Skip to main content

The East was Read - நூல் அறிமுகம்

மிஷா, சோவியத்லைப், ராதுகா பதிப்பகம், சிவப்பு நிற கெட்டி அட்டையில் மாமேதை லெனின் முகம் கொண்ட புத்தகங்கள், அந்த பச்சை நிறம் கொண்ட ஒரு தனி ரக வழவழப்பான அதே சமயம் சற்றே கெட்டியான அட்டையோடு அமைந்த "குடும்பம், தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" என இவையெல்லாம் அதிகபட்சம் ஒரு 25 ரூபாய்க்குள் கிடைத்திட்ட பொழுதில் நானும் இருந்தேன் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை. கோவையின் உக்கடம் பகுதியின் பஸ் ஸ்டாண்டை ஒட்டிய பழைய கடைகளில் 2003ல் கூட நான் வெறும் 10 ரூபாய்க்கு மார்க்ஸிம் கார்க்கியின் தாய் புத்தகம் வாங்கியுள்ளேன். சோவியத் என்ற அந்த சொல்லே ஒரு பாதுகாப்பு உணர்வு மற்றும் ஏதோ நம்மோடது போல ஒரு நினைப்பு. இனி இந்த புத்தகத்திற்கு வருவோம்.

Leftwordபதிப்பகத்தின் மார்ச் 2019 வெளியீடு EAST WAS READ. ஒரு புத்தகத்தின் அட்டை உள்ளிட்டு மிக கவனத்துடன் வடிவமைப்பதில் தொடர்ந்து இந்த பதிப்பகம் சிறக்கிறது. தவறவே விட கூடாததாகவும், இந்தப் புத்தகத்தை வாங்கியே ஆக வேண்டும் என்ற உணர்வினை தோழர் விஜய் பிரசாத் அவர்களின் முன்னுரை நமக்கு கடத்துகிறது. 1896-97 காலத்தில் ஏற்பட்ட கடும் பஞ்ச பொழுதில் ஒரு பக்கம் 4 மில்லியன் இந்தியர்கள் மரணித்ததும், அதே சமயம் விக்டோரியா மகராணி அவர்களின் 60 வருட ஆட்சியை சிறப்பாக கிழக்கு இந்திய கம்பெனி கொண்டாடியதும் இங்கே இந்தியாவில் அதை எதிர்த்து தாதாபாய் நௌரோஜி அவர்கள் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றதும், ராணியாரை queen of black death and empress of famine என அவர் வர்ணித்ததும் விஜய் பிரசாத அவர்களுக்கு 2001ல் வெளிவந்த M.G. Davis அவர்களின் புத்தகம் ஒன்றில் காண கிடைக்கிறது. இவ்வாறாக புத்தகத்தின் சமூக பாத்திரம் குறித்து எடுத்துக்காட்டுடன் புரட்சிக்கு பின்னான காலக்கட்டத்தில் சோவியத் நாடெங்கும் எழுப்பப்பட்ட எழுத்தறிவித்தல் பணிகள் குறித்தும் சிறப்பாக விளக்குகிறார்.

இப்புத்தகத்தின் ஹைலைட் என நான் நம்புவது, தீபா பஸ்தி மற்றும் ரேவதி லால் எழுதியுள்ள கட்டுரைகள். சற்று உணர்வு பூர்வமானது. அதே சமயம் ஆப்பிரிக்க எழுத்தாளர் கூகி வா தியாங்கோ ரஷ்யாவின் "செகாவ் வீட்டில்" தான் இரத்த பூவிதழ்கள் எழுதியுள்ளதையும், கவிஞர் பயஸ் அகமது பயஸ் அவர்கள் லோட்டஸ் என்ற tricontinental புத்தகம் நடத்தியதும், பிராக்ரஸ் பப்ளிஷர்ஸ் பின்னாளில் எவ்வாறு ராதுகா ஆனது என்பதாகவும், பல புதிய செய்திகள் நினைவுகளாக விரவி இருக்கின்றன. சுதான்வா தேஷ்பாண்டேவின் மேடை நாடகம் குறித்த பதிவு சிறப்பு. ஆம், கியூபாவின் சினிமாவும், அங்கே நடைபெற்ற முத்தரப்பு (ஆசியா, ஆப்பிரிகா, அமெரிக்கா) கூட்டிணைவு மாநாடு நடந்த விதமும் சிறப்பு.

ஆமாம், மறக்காமல் சொல்ல வேண்டியது, 1991ல் ராதுகா பதிப்பகம் நின்ற போது அதிலிருந்து சுமார் 2000 தலைப்புகளில் புத்தகங்கள் பல மொழிகளில் சுமார் 30 மில்லியன் பிரதிகள் கண்டிருந்ததாம். அதோடு தமிழ் நெஞ்சங்களுக்கு சொல்ல வேண்டியது, நமது நா. தர்மராஜன் அவர்கள் சுமார் 60 புத்தகங்களை 7 வருடங்களில் மொழிபெயர்த்திருக்கிறாராம், ராதுகா பதிப்பகத்திற்காக. இன்னும் நிறைய நிறைய உள்ளே உள்ளன.

சரி, யாருக்கெல்லாம் இந்தப் புத்தகம் பிடிக்கும். குறுகிய காலமே நீடித்தாலும் இன்னும் சோவியத் என்னும் மாய சொல்லுக்கு பின்னே கிறங்கி நிற்கும் பலருக்கும், அந்தக் காலத்தில் ஒரு சின்ன வண்டியில் குறைந்த விலையில் பளபளப்பு காகிதத்தில் பல வண்ணத்தில் மிஷா, சோவியத் லைப் இந்த புத்தகமெல்லாம் படித்து மகிழ்ந்த மனங்களுக்கும். இன்னும் எங்கேயாவது அந்த ஒரிஜினல் தாய் கிடைக்குமா எனவும், கிடைக்கிற சிவப்பு நிற கனத்த அட்டை கொண்ட புத்தகங்களை நெஞ்சோடு ஒட்டி வைத்து ஒரு நிமிடமேனும் நெகிழ்ந்து நிற்கும் நெஞ்சங்களுக்கு, எத்தனையோ பின்னடைவுகளை சந்தித்தாலும் சோசலிசமே மனித குல விடுதலைக்கு தீர்வு என எண்ணும் மக்களுக்கு ஒரு nostalgic பயணம் செல்ல இந்தப் புத்தகம் பரிந்துரைக்கிறேன்., வாசித்து மகிழுங்கள்.


Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற