20 வருடங்கள் கழிந்த பின்னும் அந்த வாசிப்பு இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து ஈரோடு நோக்கிய பேருந்து பயணத்தில் முழுக்க நின்றுகொண்டே வாசித்த அந்த புத்தகமும் அந்த வாசிப்பு அனுபவமும் பசுமையாக இருக்கிறது. அப்போது தான் நான் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்திருந்தேன். என் தலைவன் தோழர் பேராசிரியர் நா. மணி அவர்கள் தான் இந்தப் புத்தகத்தை வாசித்து பாருங்க என கொடுத்தார்.
அந்தப் புத்தகம் தான் அறிவியல் வெளியீட்டில் வந்திருந்த “வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம்”. பேரா. எஸ்.சிவதாஸ் என்ற மலையாள எழுத்தாளரின் எழுத்து தமிழில் அழகிய மொழிபெயர்ப்பாக வந்திருந்தது. முதன்முதலில் அவர்கள் வெளியிட்ட அந்த வடிவம் (landscape) மிக சிறப்பானது. தமிழில் வழவழ தாளில் அப்படி ஒரு லேஅவுட்டில் நான் இதுவரையிலும் கூட எந்த ஒரு புத்தகத்தையும்
வாசித்ததே
இல்லை. புத்தக வடிவமைப்பை விடவும் அந்த எழுத்துநடை
வெகு
சுவாரசியம்.
கதைகளின்
வழியே
அறிவியல்
சொல்லல்
என
சொல்லலாமா?
தெரியவில்லை.
ஆனால், இருவரின் உரையாடல் வழியே அறிவியலை இயற்கை சுவாரசியங்களை உண்மைகளை மிக எளிமையாக வாசகருக்கு இதமாக சொல்வது என உறுதியாக சொல்ல முடியும்.
அன்றிலிருந்து பேரா.எஸ்.சிவதாஸ் என்ற பெயர் எங்கு தென்பட்டாலும் கொஞ்சம் கூட தயக்கம் காட்டாமல் உடனே வாங்குவதும் அவரின் புத்தகங்களை பலரும் படிக்க பரிந்துரைப்பதும் என தொடர்கிறேன். அந்த வகையில் புக்ஸ் பார் சில்ரன் வெளியீட்டில் மாத்தன் மண்புழுவின் வழக்கு என்ற புத்தகமும் வெகு சிறப்பான ஒன்று. வானம் வெளியீட்டிலும் ஒரு
புத்தகமும்
தோழர்
உதயசங்கர்
மொழிபெயர்ப்பில்
வந்துள்ளது.
அதுவும்
சிறப்பான
ஒன்றே.
அந்த வரிசையில் நான் வாசித்த அடுத்த புத்தகம் கலிலியோவின் வாழ்க்கை வரலாறு. இம்முறையும் பேராசிரியர் எஸ்.சிவதாஸ் அவர்கள் கையிலெடுத்து இருப்பது உரையாடலான நாடக வடிவமே. உரையாடல் என்பதில் வாசகனுடனான ஒரு
தோழமை
இருக்கிறது
என்பதை
உண்மையாக
நம்புகிறார்
என்றே
தோன்றுகிறது.
கலிலியோ கண்டுபிடித்தது என்ன என்பது பலருக்கும்
தெரிந்த ஒன்றே. ஆனால் மதநம்பிக்கை கொண்ட ஒருவராக இருந்துகொண்டு மதம் அதுகாறும் சொல்லிவந்த
உண்மை என்ற ஒன்றை அறிவியலால் பொய் என கண்ட கலிலியோ அறிவியலின் பக்கம் அதாவது உண்மையின்
பக்கம் சொல்ல என்ன பாடுபட்டார், என்ன ஆனது அம்மகா உண்மை என்பதை சுவையாக நாடக வடிவில்
காட்டுகிறது இப்புத்தகம்.
அதுவரை உலகமே நம்பியிருந்த ஒன்றை இல்லை என மறுத்து
சொல்வதென்றால் எத்துனை தைரியம் வேண்டும்? அசட்டு தைரியம் அல்ல அது, ஆழ்ந்து ஆய்வு செய்து
கண்டுகொண்ட உண்மை. முற்போக்காளர்கள் இத்தகைய புத்தகங்களை தமிழகம் எங்கும் எடுத்து செல்ல,
சொல்ல வேண்டும். பள்ளிகள் தோறும் இப்புத்தகம் வேண்டும். குழந்தைகளை வாசித்தும், வாசித்து
நாடகமாக நடத்தவும் பழக்க வேண்டும். சீ.. சீ.. அறிவியல் என்ற காய்ச்சல் இல்லாமல் தைரியமாக
எளிமையாக கொண்டு செல்லக் கூடிய புத்தகம் இது என்பதை முற்போக்காளர்கள் அவசியம் படித்து
உணர்ந்து மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.
என் நம்பிக்கை என உண்மை எதுவோ அதைப் பற்றிய கவலை
ஏதும் இல்லாமல் என தான் நம்பியதே உண்மை என்று அதனையே பலரும் ஏற்று ஆக வேண்டும் எனவும்
மீறினால் வெறுப்புதான் என்பதான உலகமாக இக்காலம் இருப்பதால் அவசியம் இது போன்ற புத்தகங்களை
முற்போக்காளர்கள் கொண்டு செல்ல வேண்டும்.
Comments