............. "பிறகு சித்திரவதை முகாம்கள் குறித்து அவர் ஆய்வு செய்கிறார். போர்த்தந்திர வியூகம் வகுக்கும் கூட்டங்களில் பங்கேற்கிறார். ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். அவரை அப்படியே விட்டுவிட்டு சட்டென்று தொலைபேசியில் பேசப் போய்விடுகிறார். தன் ஓவியம், தன் சிற்பத்துக்கு சட்டென "போஸ்" கொடுத்துக் கொண்டு நிற்கிறார். அடுத்த நிமிடம் வெளியே வந்துவிடுகிறார். இப்படியாக சர்வாதிகாரியின் ஒரு நாள் சுறுசுறுப்பாகவும் பரப்புரடனும் நகர்கிறது. அதேவேளை, பெரும் குழப்படியாகவும் இருக்கிறது.”
மேற்கண்ட வாக்கியங்கள் படிக்கையில் உங்கள் மனதுக்கு உடனே வரும் அந்த நபரின் முகம் எப்படி இருக்கிறது? அவர் யாராக இருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள்? இதுதான் இந்தப் புத்தகத்தின் இலக்கு. அவரது சித்திரம் குறித்த உங்களின் சரியான மதிப்பீடே இந்தப் புத்தகத்தின் வெற்றி. அநேகம் பேர் சரியான நபரை உத்தேசித்திருப்பீர்கள் என்பது திண்ணம்.
மௌனப் படங்களின் தன்னிகரில்லாத நாயகன் என அறியப்படும் சார்லி சாப்ளின் அவர்கள் பேசி நடித்த ஒரே படம், “The Great Dictator”. யூடியூப்பில் இன்றும் அதை கண்டு மகிழலாம். அந்தப் படத்தின் கதை வசனத்தை, கதையை சுருக்கமாக வடித்து தமிழில் புத்தகமாக்கி இருக்கிறது, பாரதி புத்தகாலயம். ஆதி வள்ளியப்பன் தன் வழமையாக எளிய தமிழில் எவருக்கும் புரியும் வண்ணம் எழுத்தாக்கி இருக்கிறார்.
ஏதோ சார்லி சாப்ளின் அவர்களின் இந்தப் படம் குறித்து பேசுவதற்காக இப்போது உருவாக்கப்பட்டதல்ல இந்தப் புத்தகம். அதன் மைய கருத்தை, சர்வாதிகாரம் என்றால் என்ன என்பதை மிகவும் வெளிப்படையாக தற்போதைய இந்திய சூழலையும் இணைத்தே ஆதி வள்ளியப்பன் அவர்கள் படைத்திருக்கிறார். இருண்ட காலங்களில் எதைப் பேச? இருண்ட காலங்களைப் பற்றித்தான் என்ற சொற்றொடர் உண்டு. வரலாறுகள் தொடர்ந்து மக்களிடையே நினைவுக்கு கொண்டு வருதல் ஒன்றே நிகழ்காலத்தை காத்திடும். ஆம், முகநூலில் சமூக வலைத்தளங்களில் பகடி செய்தால் மட்டுமே சர்வாதிகாரம் வீழ்ந்துவிடாது. அதை மூர்க்கமாக எதிர்க்க வேண்டும். பாசிசம் என்பது கொடிது. அது வரலாறு எங்கும் பல்லாயிரம் உயிர்களை, கலை இலக்கியங்களை, நாகரிகத்தை தகர்த்து காலத்தை பின்னோக்கி இழுக்க முயற்சி செய்து தோற்று இருக்கிறது. அதே சமயம் சில காலங்கள் கோலோச்சி நின்று இருக்கிறது என்கிற பெரிய உண்மைதான் கவலைக்குரியது. இந்தியா போன்ற வேற்றுமைப் பண்புகள் நிறைந்த நாட்டில், ஒற்றைப் பண்பினை நிலைநாட்டுவது என்பது பாசிசமே என்பது புரிய வேண்டும். புரிவதற்கு இந்தப் புத்தகம் துணை நிற்கும்.
ஆதி வள்ளியப்பன் + பாரதி புத்தகாலயத்தின் வெற்றிக் கூட்டணி தொடர்கிறது. பாரதி புத்தகாலயம் ரூ.30க்கு இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. நமது கடமை நமது தோள்கள் வலிக்க இப்புத்தகங்களை ஏந்தி வாய்வலிக்க மக்களோடு பேசி சலிப்படையாது பாசிசத்தை வீழ்த்த வேண்டும்
மேற்கண்ட வாக்கியங்கள் படிக்கையில் உங்கள் மனதுக்கு உடனே வரும் அந்த நபரின் முகம் எப்படி இருக்கிறது? அவர் யாராக இருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள்? இதுதான் இந்தப் புத்தகத்தின் இலக்கு. அவரது சித்திரம் குறித்த உங்களின் சரியான மதிப்பீடே இந்தப் புத்தகத்தின் வெற்றி. அநேகம் பேர் சரியான நபரை உத்தேசித்திருப்பீர்கள் என்பது திண்ணம்.
மௌனப் படங்களின் தன்னிகரில்லாத நாயகன் என அறியப்படும் சார்லி சாப்ளின் அவர்கள் பேசி நடித்த ஒரே படம், “The Great Dictator”. யூடியூப்பில் இன்றும் அதை கண்டு மகிழலாம். அந்தப் படத்தின் கதை வசனத்தை, கதையை சுருக்கமாக வடித்து தமிழில் புத்தகமாக்கி இருக்கிறது, பாரதி புத்தகாலயம். ஆதி வள்ளியப்பன் தன் வழமையாக எளிய தமிழில் எவருக்கும் புரியும் வண்ணம் எழுத்தாக்கி இருக்கிறார்.
ஏதோ சார்லி சாப்ளின் அவர்களின் இந்தப் படம் குறித்து பேசுவதற்காக இப்போது உருவாக்கப்பட்டதல்ல இந்தப் புத்தகம். அதன் மைய கருத்தை, சர்வாதிகாரம் என்றால் என்ன என்பதை மிகவும் வெளிப்படையாக தற்போதைய இந்திய சூழலையும் இணைத்தே ஆதி வள்ளியப்பன் அவர்கள் படைத்திருக்கிறார். இருண்ட காலங்களில் எதைப் பேச? இருண்ட காலங்களைப் பற்றித்தான் என்ற சொற்றொடர் உண்டு. வரலாறுகள் தொடர்ந்து மக்களிடையே நினைவுக்கு கொண்டு வருதல் ஒன்றே நிகழ்காலத்தை காத்திடும். ஆம், முகநூலில் சமூக வலைத்தளங்களில் பகடி செய்தால் மட்டுமே சர்வாதிகாரம் வீழ்ந்துவிடாது. அதை மூர்க்கமாக எதிர்க்க வேண்டும். பாசிசம் என்பது கொடிது. அது வரலாறு எங்கும் பல்லாயிரம் உயிர்களை, கலை இலக்கியங்களை, நாகரிகத்தை தகர்த்து காலத்தை பின்னோக்கி இழுக்க முயற்சி செய்து தோற்று இருக்கிறது. அதே சமயம் சில காலங்கள் கோலோச்சி நின்று இருக்கிறது என்கிற பெரிய உண்மைதான் கவலைக்குரியது. இந்தியா போன்ற வேற்றுமைப் பண்புகள் நிறைந்த நாட்டில், ஒற்றைப் பண்பினை நிலைநாட்டுவது என்பது பாசிசமே என்பது புரிய வேண்டும். புரிவதற்கு இந்தப் புத்தகம் துணை நிற்கும்.
ஆதி வள்ளியப்பன் + பாரதி புத்தகாலயத்தின் வெற்றிக் கூட்டணி தொடர்கிறது. பாரதி புத்தகாலயம் ரூ.30க்கு இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. நமது கடமை நமது தோள்கள் வலிக்க இப்புத்தகங்களை ஏந்தி வாய்வலிக்க மக்களோடு பேசி சலிப்படையாது பாசிசத்தை வீழ்த்த வேண்டும்
Comments