்பரை
அறிவு திறன் என்பன "சாதி"
யாக உள்ளதால்
அத்திறன்களும் அத்திறன்கள்
கொண்டு செய்யப்படும் தொழில்களும்
நசிவுறுகின்றன, காலப்போக்கில்
காணாமல் போகின்றனவே,
இதற்கு
என்ன செய்வது எனக் கேட்க,
பி.
சாய்நாத்
முதல் வாக்கியமாக சொல்வது,
எது எப்படி
இருந்தாலும், சாதி
என்பது ஒழிக்கப்பட வேண்டியது
என்பதைத்தான். பின்பு
வர்க்க வேறுபாடுகளும் சாதி
அடுக்குகளும் எவ்வாறு ஒன்றோடு
ஓன்று பிண்ணி இணைந்து
வேலைசெய்கிறது என்பதையும்
விளக்குகிறார். இதோடு
ஏழை எளியவர்களின் எளிய தொழிலாக
அதிக பொருளாதார பயன் இன்றி
இருந்தது எவ்வாறு இன்று elite
மக்களுக்கான
தொழிலாக மாறி பணம் பண்ணப்பட்டு
வருகிறது என்பதையும் சொல்கிறார்.
அதோடு
அத்தொழிலை பாரம்பரிய பாரம்பரியமாக
செய்து வந்த போது அவர்கள்
மீது சுமத்தப்பட்ட சாதி
முத்திரை eliteமக்கள்
அதே தொழிலை செய்கையில் காணாமல்
போய் உள்ளதையும் அவர்
காட்டுகிறார். கூடவே,
எல்லா
தொழிலும் அவ்வாறு மாறவில்லை
என்பதையும் அவர் சுட்டிக்
காட்ட தவறவில்லை.
இசை
வித்வான் டி.எம்.கிருஷ்ணா
தோழரின் பேட்டி சிறப்பாக
இருக்கிறது. நாட்டுப்புறக்
கலைகளுக்கு கொடுக்கப்படும்
கவனமும் பரதம் போன்ற கலைகளுக்கு
கொடுக்கப்பட்டும் கவனமும்
மிகவும் ஆழமாக பேசப்படுகிறது
பேட்டியில். நாட்டுப்புறக்
கலைகளுக்கு தமிழகம் உரிய
விதத்தில் உதவுகிறது என்பதை
ஏற்க இயலாது. வெறும்
கலைமாமணி பட்டங்களும்,இசை
கல்லூரிகள் மட்டுமே போறாது.
உண்மையில்
கலை அமைப்புகளை கல்வியில்,
சமூக
கலாச்சார செயல்பாடுகளில்,
கலைகளை
பயிற்றுவித்து பயிற்சி
அளிப்பதும் அத்தியாய தேவை.
மற்றொரு
இடத்தில் தலித் மக்களிடையே
சென்று அவர்களின் சமையல்,
அவர்களின்
நடனம், இசை
என்பவை மிக சிறப்பு மிக்கவை,
இந்த
நாட்டின் கலாச்சாரத்திற்கு
அடிப்படையானவை என்று எப்போதாவாது
நாம் சொல்லியிருக்கிறோமா
என தோழர் டி.எம்.கிருஷ்ணா
கேள்வி எழுப்புகிறார்.
நூலாசிரியர்
பி.சாய்நாத்தின்
மாணவி என்பது அவர் பி.சாய்நாத்
அவர்களின் pari networkஇல்
பணிபுரிந்திருக்கிறார் என
புரிந்திட வேண்டும்.
ஒரு முறை
அந்த வலைத்தளத்தை
WWW.RURALINDIAONLINE.ORGசென்று
பார்த்திட்டால் எளிய மக்கள்
வாழ்வு நமக்கு புரியும்.
பி.சாய்நாத்
அவர்களின் Everybody loves a good
droughtநூல்
மிக முக்கியமானது.
அவ்வகையில்
Nine rupees an hourநூலும்
மிக முக்கியமானதே. எளிய
மக்களின் வாழ்வும்,
பொருளாதாரமும்,
கலையும்
தெரிந்திட சமூகத்தில் நமக்கு
வேலை என்ன என்ற கேள்வியும்
புரியும். இறுதியாய்
நின்ற கேள்வி, ஓரளவு
முற்போக்கு விழுமியங்கள்,
சமூக
பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க
முன்னேற்றங்கள் அடைந்த பகுதி
தமிழகம் என்று மார்தட்டும்
விஷயத்திற்கு பின்னே மறைந்துள்ள
எளிய மனிதரது வாழ்வாதாரங்களே
இப்படி இருக்க, நாட்டின்
வட மாநிலங்கள் நிலை?
நன்றி
அபர்ணா கார்த்திகேயன்.
x
Comments
I'm so glad the stories and the telling worked for you, and importantly, the interviews through which I had hoped to give more context and commentary to the issues.
As you rightly conclude, what was - is - very worrying is that, if this is the case in one of the better performing states, how are people even coping elsewhere? We have a lot to answer for, as a society....
Thanks again,
Aparna Karthikeyan.