Skip to main content

DESPITE THE STATE - நூல் அறிமுகம்


 


Despite the state. கடந்த 15-20 நாட்களாக ஒரே புத்தகத்துடன் சுற்றி வருகிறேன். உலகமயத்திற்கு பின்னான இந்தியாவில் எப்படி மாநிலங்களில் "state”அதாவது அரசு என்னும் identityஎன்ன role play செய்கிறது என்ற ஆய்வும் அதைத் தொடர்ந்து எழுப்பும் கேள்விகளும் கருத்துக்களுமே இந்நூல். இயக்கங்களில் இருப்பவர்கள் இப்புத்தகத்தை படித்தால் நல்லது. ஏனெனில் நாம் வழக்கமாக உபயோகிக்கும் rhetoricவசனங்களின் பின்னே இருக்கும் வெறுமையும், நாம் எதிர்பாராத திசையில் ஒளிந்திருக்கும் உண்மைகளும், கண் முன்னே நடந்தாலும் ஒரு மூடு திரை நம் கண் முன் ஒரு மகத்தான உண்மைநிலையை மறைப்பதை கண்டுணர முடியும். மிசோரம், ஒரிசா, பீகார், தமிழ்நாடு, பஞ்சாப், குஜராத் என இந்த மாநிலங்களுக்கு சென்று அங்கே நடப்பவைகளை கண்டுணர்ந்து பிரச்சனைகளின் தன்மையை உணர stakeholdersஎனப்படுவோரை பேட்டி கண்டும் தான் வாசித்தவற்றில் இருந்தும் சில உண்மைகளை கண்டடைவது என அசல் ஆய்வினை நடத்தியுள்ளார் இப்பத்திரிகையாளர். இது தப்பாக புரிந்து கொள்ள வாய்ப்பிருந்தும் சொல்கிறேன், மீடியாக்களில் விவாதத்தை சரிவர நடத்துபவர்கள் மட்டுமே பெரிய பத்திரிகையாளர்கள் என ஒரு கருத்து பெரிதாக எழுந்துள்ள சூழலில், ராஜசேகர் என்னும் பத்திரிகையாளர் ஒரு பத்திரிகையாளர் எப்படி இருக்க வேண்டும் என சொல்கிறார், அர்த்தமாய் இருக்கிறார்.


மற்ற மாநிலங்களை விட்டு தமிழகம் குறித்து அவர் என்ன சொல்கிறார்? ஒவ்வொரு மாநிலத்தையும் குறித்து அவர் அறிமுகப்படுத்த துவங்கும் முறை ஒன்றாக இருக்க, தமிழகத்தில் அவர் இளவரசன் திவ்யா மூலம் நுழைகிறார் என்றால் தமிழகத்தின் பெரிய பிரச்சனை என்ன என்பது புரிகிறது. அதே சமயம் வெற்று கோஷங்கள் பின்னே சிக்காமல் உண்மை நிலைகளை கண்டறிகிறார். ஆம், வெண்மணியின் காலத்தில் அவ்வளவாக இல்லாத ஆணவப் படுகொலைகளும், பொருளை விட ஆளையே கொன்றழித்த நிலைமைகளும் ஏன் இப்போது மாறின என யோசிக்கிறார். அதாவது, நத்தக் கொல்லையில் ஆட்கள் கொல்லப்படாமல் குறியாக சான்றிதழ்களும், மின்னனு சாதனங்களும் அடித்து நொறுக்கப்பட்டத்தை சொல்கிறார். ஆம், கல்வி மற்றும் நகர்ப்புறங்களை நோக்கிய அடித்தட்டு மக்களின் நகர்வு என எல்லாம் தலித் மக்களின் பொருளாதார நிலைகளை மாற்றியமைத்திட கொஞ்சம் முடிந்திட்ட சூழலில் அவ்வாறான பொருளாதார முன்னேற்ற நிலைகளை அடையாத இடைத்தட்டு MBCமக்கள் தங்கள் வாழ்வாதாரம் தேங்கிய அசல் காரணங்களையோ அல்லது தங்கள் வாழ்வாதாரம் மேம்பட தாங்கள் செய்ய வேண்டிய, கேட்க வேண்டிய விஷயங்களை கேட்காமல் எப்படி கலாச்சாரம் என்னும் மோசடியை கையில் எடுக்கின்றனர் என சொல்கிறார். இதற்கு பாமகவின் ராம்தாஸ் தான் விஷ விதையை முதன் முதலில் தூவியவர் என்பதையும், தாங்கள் சமூக நீதி பார்வையில் பயணிக்கிறோம், சாதி பேதமில்லை என்று சொல்லிய ஆட்சியில் இருந்திட்ட திராவிட இயக்கங்கள் எப்படி சாதி மேலாதிக்கத்தை போஷித்தன என்பதையும் கவனப்படுத்துகிறார். மேம்பாடு என்பதை அப்படி ஒன்றும் பெரிதாக தலித் மக்கள் கண்டடையாத போதும், மேம்பட்டுவிட்டதாக ஒரு பூடகத்தை கட்டி எழுப்பி சாதிய வன்முறைகள் நிகழ்த்தப்படுவதாக குறிப்பிடும் வேளையில், MBC என்ற பிரிவின் கீழ் 108 சாதி மக்கள் 20% சதவீத ஒதுக்கீடு பெறுகிற சமயத்தில், SCஎன்ற பிரிவின் கீழ் 16% சதமான இடஒதுக்கீட்டின் பலன்களை 2 பிரிவு சாதி மக்களே பெறுவதை ஒருவர் அங்கலாய்ப்பதையும் சொல்கிறார். ஒரு பக்கம் தலித் மக்கள் மேம்பட்டு விட்டதாக ஒரு கற்பித்தத்தில் வன்முறைகள் விசிறி விடப்பட, மறுபக்கம் ரேஷன் கடையில் தலித் ஒருவருக்கு வெறும் 20 கிலோ அரிசி மட்டுமே கிடைக்க, மற்ற சாதியினர் 20 கி அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், எண்ணெய் பெறுவதை சுட்டிக்காட்டி எப்படி அரசு நிறுவனங்களாக இருந்த போதிலும் சாதிய ஒடுக்குதல் நிகழ்கின்றன என்பதை படம் பிடித்து காட்டுகிறார்.


வெற்றி நடைபோடும் தமிழகமே என ஆளும் அரசு பீற்றிக் கொண்டு இருப்பது ஒருபுறம் இருக்க, என்னவாக இருந்தாலும் தமிழகம் முன்னேறியே இருக்கிறது, திராவிட அரசியல் சமூக நீதி அரசியல் எனவும் பேசப்படும் பொழுதில், சில அதிர்ச்சிகர உண்மைகளை இப்புத்தகம் காட்டுகிறது. குறிப்பாக தமிழகத்தின் பெருமைகளாக பேசப்படும் கல்வி வாய்ப்புகள், சுகாதாரம் ஆகியவைகளின் உண்மை நிலையையும் இப்புத்தகம் பேசுகிறது. சமூக நீதி இலக்குகளின் பயணத்தில் உண்மையிலேயே அக்கறை தொடர்ந்திருக்குமானால் மிகப்பெரிய மாற்றங்களை தமிழகம் கண்டிருக்கும் என நியாயமான அங்கலாய்ப்பில் தொடர்கிறார். ஒரு பக்கம் குழந்தைகள் இறப்பு விகிதம், தாய்மார்கள் இறப்பு விகிதம் என்பவை இந்தியாவே பாராட்டுகிற அளவுக்கு குறைந்து வரும் வேளையில், உலகமய சூழல் என்பது தமிழகத்தையும் ஆட்டுவித்து இங்கும் கான்டிராக்ட் முறையும் ஆள் குறைப்பும் வர எளிய மக்களின் சுகாதாரம் பாதிப்பு அடைந்துள்ளதையும் அதை மோசடியான கணக்குகள் மூலம் மறைப்பதையும் சொல்கிறார். எல்லாவற்றையும் விட என்னதான் அரசு மருத்துவர்கள், ஆஷா நர்சுகள் என்பவர் மூலமாக சுகாதாரத்தை முன்னேற்ற முனைந்தாலும் அடிப்படை விஷயங்களான வேலை வாய்ப்பு, வறுமை ஒழிப்பு என்பவை இல்லாமல் அடையும் முன்னேற்ற அடைவுகள் ஒரு கட்டத்தில் stagnate ஆவது மட்டுமல்ல, குறையவும் தொடங்கும் என சுட்டுகிறார்.


இலவச லேப்டாப், tab என இவை கொடுப்பது populist measures என இவற்றை இலவசமாக தருவதாக பீற்றிக் கொள்ளும் அரசுகள் பொதுக்கல்வியை உதாசீனப்படுத்தி அடிப்படையே தகர்க்கிறது என சொல்கிறார். ஆண்டுக்காண்டு பாஸ் விகிதம் கூடுகிறது என்பதின் பின்னே உள்ள பிம்பத்தை ஒரே ஒரு வரியில் இவ்வாறு சொல்கிறார், “75% சதமான மாணவர்களை பாஸ் செய்து வெளியேற்றினால் தான் கல்லூரிகளுக்கு 200000 மாணவர்கள் கிடைப்பர், தமிழகத்தில் அநேகம் கல்லூரிகள் தனியாரிடம் இருக்கின்றன". இங்கே எம்ஜிஆரின் வாரிசு நான் தான் நான் தான் என பெருமை கொள்ள நடக்கும் போட்டி நடக்க, காமராஜர் தொடங்கி வைத்த சமூக நீதி பார்வையிலான மக்கள் திட்டங்கள் என்பதை நாசமாக்கிய பணியை துவக்கி வைத்தவரும், எதிர்ப்புகளை இரும்பு கரம் கொண்டு அடக்க தொடங்கியவர் புண்ணியவானும் அவரே என்பதையும் இந்நூல் சொல்கிறது.


2002-2003 காலத்தில் விவசாய வருமானம் என்பது 24,864 ரூபாய்களாக இருந்தது 2012-2013 காலத்தில் ரூ.83760 என உயர்ந்திட்ட போதும் இதே கால இடைவெளியில் விவசாயிகளின் லாபம் உயரவில்லை என சொல்கிறார். அதாவது முதலீடு 3000 என இருந்த 70களில் வருமானம் 4000 என இருந்தது, இப்போது 40000 ரூபாய் என இருப்பது வருமானமாக 43000 தருகிறது என்பதிலிருந்து புரிகிறது.

விவசாயம் அரசின் ஆதரவினை இழந்துவிட்ட பின்னணியில் ஏற்கெனவே தனியாரிடம் சிக்கி தவித்து விவசாயம் செய்து வாடும் விவசாயிகளுக்கு பேரிடியாக, ஆற்றுப் படுகையில் மணல் அள்ளுதல் என்பதும் பெருத்த சேதத்தை விளைவிக்கிறது என்பதையும் ஆழமாக சொல்கிறார். ஆண்டு பட்ஜெட்டில் வெறும் 250 கோடி ரூபாய்கள் மணல் விற்பதின் மூலமாக வருவாய் என காட்டும் அரசு மறைமுகமாக 20000 கோடி ரூபாய்கள் இழைப்பை சந்திக்கிறது என்பதையும் சொல்கிறார். அவ்வாறாக வரும் பணத்தில் தான் தேர்தலை சந்திக்கின்றன். முதலில் அரசியல்வாதிகளுக்கு பணம், பின் அதிகாரிகளுக்கு, அதற்குப் பிறகு அப்பகுதி மக்களுக்கு அவ்வப்போது பணம் என மணல் அள்ளும் மாபியாக்கள் எப்படி மாறியிருக்கின்றன என இந்நூல் சொகிறது.

சரி, இவ்வளவு பிரச்சனைகளுக்கு பின்னும் மக்கள் ஏன் போராடுவதில்லை, அமைதி தழுவும் மாநிலமாக இருப்பது ஏன் என்ற கேள்விக்கு தமுஎகசவின் மாநில தலைவர் ஆதவன் தீட்சண்யா அவர்கள் இந்நூலில் சொல்வது, “தன்னைப் நேரிடையாக பாதிக்காத விஷயங்களுக்காக தான் ஏன் செலவழிக்க வேண்டும், அக்காசு இருந்தால் தனக்கு எப்படி பயன்படும் என தன்னை சுருக்கிப் பார்க்க இந்த பொருளாதார சமூக சூழல் இருக்கிறது. ஒரு காலத்தில் 1000 பேரிடம் 100ரூ வாங்கி கலைவிழா நடத்துவோம், அது 10 பேரிடம் 1000 வாங்கி என சுருங்கி இப்போது ஒரு ஸ்பான்ஸரை எதிர்பார்க்கும் நிலையில் உள்ளோம். ஒன்னுக்கும் பயன்படாத மண் என சொல்லிய ஓசூர் நகரை தொழிலாளிகள் உழைப்பாளிகள் மாற்றிக் காண்பித்தனர், இப்போதோ அரசு அவர்களை உதறி தள்ளுகிறது, உதாசீனப்படுத்துகிறது, அவமதிக்கிறது".

140 எழுத்துருக்கள் இருக்கிற ஒரு டிவிட்டர் மெசேஜை கூட குறைத்து செய்தியை சொல்ல வேண்டும் என்பதான காலத்தில் ஒரு புத்தகத்தில் இவ்வளவிற்கு மேல் சொல்லுதல் சரியல்ல என அவசர அவசரமாக முடிக்கிறேன்.

இப்புத்தகத்தில் afterwordஎழுதியுள்ள தோழர் வ. கீதா, திராவிட அரசியலின் குறியீடு வெற்று கோஷங்களும், நடைமுறை இடைவெளிகளும் தான் என்றும் ஒரு ஆழமான திட்ட வகுத்தலும் அதனைத் தொடர்ந்த செயலாக்கமும் என்பதற்கு பதிலாக இங்கே welfarismஎன்பதே இருக்கிறது என்பதோடு குடிகள் தங்கள் உரிமைகளை கோருபவராக கருதாமல் அரசின் கடைக்கண் பார்வையை நாடி நிற்பவர்களாக மாற்றிவிட்டது என சொல்கிறார். அதாவது, CITIZENS CAME TO BE VIEWED AS RECEPIENTS OF GOOD WILL RATHER THAN BEARER OF RIGHTS, AS PERMANENTLY NEEDY YET DESERVING ONLY THE BARE MINIMUM என சொல்கிறார்.

இறுதியாக ஒரு mainstream பத்திரிகை மீடியாக்கள் எதிலும் mrajasekharஎழுதியுள்ள கட்டுரைகள் பதிவாகவில்லை. அது சமூக வலைத்தளத்தில் உள்ள scroll.in இல் பதிவான கட்டுரைகளே என்பதில் சமூக நிலையும் நன்றாக பிரதிபலிக்கிறது. மக்களே, குஜராத் குறித்து அவரது எழுத்துக்களும் படிக்கப்பட வேண்டும். சோசலிச முகாமின் தகர்விற்கு பின்னே உலகமயம் மக்களை எப்படி சூறையாடி இருக்கிறது என்பதையும், சமூக ஜனநாயக குறியீடுகளை நசுக்கியுள்ளது என்பதையும், இறுதியாக மக்களை மதம் சாதி என்பதாக பிரித்தாளுவதிலேயே அரசு இந்த உலகமய சூழலில் தங்கள் பிடியை தக்க வைப்பதை இப்புத்தகம் ஆழமாக சொல்கிறது.

அவசியம் படிக்க வேண்டும், விவாதிக்க வேண்டும். அதோடு உருவாக்கி வைத்துள்ள கற்பிதங்களை உடைத்து உண்மைகளை கண்டறிந்து மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்பதான இலக்கை வைத்திருப்போர் அந்த குறைந்த சதத்தினர் மட்டுமாவது அவசியம் படித்திட வேண்டும்.



Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற