Skip to main content

வானவாசிகள் - என் பார்வையில்

 விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்த சிட்டுக்குருவியைப் போலே..

இறக்கை விரித்தே இறக்கை விரித்தே வானம் ஏறி….

விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் பறத்தல் என்பது குறியீடு. மனுச பய புள்ளையான நம்முள் எல்லாருக்கும் விமானத்தில் பறத்தலே பெரும் பரவச அனுபவம், உண்மையாகவே இறக்கை முளைத்து பறக்க முடிந்தால்… ஆம் தேவதைகளாகி இறக்கை விரித்து பறந்தோமானால்…அந்த நாள் என்று வரும் என ஏக்க பெருமூச்சு விடலாம்… இல்லை இறக்கை போன்ற ஒரு செயற்கை பொருள் வைத்து பறக்கும் காலமும் வரலாம். அப்பொற்காலம் வெகுவேகமாக வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், உங்களைப் போலவே நானும்.

 


 

பறவையை கண்டான்… விமானம் படைத்தான் என்ற அளவே என்னுடைய அறிவியலறிவு… ஆனால் பறத்தல் என்பது எப்படி சாத்தியமாகிறது.. அது ஏன் ஒரு பறவைக்கு இறக்கை நீளமாகவும்.. இருங்கள் இருங்கள்… முதலில் இறகு என்பது இறக்கை என்பது வேறு என்பதும் எனக்கு புரிந்தது இப்புத்தகத்தில் தான். அதாவது இறகு என்பது பலது சேர்ந்ததுதான் இறக்கையாம்.. என்னத்தே 12 வரைக்கும் படிச்சு.. என்னத்தே அதற்கு பிறகு பிஸிக்ஸ் இளங்கலை வேற படிச்சு… அடப்போங்கப்பா.. இது தெரியலயே எனக்கு என அசிங்கமா போச்சு.

பறவைகளில் எவை எவை பறக்கும்? பறக்காது இருக்கும் கோழிக்கும், அதன் பெரியம்மா நெருப்புக்கோழிக்கும் என்ன ஆச்சு? எல்லாப் பறவைகளுக்கும் இறக்கை ஒரே அளவா.. சிறியதும் பெறியதும் ஏன் ஆச்சு.. அதாவது கொஞ்சமா பறந்தா சிறிய இறக்கை போதுமாம், ரொம்ப தூரம் பறக்கிற மாதிரி இருந்தா பெரிசா வேணுமாம்… புறா, காக்கா, குருவி என்பவை நம் வீட்டில் பறந்துகொண்டு கீழே லேண்ட் ஆவதற்கும், ஒரு கழுகு லேண்ட் ஆவதற்கும் வித்தியாசம் இருக்காம், அதற்கு ஒரு அறிவியலும் இருக்காம்.

கழுகு லேண்ட் ஆகும் ஸ்பீடிற்கும், காக்காய் அண்ணன் லேண்ட் ஆகும் ஸ்பீடிற்கும் கூட வித்தியாசம் இருக்காம், கழுகு செம ஸ்பீடு.. 200 கிமீ வேகமாம். இது காக்கா இறகு, மயிலிறகு என புஸ்தகத்தில் வைக்கிறோமே, அது தானா விழுகாதாம்.. அவங்களா மனசு வைச்சு சரி இது தேவையில்ல, புதுசு வேணும் என நினைச்சாதான் விழுமாம். இத்தனூண்டு இறகுதான் என்னென்ன வகையில் அதற்கு பறப்பதற்கு, உணவிற்கு, தேவைப்படும் வெப்பத்திற்கு உதவுதாம்… பறவைகள் V வடிவத்தில் பறப்பதற்கும் என்ன காரணம் என்ன, ஏழு கடல் தாண்டி வேடங்தாங்கல் வந்தடையும் பறவை பறந்துகிட்டே தூங்குமாம், தண்ணீரை சேர்த்து வைச்சு குடிச்சுக்குமாம், ஒரு பறவை (ரீங்காரப் பறவை என நினைக்கிறேன்), பறந்துகிட்டே ஒரே இடத்தில் நின்னு அப்படியே பூவின் தேனை ஸ்ட்ரா இல்லாமலே, பூவும் கசங்காமல் குடிக்குமாம்…

அடப் போங்கப்பா… பறவைகள் பறக்கும் நுட்பம் குறித்து ஏராளமான தகவல்கள், எளிய புரிந்துகொள்ள கூடிய வகையான மொழியில்.. தமிழில் இவ்வளவு எளிமையா சுவாரசியமா ஒரு அறிவியல் புஸ்தகம் நான் படிச்சு நாளாச்சு. வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் என்னும் தமிழ்நாடு அறிவியல் இயக்க வெளியீடு ஒன்னு இருக்கு.. அது செம்ம சூப்பராக இருக்கும். அது போலவே இது இருக்கு. பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.. சொற்பிழை எழுத்துப்பிழை இல்லாம, ஒவ்வொரு பக்கத்திற்கும் அதன் வலது பக்க மேல் மூலையில் ஒவ்வொரு வகையான பறவையின் படம், என உண்மையிலே அமர்க்களமான வரவு.

ஆனா என்ன இப்படியான புத்தகங்களில் நான் காணும் ஒரே குறை இருக்கு. தேவையான இடங்களில் வண்ணங்களை பயன்படுத்துவது அவசியம் என நினைக்கிறேன். அதுவும் பறவைகள் பறத்தல் என்பதற்கெல்லாம் என்ன என்ன வண்ணத்தில் படங்கள் கிடைக்கின்றன, அதையும் பயன்படுத்தி இருக்கலாம். கேட்டா இதன் விலையே ரூ.120/-.. அதையும் போட்டா இன்னும் கூடும் என சொல்வாங்க (எங்காளுங்க தான்!) . அதற்கும் ஒரு பதில் இருக்கு என்கிட்டே. அதாவது ஆங்கிலத்தில் பேப்பர்ப்பேக் ஹார்ட்பவுண்ட் வடிவங்கள் என இரு வடிவங்கள் பயன்படுத்துகிற மாதிரி பாரதி புத்தகாலயமும் ஒன்றை பேப்பர்பேக் என்ற வடிவத்தில் வண்ணங்கள் இல்லாம குறைந்த விலையில் நிறைய பிரதிகளாகவும், ஹார்ட்பவுண்ட் வடிவமாக வண்ணங்களுடன் வழவழ தாளில் தேவைப்படும் விலையை வைத்து குறைந்த எண்ணிக்கையில் அச்சடித்து அதையும் வெளியிடலாம்..

சீக்கிரம் செய்யுங்க தோழர்களே..

வானவாசிகள் என்னும் முனைவர் பெ. சசிக்குமார் அவர்களின் பிரமாதமான இந்நூலிற்கு ஆசிரியருக்கும், புக்ஸ்பார் சிலரன் (பாரதி புத்தகாலயம்) நிறுவனத்திற்கும் வாழ்த்துகள்… இவரின் இதே நிறுவனத்தின் விண்வெளி மனிதர்கள் என்னும் மற்றொரு அறிவியல் புத்தகத்தையும் கையில் எடுத்துள்ளேன், இதே போன்ற சுவாரசியத்தை எளிய வகையில் அறிவியலை சொல்லும் மொழியை கொண்டிருக்கும் என்ற உறுதியில்…..

 

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

பேரன்பின் பூக்கள் - நூல் அறிமுகம்

புக்ஸ் பார் சில்ரன் மற்றும் சித்திரச் செவ்வானம் இலக்கியம்(?) வெளியீடு. இந்த ஆண்டில் நான் வாசித்த இறுதி புத்தகம். 350 ரூபாய்க்கு 399 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம், அதுவும் சிறார் கதைகள் என்னும்போதே ஒரு பயம் மற்றும் தயக்கம் இருந்தது. என்ன பயம், ஏன் தயக்கம் என கேட்டது புத்தக அட்டையில் இருந்த யூமா வாசுகியின் பெயர். மனுசன் சூப்பருங்க. யூமா வாசுகி, நீதிமணி, விஷ்ணுபுரம் சரவணன் என இன்னும் சில பெயர்கள் சிறார் இலக்கியம் எடுக்கையில் எனக்கு எந்த தயக்கமும் கொடுக்காதவர்கள ாக இருக்கிறார்கள். அப்படியே புத்தகத்தை திறந்தா பூனை, நாய், எலி, கிளி, மாடு, குரங்கு என எல்லாமும் என்னவெல்லாம் கதைகள் சொல்லுது.. அப்படியே கட கடவென பக்கங்கள் வெகு வேகமாக நகர, அட இன்னும் என்னவெல்லாம் இருக்குன்னு மனசுக்குள்ள குறுகுறுப்பு. தொடர்ந்து கடந்தா அடுத்தாற்போல சிவப்பு மிளகாய் மூக்கன், இட்லி கண்ணன், தோசை நாக்கன் என பூதங்கள், அப்ப மரம், புலி, சிங்கம், முள்ளம்பன்றி என அட போங்க அமர்க்களம்.. அப்படியே இட்லி கண்ணன், தோசை நாக்கன் கதையை அபி கீர்த்தனா குட்டிகளிடம் நம்ம கற்பனையையும் மிக்ஸ் பண்ணி சொன்ன என்னா சிரிப்பு, அப்பா அடு...

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் - நூல் அறிமுகம்

 கொரானா ஊரடங்கு காலத்தில் புத்தகங்கள் வாய்ப்பு கிடைத்தும் பல்வேறு காரணங்களால் புத்தக வாசிப்பு என்பது ஒன்றும் அத்தனை ஜுரூராக நடக்கவில்லை. அவ்வப்போது படிக்க வேண்டும் படித்தே ஆக வேண்டும் என எனக்குத் தோன்றியது என சில மட்டுமே படித்தேன். அப்படி ஜனவரி 2020 புத்தக கண்காட்சியில் வாங்காமல் விட்டுவிட்ட ஒரு புத்தகம் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் அவர்களின் நினைவுகளும் நிகழ்வுகளும் புத்தகம். ரிவோல்ட் வெளியீடு. புலம் டிசைன். வெண்மணி படுகொலை அதையொட்டிய நிகழ்வுகள் என்பதாலே புத்தகம் வெகு விரைவாக தடதடத்து செல்கிறது. தொய்வே இல்லை. ஓரிரவு பொழுதில் படித்து முடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது இப்புத்தக வாசிப்பு. பாரதி புத்தகாலயத்தாரின் வெளீயீட்டில் வந்த வெண்மணி : வாய்மொழி வரலாறு, தென்பரை முதல் வெண்மணி வரை முதலான புத்தகங்களின் வரிசையில் ரிவோல்ட் வெளியீட்டின் இப்புத்தகமும் படிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வெண்மணி படுகொலை வரலாற்று கொடும்நிகழ்வில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் என்பதோடு மற்றொன்று கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் ஆகியோரின் பங்களிப்பும் என மும்முனைகள் இருக்கின்றன. இதில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய இயக்கங...

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச ப...