Skip to main content

சஞ்சீவி மாமா - சிறார் நாவல் குறித்து

சஞ்சீவி மாமா (இந்தியாவுக்கு நேரு மாமாஇந்த தெருவுக்கு யாரு மாமா? ) – இப்படியான ஒரு தலைப்பு புத்தகத்திற்கு. பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் பார் சில்ரன் வெளியீடு. கொ.மா.கோ இளங்கோ என்றவுடன் தயக்கமின்றி உடனே அந்த புத்தகத்தை எடுத்தேன். அன்று இரவே வாசிக்கத் துவங்கினேன். சில புத்தகங்கள் மட்டுமே எடுத்தவுடன் வாசித்து முடித்தே மூடிவிட வேண்டும் என தோன்றும். அப்படியான ஒரு புத்தகம் இது.
 

தொடரும் சாதி ஆணவக் கொலைகள், சாதிய படுகொலைகள் பின்னணியில் இந்த புத்தகம் ஆகச் சிறந்த வரவு. பள்ளிகளிலும் மாணவர்கள் (புதுச்சேரியில்) கையில் அவர்கள் சாதி படிநிலையை சொல்லும் கயிறினை கையில் கட்டி வரும் அவலம் இப்போதெல்லாம் தொடர் நிகழ்வாகிறது..  இந்நாவலின் காலம் அவ்வளவாக கக்கூஸ்கள் இல்லாத காலம். தோட்டி என்பவர்களே மலம் அள்ளும் வாளிகளை தூக்கிக் கொண்டு திரிந்த காலம். அப்படியான தோட்டியான சஞ்சீவி என்பவருக்கும் அக்கிராமத்தின் சிறிய ஹீரோ பேச்சிராசு என்பவனுக்கும் இடையேயான உறவே இந்நாவல்

தோட்டி என்றவுடன் தோட்டியின் மகன் என்ற தகழி என்னும் பெருமனிதனின் அந்நாவலே நினைவுக்கு வரும். அந்நாவல் படித்து இரண்டு மூன்று நாட்கள் பெரும் தவிப்பு பற்றி திரிந்திருக்கிறேன். அதற்கடுத்து தோட்டிகள் குறித்த நான் வாசிக்கும் அடுத்த நாவல்.இது. சிறுவர் நாவல் என்பது கூடுதல் ஈர்ப்பு. தோட்டிகள் என்றால் யார், அவர்கள் சமூக வாழ்வியல் நிலை என்ன என்கிற வரலாற்றினை படம் பிடித்திருக்கிறார் நாவலாசிரியர்.

இந்நாவலில் பொதுவெளியை தூய்மை செய்யும் மிக முக்கியமான வேலை செய்யும் தோட்டி சமூக அந்தஸ்திற்கான படிக்கட்டில் தொடுவதற்கு கூட அனுமதியின்றி நிற்கும் அவலத்தை சுட்டிக் காட்டுகிறது. தோட்டிகள் மட்டுமல்ல அவர்தம் பரம்பரையும் ஒருபொதுநன்மைக்காய்அவமானம் ஏற்றுக் கொள்ள நேரிடும் நிலை மனசினை பிசைகிறது. பேச்சிராசு சாதிய படிக்கட்டில் கீழ் நிலையில் இருப்பினும் அவனைவிட கீழ் நிலையில் இருப்பாரோடு தீண்டாமை பாராட்டுவது இந்நாவலில் தூலமாய் தெரிகிறது. நமக்கு கீழே ஒருவர் என்ற நித்தியமான நிலைக்கு மனிதன் எப்போதும் ஆசைப்படுகிறான். இங்கே பேச்சிராசு சஞ்சீவி என்கிற தோட்டியோடு கொள்ளும் அன்பு, பாசம், நட்பு அவனுக்கு பல தொல்லைகளை தண்டனைகளை தருகிறது.   பள்ளியிலும் அது பிரதிபலிக்கிறது. இருப்பினும் அவனது நட்பு சஞ்சீவி மாமாவோடு தொடர்கிறது.

இறுதியாய் அவனது வாழிடத்தில் பஞ்சாலை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கிடையேயான மாறுவேடப் போட்டி.யில் பல ஆளுமைகளின் தோற்றத்தில் உடன் படிக்கும் சிறுவர்கள் வர, பேச்சிராசு தான் மிகவும் நேசிக்கும் சஞ்சீவி மாமா என்றழைக்கும் தோட்டி வேடம் போடுகிறான். கையில் மளம் அள்ளும் வாளி போன்ற ஒன்றோடு, ஆனால் உண்மையாகவே மலம் அள்ளப் பயன்படும் பிரத்தியேக கரண்டியோடு. ஆம், அந்த பிரத்தியேக கரண்டி அவனை முழுதுமாய் நம்பி அவனது தந்தை சாதியை உதறி சஞ்சீவி தோட்டியோடு கேட்டு வாங்கிய அவர் பயன்படுத்திய அசல் கரண்டி. அந்த கரண்டியோடு சஞ்சீவி வேட்த்தில் பேச்சிராசு நடித்து முதல் பரிசு வாங்குகிறான். பரிசு பெற்ற கோப்பையோடு நில்லாமல் அந்த கோப்பையில்சஞ்சீவி மாமாஎன்ற பெயரும் பொரித்து பேருவகை கொள்கிறான் பேச்சிராசு. நாவல் முடிவுறுகிறது.

முன்னுரை வழங்கிய எழுத்தாளர் . தமிழ்செல்வன் அவர்கள், “நாவலை படிக்கும் சிறுவர்கள் இச்சாதியமைப்பின் மீது வெறுப்பு கொள்வார்கள் என நான் நம்புகிறேன்என்கிறார். அதேதான் எனக்கும் தோன்றியது. பாரதி புத்தகாலயத்தாரின் பெருமை கொள் படைப்பு இது. இதோடு முடியவில்லை இந்த நாவல் குறித்த என் பகிர்தல். இந்நாவலின் இறுதி பக்கத்தில் ஒரு புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. அந்த புகைப்படம் ஒரு சிறுவன் தோட்டி வேடமிட்டு பேசுவதாய் அமைந்துள்ளது. ஆம் அந்த சிறுவன் வேறு யாருமல்ல இந்நாவலின் ஆசிரியர் கொ.மா.கோ. இளங்கோ சிறுவர் கதையாசிரியராக என்னுள் இடம் பிடித்த இம்மனிதர் இந்த நாவலுக்கு பிறகு. சாதி துறப்பாளராக மிக பெரிய மனிதராக என்னுள் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். இன்னும் சஞ்சீவி மாமாக்கள் காலம் முடியாத சோகமும் நம் தேசத்தில் தொடர்கிறது.
  

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற