Skip to main content

THE ANATOMY OF HATE - நூல் அறிமுகம்



வெறுப்பின் உடற்கூறியல், இப்படி மொழிபெயர்க்கலாம் என நினைக்கிறேன். ரேவதி லால் என்னும் பத்திரிகையாளர் எழுதியுள்ள புத்தகம் இது. குஜராத் கலவரம் 2002 இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று. பாசிசத்தின் தொடக்கம் அது. ஒரு மாநிலத்தில் தொடங்கிய பாசிசம், பின்பு நாட்டின் அரசு அதிகாரமாக உருப்பெற உதவிய கலவரம். இந்நூலின் ஆசிரியர் குஜராத் கலவரங்கள் 2002ல் ஈடுபட்ட மூவரின் வாழ்க்கையை ஆராய்ந்து அதன் மூலம் இந்த வெறுப்பின் பின்னணியை அறிய முயல்கிறார், '


சுமார் 3 வருட உழைப்பில் பல்வேறு சிரமங்கள் இடையே இந்தப் புத்தகம் உருவானது. பாரதி புத்தகாலயத்தின் வெளியீடுகளான ராணா அயூப்பின் குஜராத் கோப்புகள் மற்றும் ஸ்ரீகுமாரின் குஜராத் கலவரம் ஆகிய இரு புத்தகங்களை படித்தவர்களுக்கு இந்தப் புத்தகம் அதிக அதிர்ச்சிகளை தராது. மூன்று வெவ்வேறு பின்னணிகளை கொண்டவர்கள் இந்தக் கலவரங்களில் எவ்வாறு பங்கெடுத்தனர், கலவரங்களுக்கு பின்னான காலங்களில் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதையே ஆசிரியர் ஆய்ந்து இருக்கிறார். கலவரம், மோதல் என என்னதான் சொன்னாலும் அதில் ஈடுபட்ட மக்களின் உளவியலும், சமூக சுழல் ஆகிய காரணிகளும் முக்கியமாகின்றன.
குஜராத் மிகவும் முன்னேறிய மாநிலம் எனப்படும் தொடர் பொய்யினை இந்த நூலும் உறுதி செய்கிறது. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை மணமுடித்தால் தான் அவளை பழிவாங்க முடியும் என்ற கருதி மணம் முடித்து அவளை அவ்வப்போது கொடுமை செய்கிறான். எந்தவித குற்ற உணர்வும் இல்லாது கலவர காலங்களில் இஸ்லாமிய பெண்களை வல்லுறுவு செய்து கொன்றதை மிக பெருமையோடு மனைவியிடம் சொல்கிறான்.
என்ன வேண்டுமானாலும் செய்யலாம், சட்டத்திற்கு முன் காப்பாற்ற அரசு இருக்கிறது என்ற நினைப்பே அவர்களை குற்றச் செயல்களை செய்ய தூண்டுகிறது. ஒன்றாகவே வாழிடம் இருந்தாலும் ஒன்னுக்குள் ஒன்றாகவே இருந்தாலும் இஸ்லாமியர்களை விரோதம் கொள்ள மட்டுமல்ல, அவர்களை கொன்று அழிக்கும் வன்மமும் நீறு பூத்த நெருப்பாக அந்த சமூகத்தில் வைத்திருந்த மோசடி வித்தையை சங் பரிவாரம எவ்வாறு செய்கிறது என்பதையும் அறிய முடிகிறது. கலவரங்களில் ஈடுபட்டவர்கள் பின்னர் பாஜகவின் பிரதிநிதிகளாக தேர்தலில் நிறுத்தப்பட்டு, மந்திரிகளாக, மக்கள் பிரதிநிதிகளாக மாறியதையும் இப்புத்தகம் சொல்கிறது.
குஜராத் பூகம்ப காலத்தில் ஆர்.எஸ்.எஸ் உதவி செய்வதை கண்டு அதன் மேல் ஈர்ப்பு கொண்டு பின்னாள் கலவர காலங்களில் தான் கொல்லுதல், அடித்தல் ஆகியவைகளில் ஈடுபடாவிட்டாலும் வேடிக்கை பார்க்கவும் மனம் வந்தது எவ்வாறு என் அறிய ஒருவர் துடிக்கிறார். பின்னாள் எந்தக் கலவரத்தில் வேடிக்கை மட்டும் பார்த்தாரோ அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதே பாவத்தின் பிரகாரம் என செயல்படுவதை நாம் பார்க்க முடிகிறது. அவர் திருமணத்தில் சடங்கினை மறுப்பதையும், தன் குழந்தையை நாத்திகம் சொல்லி வளர்ப்பதையும் அவர் முற்றிலும் விஷமான சமூகத்தில் தன்னையும் தன் குடும்பத்தையும் அந்த நச்சு வாயு தாக்காமல் தற்காத்து கொள்ளும் வித்தையாக கைகொள்வதை காண முடிகிறது.
இதை படிக்கையில் எனது நினைவுக்கு வந்த ஒரு விஷயம். இது போன்று ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் குஜராத் கலவரங்களில் பாஜகவின் முக்கிய பங்கினை வெளிப்படையாக ஆதாரங்களோடு பேசி பல புத்தகங்கள் வந்துள்ளன. இந்தப் புத்தகங்களை படிக்கும் எவரும் பாஜகவை பிரதமர் மோடியை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படியிருக்க, இந்த புத்தகங்களுக்கு பாஜக தரும் எதிர்வினை தான் என்ன? முதலில் வணிக ரீதியாக அந்தப் புத்தகங்களின் ரேட்டிங்கினை குறைக்கும் விதமாக செயல்படுவது, இல்லை கண்டும் காணாமல் விடுவது.
அது சரி, பாரதி புத்தகாலயத்தின் குஜராத் கோப்புகள் எத்தனை பிரதிகள் விற்பனையானது? தமிழகம் பாஜக சங் பரிவாரங்களில் தற்காத்து கொள்ள இது போன்ற புத்தகங்கள் வாசிப்பும், விற்பனையும் மிக முக்கியமானது. தமிழகத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள் என்ற ஒன்று மட்டுமே தமிழகம் பாஜக தாக்குதலில் இருந்து தப்ப உதவாது. சங் பரிவாரங்களின் செயல்பாடுகள், செயல் திட்டங்கள், மக்களிடையே அவர்கள் செயல்படும் விதம் இவற்றோடு பாஜக தலைவர்களின் மோசடிகளையும் படிப்பது நல்லது.
பார்ப்போம், நிழல் இராணுவங்கள் போல் இந்தப் புத்தகமும் தமிழாக்கம் காணும் என நம்புவோம்.


Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற