வெறுப்பின்
உடற்கூறியல்,
இப்படி
மொழிபெயர்க்கலாம் என நினைக்கிறேன்.
ரேவதி
லால் என்னும் பத்திரிகையாளர்
எழுதியுள்ள புத்தகம் இது.
குஜராத்
கலவரம் 2002
இந்திய
வரலாற்றில் மிக முக்கியமான
ஒன்று.
பாசிசத்தின்
தொடக்கம் அது.
ஒரு
மாநிலத்தில் தொடங்கிய பாசிசம்,
பின்பு
நாட்டின் அரசு அதிகாரமாக
உருப்பெற உதவிய கலவரம்.
இந்நூலின்
ஆசிரியர் குஜராத் கலவரங்கள்
2002ல்
ஈடுபட்ட மூவரின் வாழ்க்கையை
ஆராய்ந்து அதன் மூலம் இந்த
வெறுப்பின் பின்னணியை அறிய
முயல்கிறார்,
'
சுமார்
3
வருட
உழைப்பில் பல்வேறு சிரமங்கள்
இடையே இந்தப் புத்தகம் உருவானது.
பாரதி
புத்தகாலயத்தின் வெளியீடுகளான
ராணா அயூப்பின் குஜராத்
கோப்புகள் மற்றும் ஸ்ரீகுமாரின்
குஜராத் கலவரம் ஆகிய இரு
புத்தகங்களை படித்தவர்களுக்கு
இந்தப் புத்தகம் அதிக அதிர்ச்சிகளை
தராது.
மூன்று
வெவ்வேறு பின்னணிகளை கொண்டவர்கள்
இந்தக் கலவரங்களில் எவ்வாறு
பங்கெடுத்தனர்,
கலவரங்களுக்கு
பின்னான காலங்களில் எவ்வாறு
இருக்கிறார்கள் என்பதையே
ஆசிரியர் ஆய்ந்து இருக்கிறார்.
கலவரம்,
மோதல்
என என்னதான் சொன்னாலும் அதில்
ஈடுபட்ட மக்களின் உளவியலும்,
சமூக
சுழல் ஆகிய காரணிகளும்
முக்கியமாகின்றன.
குஜராத்
மிகவும் முன்னேறிய மாநிலம்
எனப்படும் தொடர் பொய்யினை
இந்த நூலும் உறுதி செய்கிறது.
இஸ்லாமிய
சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை
மணமுடித்தால் தான் அவளை
பழிவாங்க முடியும் என்ற கருதி
மணம் முடித்து அவளை அவ்வப்போது
கொடுமை செய்கிறான்.
எந்தவித
குற்ற உணர்வும் இல்லாது கலவர
காலங்களில் இஸ்லாமிய பெண்களை
வல்லுறுவு செய்து கொன்றதை
மிக பெருமையோடு மனைவியிடம்
சொல்கிறான்.
என்ன
வேண்டுமானாலும் செய்யலாம்,
சட்டத்திற்கு
முன் காப்பாற்ற அரசு இருக்கிறது
என்ற நினைப்பே அவர்களை குற்றச்
செயல்களை செய்ய தூண்டுகிறது.
ஒன்றாகவே
வாழிடம் இருந்தாலும் ஒன்னுக்குள்
ஒன்றாகவே இருந்தாலும்
இஸ்லாமியர்களை விரோதம் கொள்ள
மட்டுமல்ல,
அவர்களை
கொன்று அழிக்கும் வன்மமும்
நீறு பூத்த நெருப்பாக அந்த
சமூகத்தில் வைத்திருந்த
மோசடி வித்தையை சங் பரிவாரம
எவ்வாறு செய்கிறது என்பதையும்
அறிய முடிகிறது.
கலவரங்களில்
ஈடுபட்டவர்கள் பின்னர்
பாஜகவின் பிரதிநிதிகளாக
தேர்தலில் நிறுத்தப்பட்டு,
மந்திரிகளாக,
மக்கள்
பிரதிநிதிகளாக மாறியதையும்
இப்புத்தகம் சொல்கிறது.
குஜராத்
பூகம்ப காலத்தில் ஆர்.எஸ்.எஸ்
உதவி செய்வதை கண்டு அதன் மேல்
ஈர்ப்பு கொண்டு பின்னாள்
கலவர காலங்களில் தான் கொல்லுதல்,
அடித்தல்
ஆகியவைகளில் ஈடுபடாவிட்டாலும்
வேடிக்கை பார்க்கவும் மனம்
வந்தது எவ்வாறு என் அறிய
ஒருவர் துடிக்கிறார்.
பின்னாள்
எந்தக் கலவரத்தில் வேடிக்கை
மட்டும் பார்த்தாரோ அதில்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு
உதவி செய்வதே பாவத்தின்
பிரகாரம் என செயல்படுவதை
நாம் பார்க்க முடிகிறது.
அவர்
திருமணத்தில் சடங்கினை
மறுப்பதையும்,
தன்
குழந்தையை நாத்திகம் சொல்லி
வளர்ப்பதையும் அவர் முற்றிலும்
விஷமான சமூகத்தில் தன்னையும்
தன் குடும்பத்தையும் அந்த
நச்சு வாயு தாக்காமல் தற்காத்து
கொள்ளும் வித்தையாக கைகொள்வதை
காண முடிகிறது.
இதை
படிக்கையில் எனது நினைவுக்கு
வந்த ஒரு விஷயம்.
இது
போன்று ஆங்கிலத்திலும்,
ஹிந்தியிலும்
குஜராத் கலவரங்களில் பாஜகவின்
முக்கிய பங்கினை வெளிப்படையாக
ஆதாரங்களோடு பேசி பல புத்தகங்கள்
வந்துள்ளன.
இந்தப்
புத்தகங்களை படிக்கும் எவரும்
பாஜகவை பிரதமர் மோடியை ஏற்றுக்
கொள்ள முடியாது.
அப்படியிருக்க,
இந்த
புத்தகங்களுக்கு பாஜக தரும்
எதிர்வினை தான் என்ன?
முதலில்
வணிக ரீதியாக அந்தப் புத்தகங்களின்
ரேட்டிங்கினை குறைக்கும்
விதமாக செயல்படுவது,
இல்லை
கண்டும் காணாமல் விடுவது.
அது
சரி,
பாரதி
புத்தகாலயத்தின் குஜராத்
கோப்புகள் எத்தனை பிரதிகள்
விற்பனையானது?
தமிழகம்
பாஜக சங் பரிவாரங்களில்
தற்காத்து கொள்ள இது போன்ற
புத்தகங்கள் வாசிப்பும்,
விற்பனையும்
மிக முக்கியமானது.
தமிழகத்திற்கு
எதிராக செயல்படுகிறார்கள்
என்ற ஒன்று மட்டுமே தமிழகம்
பாஜக தாக்குதலில் இருந்து
தப்ப உதவாது.
சங்
பரிவாரங்களின் செயல்பாடுகள்,
செயல்
திட்டங்கள்,
மக்களிடையே
அவர்கள் செயல்படும் விதம்
இவற்றோடு பாஜக தலைவர்களின்
மோசடிகளையும் படிப்பது நல்லது.
பார்ப்போம்,
நிழல்
இராணுவங்கள் போல் இந்தப்
புத்தகமும் தமிழாக்கம் காணும்
என நம்புவோம்.
Comments