Skip to main content

வானவாசிகள் - என் பார்வையில்

 விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்த சிட்டுக்குருவியைப் போலே..

இறக்கை விரித்தே இறக்கை விரித்தே வானம் ஏறி….

விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் பறத்தல் என்பது குறியீடு. மனுச பய புள்ளையான நம்முள் எல்லாருக்கும் விமானத்தில் பறத்தலே பெரும் பரவச அனுபவம், உண்மையாகவே இறக்கை முளைத்து பறக்க முடிந்தால்… ஆம் தேவதைகளாகி இறக்கை விரித்து பறந்தோமானால்…அந்த நாள் என்று வரும் என ஏக்க பெருமூச்சு விடலாம்… இல்லை இறக்கை போன்ற ஒரு செயற்கை பொருள் வைத்து பறக்கும் காலமும் வரலாம். அப்பொற்காலம் வெகுவேகமாக வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், உங்களைப் போலவே நானும்.

 


 

பறவையை கண்டான்… விமானம் படைத்தான் என்ற அளவே என்னுடைய அறிவியலறிவு… ஆனால் பறத்தல் என்பது எப்படி சாத்தியமாகிறது.. அது ஏன் ஒரு பறவைக்கு இறக்கை நீளமாகவும்.. இருங்கள் இருங்கள்… முதலில் இறகு என்பது இறக்கை என்பது வேறு என்பதும் எனக்கு புரிந்தது இப்புத்தகத்தில் தான். அதாவது இறகு என்பது பலது சேர்ந்ததுதான் இறக்கையாம்.. என்னத்தே 12 வரைக்கும் படிச்சு.. என்னத்தே அதற்கு பிறகு பிஸிக்ஸ் இளங்கலை வேற படிச்சு… அடப்போங்கப்பா.. இது தெரியலயே எனக்கு என அசிங்கமா போச்சு.

பறவைகளில் எவை எவை பறக்கும்? பறக்காது இருக்கும் கோழிக்கும், அதன் பெரியம்மா நெருப்புக்கோழிக்கும் என்ன ஆச்சு? எல்லாப் பறவைகளுக்கும் இறக்கை ஒரே அளவா.. சிறியதும் பெறியதும் ஏன் ஆச்சு.. அதாவது கொஞ்சமா பறந்தா சிறிய இறக்கை போதுமாம், ரொம்ப தூரம் பறக்கிற மாதிரி இருந்தா பெரிசா வேணுமாம்… புறா, காக்கா, குருவி என்பவை நம் வீட்டில் பறந்துகொண்டு கீழே லேண்ட் ஆவதற்கும், ஒரு கழுகு லேண்ட் ஆவதற்கும் வித்தியாசம் இருக்காம், அதற்கு ஒரு அறிவியலும் இருக்காம்.

கழுகு லேண்ட் ஆகும் ஸ்பீடிற்கும், காக்காய் அண்ணன் லேண்ட் ஆகும் ஸ்பீடிற்கும் கூட வித்தியாசம் இருக்காம், கழுகு செம ஸ்பீடு.. 200 கிமீ வேகமாம். இது காக்கா இறகு, மயிலிறகு என புஸ்தகத்தில் வைக்கிறோமே, அது தானா விழுகாதாம்.. அவங்களா மனசு வைச்சு சரி இது தேவையில்ல, புதுசு வேணும் என நினைச்சாதான் விழுமாம். இத்தனூண்டு இறகுதான் என்னென்ன வகையில் அதற்கு பறப்பதற்கு, உணவிற்கு, தேவைப்படும் வெப்பத்திற்கு உதவுதாம்… பறவைகள் V வடிவத்தில் பறப்பதற்கும் என்ன காரணம் என்ன, ஏழு கடல் தாண்டி வேடங்தாங்கல் வந்தடையும் பறவை பறந்துகிட்டே தூங்குமாம், தண்ணீரை சேர்த்து வைச்சு குடிச்சுக்குமாம், ஒரு பறவை (ரீங்காரப் பறவை என நினைக்கிறேன்), பறந்துகிட்டே ஒரே இடத்தில் நின்னு அப்படியே பூவின் தேனை ஸ்ட்ரா இல்லாமலே, பூவும் கசங்காமல் குடிக்குமாம்…

அடப் போங்கப்பா… பறவைகள் பறக்கும் நுட்பம் குறித்து ஏராளமான தகவல்கள், எளிய புரிந்துகொள்ள கூடிய வகையான மொழியில்.. தமிழில் இவ்வளவு எளிமையா சுவாரசியமா ஒரு அறிவியல் புஸ்தகம் நான் படிச்சு நாளாச்சு. வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் என்னும் தமிழ்நாடு அறிவியல் இயக்க வெளியீடு ஒன்னு இருக்கு.. அது செம்ம சூப்பராக இருக்கும். அது போலவே இது இருக்கு. பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.. சொற்பிழை எழுத்துப்பிழை இல்லாம, ஒவ்வொரு பக்கத்திற்கும் அதன் வலது பக்க மேல் மூலையில் ஒவ்வொரு வகையான பறவையின் படம், என உண்மையிலே அமர்க்களமான வரவு.

ஆனா என்ன இப்படியான புத்தகங்களில் நான் காணும் ஒரே குறை இருக்கு. தேவையான இடங்களில் வண்ணங்களை பயன்படுத்துவது அவசியம் என நினைக்கிறேன். அதுவும் பறவைகள் பறத்தல் என்பதற்கெல்லாம் என்ன என்ன வண்ணத்தில் படங்கள் கிடைக்கின்றன, அதையும் பயன்படுத்தி இருக்கலாம். கேட்டா இதன் விலையே ரூ.120/-.. அதையும் போட்டா இன்னும் கூடும் என சொல்வாங்க (எங்காளுங்க தான்!) . அதற்கும் ஒரு பதில் இருக்கு என்கிட்டே. அதாவது ஆங்கிலத்தில் பேப்பர்ப்பேக் ஹார்ட்பவுண்ட் வடிவங்கள் என இரு வடிவங்கள் பயன்படுத்துகிற மாதிரி பாரதி புத்தகாலயமும் ஒன்றை பேப்பர்பேக் என்ற வடிவத்தில் வண்ணங்கள் இல்லாம குறைந்த விலையில் நிறைய பிரதிகளாகவும், ஹார்ட்பவுண்ட் வடிவமாக வண்ணங்களுடன் வழவழ தாளில் தேவைப்படும் விலையை வைத்து குறைந்த எண்ணிக்கையில் அச்சடித்து அதையும் வெளியிடலாம்..

சீக்கிரம் செய்யுங்க தோழர்களே..

வானவாசிகள் என்னும் முனைவர் பெ. சசிக்குமார் அவர்களின் பிரமாதமான இந்நூலிற்கு ஆசிரியருக்கும், புக்ஸ்பார் சிலரன் (பாரதி புத்தகாலயம்) நிறுவனத்திற்கும் வாழ்த்துகள்… இவரின் இதே நிறுவனத்தின் விண்வெளி மனிதர்கள் என்னும் மற்றொரு அறிவியல் புத்தகத்தையும் கையில் எடுத்துள்ளேன், இதே போன்ற சுவாரசியத்தை எளிய வகையில் அறிவியலை சொல்லும் மொழியை கொண்டிருக்கும் என்ற உறுதியில்…..

 

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற