
இப்போதுதான் முதல் தடவையாய் என் குடும்பம், அண்ணனுடையது, அப்பா அம்மா என எல்லாரும் கேரள மாநிலம் குருவாயூருக்கு திருமணம் நிமித்தமாய் சென்றிருந்தோம். திருமணத்திற்கு இரன்டு நாள் முன்பே நாங்கள் அங்கிருந்தோம். திருமணம் சாக்காய் வைத்துக்கொண்டு கடவுளின் சொந்த நிலமான கேரளத்தில் சில பகுதிகளையாவது காணலாம் என்பதே எங்கள் திட்டம்.
திட்டத்தின்படியே முதல் நாள் குருவாயூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான 51 யானைகள் ஒன்றாக வைக்கப்பட்டிருக்கும் புன்னத்தூர் யானைகோட்டம் சென்றோம். அப்பப்பா, அது நிச்சயமாய் பிரம்மாண்டம். முதலாவது, விலங்குகள் இருக்கின்ற இடத்தில் ஒரு வீச்சம் இருக்குமே அங்கு இல்லை. குழந்தைகள் போல் ஒவ்வொரு யானையும் பாகனோடு குளிப்பது, தின்பது என்று அட, அட. காண வேண்டும் இலட்சம் கண்கள், சீதாதேவி தன் காலுக்கு நிகரோ பெண்கள் என்று கர்நாடக கீர்த்தனை ஒன்று உண்டு. இலட்சம் கண்கள் தேவைபடாவிட்டாலும், 51ஆவது நிச்சயம் வேண்டும். உள்ளே பிரவேசிக்கும்போதே ஒரு குட்டி யானை தலையாட்டி ஆட்டி எங்களை வரவேற்றது.
மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பி அம்மாவின் ஆசைக்கிணங்க கொடுங்கல்லூர் பகவதி கோயிலுக்கு சென்றோம். அபி தூங்கிவிட்ட படியால் நான் உள்ளே செல்லவில்லை. மற்ற அனைவரும் சென்று வந்தனர். சட்டை, பனியன், சுடிதார், லுங்கி, பேன்ட் இவற்றுக்கெல்லாம் அனுமதி இல்லை கோவிலுக்குள். அம்மா உள்ளே போய்விட்டு வந்து சொன்னார், "என்ன ஒன்றுமே புரியலை, எனக்கு மட்டும் பிரசாதம் தரவில்லை." சரி விடும்மா பார்த்துக்கலாம் என அனைவரும் சமாதானம் சொன்னோம். அம்மா சமாதானம் ஆகவில்லை என்பது நாங்கள் திரும்பி வரும்வரையில் தெரிந்தது. கோயில் என்றால் நம்முடைய ஊர் போலில்லை. ஓடு வேய்ந்தவையாக மழை தண் ணீர் மேலே தேங்காத வகையில் அமைக்கப்பட்டிருந்தது. எல்லா கோயிலும் அப்படித்தான்.
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, வாழைச்சால் நீர் வீழ்ச்சி பற்றியெல்லாம் எழுத எனக்கு தெரியவில்லை। தமிழ்செல்வனோ, மாதவராஜோ அல்லது எஸ்।வி।வியோ எழுதினால் தகும். நமக்கு எது தெரியதோ அதை எழுதுவோம். இரண்டாவது நாள் மாலை திருச்சூரிலுள்ள வடக்குநாதன் கோயில். (அண்ணன் பையன் கோகுல் சொன்னான், உதைக்கும் நாதன் என்று மழலையாய்). இங்கேயும் அனைத்தும் கெடுபிடியும். சட்டை, பேன்ட், லுங்கி, சுடிதார், பனியன் என்பனவற்றுக்குத் தடா. வேறு வழியில்லாமல் இம்முறை நாங்கள் அனைவரும் உள்ளே சென்றோம். இந்தக் கோயிலும் ஒரு பெரிய நிலப்பரப்பினை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. இங்கே நாங்கள் புத்திசாலித்தனமாய் ரூ.15/ கொடுத்து ஒரு டிக்கெட் வாங்கினோம். அதை ஒரு இடத்தில் கொடுத்தால் பிரசாதம் தருவார்களாம். நானே என் அரைகுறை மலையாளத்தில் கேட்டு ஒரு வழியாய் பிரசாதம் பெற்றேன். ஒரு வெண்ணெய் உண்ட கண்ணன் போல் ஒருவன் ஒரு இரண்டு இஞ்ச் உயரத்தில் இருந்து பிரசாதம் போட்டான். சரியாய் கேட்ச் பிடித்தேன். இதே கதை மற்றொரு கோயிலிலும் தொடர்ந்தது. மோகன் (என் அண்ணன்) அவன் தான் சொன்னான். "இடதுசாரிகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோதும் இங்குள்ள இந்தக் கலாச்சாரத்தில் என்னவொரு குறுக்கீட்டினை செய்துள்ளனர் என்பது புரியவில்லை. இங்கேதான் நம்மாள் பெரியார் நிற்கிறார். ஒரு ஒற்றை ஆளாக சனாதன போலித்தனங்களுக்கு எதிராக எப்படி நின்றார். எந்தக் கட்சியினர் பேசாவிட்டாலும் இப்போதும் இடதுசாரிகள் பெரியாரை துக்கி கொண்டாடவேண்டும்".
எனக்கும் அப்போதுதான் சில கேள்விகள் தோன்றியது :
கலாச்சாரத்தில் ஒரு குறுக்கீட்டினை செய்யாமல் சமூக முன்னேற்றம் என்பது எப்படி சாத்தியமாகும்? இடதுசாரிகள் கலாச்சார தளத்தில் கேரளத்தில் எப்படி குறுக்கீடு செய்துள்ளனர்? வைக்கம் கோயில் பிரவேசம் இன்னும் தமிழகத்தில் தொடர்கின்றபோது கேரளத்தில் இடதுசாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? குருவாயூரில் சுடிதார் அணிய அனுமதி வேண்டும் என்று ஒரு குரல் எழுப்பப்பட்டபோது இடதுசாரிகளின் வெகுஜன அமைப்புகள் என்ன செய்து கொண்டிருந்தன? அச்சுதானந்தன் தான் அப்போது முதல்வர்। சட்டை, பனியன் உரித்து அவர்களின் சாதியை கண்டறிவது இங்கே தமிழகத்தில் அநேகமாய் ஒழிக்கப்பட்டுவிட்டபோது இடதுசாரிகளின் கேரளத்தில் என்ன ஆயிற்று? தான் தொட்டு தந்தால் தீட்டு ஆகிவிடும் என்று பிரசாதத்தினை தூக்கி போடும் அராஜகத்திற்கு இடதுசாரிகளின் பதில் என்ன?
தமிழகத்தின் கோயில்கள் பெரியாரின் பாதை கண்டுதானே அனைவருக்கும் ஆனது? இடதுசாரிகளாகிய நாம் பெரியாரை இன்னும் தொடர்ந்து தூக்கி பிடிக்க வேண்டியது மறுக்கமுடியாத கடமையாகிறது. பெரியார் பற்றிய வாசிப்பு இன்னும் விரிவாக வேண்டும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சென்ற மாநாடு சரியாகவே பதிவு செய்தது, பெரியாரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என்று. அதற்கான வீரியமிக்க போராட்டங்கள் இனி வருங்காலத்தில் நிகழ வேண்டும். பெரியாரின் சிந்தனைகள் அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்படவேண்டும். அவரை முற்றாக வாசித்து ஆக வேண்டும். கேரளத்தின் நாராயண குருவின் பங்குதான் என்ன?
2. புரியப்படாத மற்றொரு கேள்வி. பெருமதிப்புகுரிய தோழர் ஈ.கே நாயனாரின் முன்முயற்சியால் கேரளத்தில் கல்வி அனைவருக்கும் சாத்தியமானது. பெண்களும் வெளியே வந்தனர். எனினும் ஒரு கேள்வி, கல்வியின் பங்கு கலாச்சார புரிதலில் என்னவாக இருக்கிறது? சமச்சீர் கல்வி, கற்றலில் இனிமை கல்வி என்று சொல்கிறோம். கல்வி என்பது என்ன என்பதும், கல்வியின் பயன் சமூகத்தில் என்னவாக இருக்க வேண்டும் என்பது, கற்றலின் வழிமுறைகள் மாற்றம் என்பது பயணிக்கப்படாத அல்லது மிக குறைவான தப்படிகள் எடுத்து வைத்த பாதையாகவே இருக்கிறது. இது குறித்த ஒரு உரையாடலும் இங்கே அவசியமாகிறது.
மௌனத்தின் பிடியில் இருந்து விடுபட்டு நெடுங்குரல் கொடுப்போம். விடியலை வரவேற்க தயாராகுவோம்.
திட்டத்தின்படியே முதல் நாள் குருவாயூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான 51 யானைகள் ஒன்றாக வைக்கப்பட்டிருக்கும் புன்னத்தூர் யானைகோட்டம் சென்றோம். அப்பப்பா, அது நிச்சயமாய் பிரம்மாண்டம். முதலாவது, விலங்குகள் இருக்கின்ற இடத்தில் ஒரு வீச்சம் இருக்குமே அங்கு இல்லை. குழந்தைகள் போல் ஒவ்வொரு யானையும் பாகனோடு குளிப்பது, தின்பது என்று அட, அட. காண வேண்டும் இலட்சம் கண்கள், சீதாதேவி தன் காலுக்கு நிகரோ பெண்கள் என்று கர்நாடக கீர்த்தனை ஒன்று உண்டு. இலட்சம் கண்கள் தேவைபடாவிட்டாலும், 51ஆவது நிச்சயம் வேண்டும். உள்ளே பிரவேசிக்கும்போதே ஒரு குட்டி யானை தலையாட்டி ஆட்டி எங்களை வரவேற்றது.
மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பி அம்மாவின் ஆசைக்கிணங்க கொடுங்கல்லூர் பகவதி கோயிலுக்கு சென்றோம். அபி தூங்கிவிட்ட படியால் நான் உள்ளே செல்லவில்லை. மற்ற அனைவரும் சென்று வந்தனர். சட்டை, பனியன், சுடிதார், லுங்கி, பேன்ட் இவற்றுக்கெல்லாம் அனுமதி இல்லை கோவிலுக்குள். அம்மா உள்ளே போய்விட்டு வந்து சொன்னார், "என்ன ஒன்றுமே புரியலை, எனக்கு மட்டும் பிரசாதம் தரவில்லை." சரி விடும்மா பார்த்துக்கலாம் என அனைவரும் சமாதானம் சொன்னோம். அம்மா சமாதானம் ஆகவில்லை என்பது நாங்கள் திரும்பி வரும்வரையில் தெரிந்தது. கோயில் என்றால் நம்முடைய ஊர் போலில்லை. ஓடு வேய்ந்தவையாக மழை தண் ணீர் மேலே தேங்காத வகையில் அமைக்கப்பட்டிருந்தது. எல்லா கோயிலும் அப்படித்தான்.
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, வாழைச்சால் நீர் வீழ்ச்சி பற்றியெல்லாம் எழுத எனக்கு தெரியவில்லை। தமிழ்செல்வனோ, மாதவராஜோ அல்லது எஸ்।வி।வியோ எழுதினால் தகும். நமக்கு எது தெரியதோ அதை எழுதுவோம். இரண்டாவது நாள் மாலை திருச்சூரிலுள்ள வடக்குநாதன் கோயில். (அண்ணன் பையன் கோகுல் சொன்னான், உதைக்கும் நாதன் என்று மழலையாய்). இங்கேயும் அனைத்தும் கெடுபிடியும். சட்டை, பேன்ட், லுங்கி, சுடிதார், பனியன் என்பனவற்றுக்குத் தடா. வேறு வழியில்லாமல் இம்முறை நாங்கள் அனைவரும் உள்ளே சென்றோம். இந்தக் கோயிலும் ஒரு பெரிய நிலப்பரப்பினை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. இங்கே நாங்கள் புத்திசாலித்தனமாய் ரூ.15/ கொடுத்து ஒரு டிக்கெட் வாங்கினோம். அதை ஒரு இடத்தில் கொடுத்தால் பிரசாதம் தருவார்களாம். நானே என் அரைகுறை மலையாளத்தில் கேட்டு ஒரு வழியாய் பிரசாதம் பெற்றேன். ஒரு வெண்ணெய் உண்ட கண்ணன் போல் ஒருவன் ஒரு இரண்டு இஞ்ச் உயரத்தில் இருந்து பிரசாதம் போட்டான். சரியாய் கேட்ச் பிடித்தேன். இதே கதை மற்றொரு கோயிலிலும் தொடர்ந்தது. மோகன் (என் அண்ணன்) அவன் தான் சொன்னான். "இடதுசாரிகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோதும் இங்குள்ள இந்தக் கலாச்சாரத்தில் என்னவொரு குறுக்கீட்டினை செய்துள்ளனர் என்பது புரியவில்லை. இங்கேதான் நம்மாள் பெரியார் நிற்கிறார். ஒரு ஒற்றை ஆளாக சனாதன போலித்தனங்களுக்கு எதிராக எப்படி நின்றார். எந்தக் கட்சியினர் பேசாவிட்டாலும் இப்போதும் இடதுசாரிகள் பெரியாரை துக்கி கொண்டாடவேண்டும்".
எனக்கும் அப்போதுதான் சில கேள்விகள் தோன்றியது :
கலாச்சாரத்தில் ஒரு குறுக்கீட்டினை செய்யாமல் சமூக முன்னேற்றம் என்பது எப்படி சாத்தியமாகும்? இடதுசாரிகள் கலாச்சார தளத்தில் கேரளத்தில் எப்படி குறுக்கீடு செய்துள்ளனர்? வைக்கம் கோயில் பிரவேசம் இன்னும் தமிழகத்தில் தொடர்கின்றபோது கேரளத்தில் இடதுசாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? குருவாயூரில் சுடிதார் அணிய அனுமதி வேண்டும் என்று ஒரு குரல் எழுப்பப்பட்டபோது இடதுசாரிகளின் வெகுஜன அமைப்புகள் என்ன செய்து கொண்டிருந்தன? அச்சுதானந்தன் தான் அப்போது முதல்வர்। சட்டை, பனியன் உரித்து அவர்களின் சாதியை கண்டறிவது இங்கே தமிழகத்தில் அநேகமாய் ஒழிக்கப்பட்டுவிட்டபோது இடதுசாரிகளின் கேரளத்தில் என்ன ஆயிற்று? தான் தொட்டு தந்தால் தீட்டு ஆகிவிடும் என்று பிரசாதத்தினை தூக்கி போடும் அராஜகத்திற்கு இடதுசாரிகளின் பதில் என்ன?
தமிழகத்தின் கோயில்கள் பெரியாரின் பாதை கண்டுதானே அனைவருக்கும் ஆனது? இடதுசாரிகளாகிய நாம் பெரியாரை இன்னும் தொடர்ந்து தூக்கி பிடிக்க வேண்டியது மறுக்கமுடியாத கடமையாகிறது. பெரியார் பற்றிய வாசிப்பு இன்னும் விரிவாக வேண்டும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சென்ற மாநாடு சரியாகவே பதிவு செய்தது, பெரியாரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என்று. அதற்கான வீரியமிக்க போராட்டங்கள் இனி வருங்காலத்தில் நிகழ வேண்டும். பெரியாரின் சிந்தனைகள் அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்படவேண்டும். அவரை முற்றாக வாசித்து ஆக வேண்டும். கேரளத்தின் நாராயண குருவின் பங்குதான் என்ன?
2. புரியப்படாத மற்றொரு கேள்வி. பெருமதிப்புகுரிய தோழர் ஈ.கே நாயனாரின் முன்முயற்சியால் கேரளத்தில் கல்வி அனைவருக்கும் சாத்தியமானது. பெண்களும் வெளியே வந்தனர். எனினும் ஒரு கேள்வி, கல்வியின் பங்கு கலாச்சார புரிதலில் என்னவாக இருக்கிறது? சமச்சீர் கல்வி, கற்றலில் இனிமை கல்வி என்று சொல்கிறோம். கல்வி என்பது என்ன என்பதும், கல்வியின் பயன் சமூகத்தில் என்னவாக இருக்க வேண்டும் என்பது, கற்றலின் வழிமுறைகள் மாற்றம் என்பது பயணிக்கப்படாத அல்லது மிக குறைவான தப்படிகள் எடுத்து வைத்த பாதையாகவே இருக்கிறது. இது குறித்த ஒரு உரையாடலும் இங்கே அவசியமாகிறது.
மௌனத்தின் பிடியில் இருந்து விடுபட்டு நெடுங்குரல் கொடுப்போம். விடியலை வரவேற்க தயாராகுவோம்.
Comments
அருமையான பதிவு. ஊர் சுற்றிப் பார்க்கப் போன இடத்தில் உஙள் உள்ளம் சமூகத்தையும் சுற்றிப் பார்க்கிறது. கேள்விகள் விவாதிக்கவும் தூண்டுகின்றன. வாழ்த்துக்கள்.