Skip to main content

அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி - அ. கரீம்

புத்தக கண்காட்சியில் பிப்ரவர் மாதம் வாங்கியது. அப்படியே தினமும் என்னைப் படி படி எனக் கேட்டுக் கொண்டே இருந்தது. அது சரி, இது போன்ற இன்னும் சில புத்தகங்களும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன, அதற்கு என்ன செய்ய இயலும்? எழுத்தாளருக்கு எழுத்து வர ஒரு mood தேவைப்படுவது போல வாசகருக்கும் வாசிக்க ஒரு mood தேவைப்படுகிறது. அப்படியான ஒரு மூடில் வாசிக்கத் துவங்கி ஒரே மூச்சில் முடித்த புத்தகம் தான் நண்பர் தோழர் அ. கரீம் அவர்களின் 'அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி'.
 
நான் ஒன்னும் பெரிய விமர்சகர் எல்லாம் இல்லை எழுத்தாளரின் வளர்ச்சியை அவருடைய முந்தைய எழுத்துக்கள் பற்றி எல்லாம் விமர்சிக்க. ஆனால், ஒன்னே ஒன்று தாழிடப்பட்ட கதவுகள் தந்த எதிர்ப்பார்ப்பை, சிதார் மரங்கள்... தாண்டி அகல்யாவுக்கும் ஒரே ரொட்டி அப்படியே தக்க வைத்துள்ளது. அதே வார்த்தைகளின் எளிமை, எளிய மனிதர்களின் வாழ்வு கூடியவரைக்கும் அச்சு அசலாய், தேவையற்ற வார்த்தைகள் திணிப்பு என இல்லாமல் சிறப்பாய் இருக்கு இத்தொகுப்பும் என சொல்லலாம். 
 
முதலிலேயே சொல்லிவிடுகிறேன் அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி, பஷீரின் கடைசி கிடாய், அன்பே ஆசியா... என இவை மூன்றோடு எம்ஜியாருக்கு வயசாயிடுச்சு எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. வறண்ட நிலத்தில் ஒரு பூ ஒரு “அட” போட வைத்தது. 
 
இந்திய குடியரசின் விடுதலைக்கு பின்னான இந்த 75 ஆண்டு காலத்தில் மக்களை மொத்தமாக நிராதரவாக விட்டுவிட்ட அரசு என்ற ஒன்று இதுவரையிலும் இருந்ததாக எனக்கு நினைவில்லை. ஒரு பெருந்நோய் தொற்று காலம் எந்த ஒரு அரசினையும் கொஞ்சமாகவாவது கருணையோடு இருந்திட செய்யும். ஆனால் எதுவும் இல்லாது போன ஒரு அரசினை அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி, கானல் நீர் உருவங்கள் உங்களுக்கு அடையாளம் காட்டும். கருணையில்லாத காலங்களிலும் கருணைக்கென ஏதோ ஒரு மனசு துடித்துக் கொண்டுதான் இருக்கிறது எனவே சொல்கிறது பல கதைகளும். நம்பிக்கை என்ற ஒன்றுதான் கடைசிவரை என ஒரு சொலவடை போல அநேக கதைகள் இருண்ட காலத்திலும் ஒரு ஒற்றை ஒளிக்கீற்றை அடையாளம் காண்பித்து நிற்கின்றன என்பதே இத்தொகுப்பின் பலம் என சொல்லலாம். 
 
ஒரு பக்கம் பெரும்பான்மை மதவாதம் சிறுபான்மை மதத்தை ஒடுக்கிவிட அத்தனை வன்முறைகளையும் சதிகளையும் அரங்கேற்றி இருந்திட சிறுபான்மை மதக் காவலர்களாக பழமைவாதிகள் மற்றும் அடிப்படைவாதிகள் தோன்றி வரவேற்பு பெறுவதும் அதனாலும் அச்சிறுபான்மை மதத்திற்கே பெரும் பகை நேருகிறது என்பதையும் அன்பே ஆசியாவில் பிரமாதமாக சொல்கிறார். சிறுபான்மையினரில் பழமைவாதம் அடிப்படைவாதம் செய்யும் ஒரு சிறிய தவறு எப்படி காலம் கடந்தும் அந்த சிறுபான்மையினரை குற்றப் பரம்பரை போல மாயத்தோற்றத்தை உருவாக்கி அப்பாவிகளை பழிவாங்குகிறது என சொல்லும் தஸ்தகீர்... சிறுகதை அருமை. இவை இரண்டும் ரொம்பவே ஸ்பெஷல் கதைகள்.
 
கிருமி நாசினிகள் இம்மண்ணின் இந்திய தேசத்தின் அசல் உருவத்தை தன்மையை அசத்தலாக நமக்கு நினைவுப்படுத்துகிறது. பஷீரின் கடைசி கிடாய் என்னைப் பொறுத்தவரை இத்தொகுப்பின் எனக்கு ஒரு freshness feeling தந்த கதை என சொல்வேன். பாஸ்கர் சக்தி என்னும் எளிய படைப்பாளியின் பல கதைகளிலும் இந்த எளிய மனிதர்களது innocence மற்றும் மனிதம் விலங்கினம் என பாகுபாடு இல்லாமல் சகல் உயிர்களையும் உறவாக காண்பதை நான் வாசித்து இருக்கேன். அது போன்ற ஒரு ஸ்பெஷல் கதை பஷீரின் கடைசி கிடாய்….
 
அந்த எம்ஜியாருக்கு வயசாயிடுச்சு ஒரு தனிப்பட்ட ரகம். தேசவிரோதியின் எஞ்சிய குறிப்புகள் மிக முக்கியமான ஒன்று. படித்துவிடுங்கள் மக்களே.. உங்களுக்கும் இக்கதை ரொம்பவே பிடிக்கும். 

 
நல்லதொரு தொகுப்பு. வாழ்த்துக்கள் தோழர் அ. கரீம்.

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

பேரன்பின் பூக்கள் - நூல் அறிமுகம்

புக்ஸ் பார் சில்ரன் மற்றும் சித்திரச் செவ்வானம் இலக்கியம்(?) வெளியீடு. இந்த ஆண்டில் நான் வாசித்த இறுதி புத்தகம். 350 ரூபாய்க்கு 399 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம், அதுவும் சிறார் கதைகள் என்னும்போதே ஒரு பயம் மற்றும் தயக்கம் இருந்தது. என்ன பயம், ஏன் தயக்கம் என கேட்டது புத்தக அட்டையில் இருந்த யூமா வாசுகியின் பெயர். மனுசன் சூப்பருங்க. யூமா வாசுகி, நீதிமணி, விஷ்ணுபுரம் சரவணன் என இன்னும் சில பெயர்கள் சிறார் இலக்கியம் எடுக்கையில் எனக்கு எந்த தயக்கமும் கொடுக்காதவர்கள ாக இருக்கிறார்கள். அப்படியே புத்தகத்தை திறந்தா பூனை, நாய், எலி, கிளி, மாடு, குரங்கு என எல்லாமும் என்னவெல்லாம் கதைகள் சொல்லுது.. அப்படியே கட கடவென பக்கங்கள் வெகு வேகமாக நகர, அட இன்னும் என்னவெல்லாம் இருக்குன்னு மனசுக்குள்ள குறுகுறுப்பு. தொடர்ந்து கடந்தா அடுத்தாற்போல சிவப்பு மிளகாய் மூக்கன், இட்லி கண்ணன், தோசை நாக்கன் என பூதங்கள், அப்ப மரம், புலி, சிங்கம், முள்ளம்பன்றி என அட போங்க அமர்க்களம்.. அப்படியே இட்லி கண்ணன், தோசை நாக்கன் கதையை அபி கீர்த்தனா குட்டிகளிடம் நம்ம கற்பனையையும் மிக்ஸ் பண்ணி சொன்ன என்னா சிரிப்பு, அப்பா அடு...

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் - நூல் அறிமுகம்

 கொரானா ஊரடங்கு காலத்தில் புத்தகங்கள் வாய்ப்பு கிடைத்தும் பல்வேறு காரணங்களால் புத்தக வாசிப்பு என்பது ஒன்றும் அத்தனை ஜுரூராக நடக்கவில்லை. அவ்வப்போது படிக்க வேண்டும் படித்தே ஆக வேண்டும் என எனக்குத் தோன்றியது என சில மட்டுமே படித்தேன். அப்படி ஜனவரி 2020 புத்தக கண்காட்சியில் வாங்காமல் விட்டுவிட்ட ஒரு புத்தகம் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் அவர்களின் நினைவுகளும் நிகழ்வுகளும் புத்தகம். ரிவோல்ட் வெளியீடு. புலம் டிசைன். வெண்மணி படுகொலை அதையொட்டிய நிகழ்வுகள் என்பதாலே புத்தகம் வெகு விரைவாக தடதடத்து செல்கிறது. தொய்வே இல்லை. ஓரிரவு பொழுதில் படித்து முடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது இப்புத்தக வாசிப்பு. பாரதி புத்தகாலயத்தாரின் வெளீயீட்டில் வந்த வெண்மணி : வாய்மொழி வரலாறு, தென்பரை முதல் வெண்மணி வரை முதலான புத்தகங்களின் வரிசையில் ரிவோல்ட் வெளியீட்டின் இப்புத்தகமும் படிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வெண்மணி படுகொலை வரலாற்று கொடும்நிகழ்வில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் என்பதோடு மற்றொன்று கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் ஆகியோரின் பங்களிப்பும் என மும்முனைகள் இருக்கின்றன. இதில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய இயக்கங...

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச ப...