Skip to main content

அதிகாரம் அறிதல் - மீட்சி (ஒல்கா)

இதிகாசப் புராணங்கள் நம்மை எப்போதுமே வசீகரிப்பவை, அநேகமாக எக்காலத்தும். சிறு வயதில் அதன் மாயங்களில் மகிழ்ந்தும், பின் அதன் வீரத்தில் வியந்தும், பின் அதன் வளத்தில் கிறங்குவதுமாக இதிகாச புராணங்கள் இருக்கின்றன. நம் நாட்டின் இதிகாசங்களான மகாபாரதம், ராமாயணம் என இவை இரண்டுமே அநேகரை எப்போதோ ஒரு வயதில் வசீகரித்திருக்க கூடியவையே என்பதில் ஐயமில்லை.

இப்புராணங்கள் மூலம், தோன்றிய கால, உள்ளடகத்தின் நம்பகத்தன்மை ஆகியவை எப்போதுமே விவாதத்திற்கு உரியவை. ராமனும், சீதையும், கிருஷ்ணனும், அனுமானும், பரதனும், வாலியும், வீமனும் இன்றும் நம்மோடு கலந்துள்ள பெயர்களே. நாடு முழுவதும் ஏதோ ஒரு பெயரில் ராமனாக, கிருஷ்ணனாக, அர்ச்சுன்னாக, சீதையாக, பாஞ்சாலியாக பலரை காணலாம்.


எனக்கென்னவோ ராமாயணமே ரொம்ப இஷ்டம். கம்பனும் ஒரு காரணமோ. ஆனால், நிச்சயமாய் சொல்லலாம் என் தமிழ் ஆர்வத்திற்கு கம்பன் கழகமே காரணம். சிறுவயதில் இராமனின் வீரத்தில், அனுமனின் சூரத்தனத்தில் என இராமாயணம் பிடித்திருந்தது. ஒரு சமயத்தில் வாலி மீது இழைக்கப்பட்ட துரோகமும், கும்பகர்ணனின் தியாகமும், சீதையின் துன்பமுமே ஈர்த்திருக்கிறது.

யோசனை செய்கையில் சீதையும், பாஞ்சாலியும் இந்த இரு புராணங்களிலுமே மிகவும் வருத்தம் அடைந்தவர்கள். பாவம், இருவருமே வஞ்சிக்கப்பட்டார்கள். அந்த ராவணனை, துச்சாதன துரியோதனை என்ன வெல்லாம் செய்யலாம் என்ற கோபங்கள் எழுந்த ஒரு காலம் உண்டு.

ஆனால், வாசிக்க துவங்குகையில் எனக்கு கிடைத்த புத்தகமொன்று இந்த இதிகாச புராணங்கள் குறித்த பார்வையினை கூர்மையாக்கியது. அந்தப் புத்தகம் எம்.டி.வாசுதேவன் நாயரின், காலச்சுவடு வெளியீடான இரண்டாம் இடம். வீமனை கதை நாயகனாக்கி அந்த நாவல் செய்த ரசவாதங்கள்தான் என்ன! அன்றிலிருந்து இதிகாச புராணங்களை மீள்பதிவு, பகுப்பாய்வு என எதை செய்தேனும் ஒரு நூல் வந்தால் அதன் மீது ஒரு ஈர்ப்பு தொடர்கிறது.

காண்டேகரின் யயாதி, .சுப்பாராவின் இரண்டாவது ஞானம் என அவ்வரிசை தொடர்கிறது. சமீபத்தில் நான் படித்து வியந்த ஒரு புத்தகம் மீட்சி. ஆந்திர எழுத்தாளர் ஓல்காவின் படைப்புகளை கௌரி கிருபானந்தன் மிக அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார்.

இராமாயண கதாபாத்திரங்களே கதை மாந்தர்கள். அதுவும் பெண் கதாபாத்திரங்களே முக்கியதஸ்ர்கள். சீதை, அகலிகை, சூர்ப்பனகை, ஊர்மிளா ஆகியோரே கதாபாத்திரங்கள்.

காதலி, கணவன், தாய் என்ன எத்தகைய பதவியை வகித்தாலும் ஆண்கள் தங்கள் அதிகாரம் கொண்டே ஒரு பெண்ணை எப்போதும் பெண்ணாகவே நிலைகுலைய செய்வதை பார்க்க முடிகிறது. தாயாக இருந்தாலும் லவ குசர்கள் சீதாபிராட்டியை பெண்ணாகவே பார்ப்பதும் அவள் ஒரு பெண் என்று நிலை கீழே தள்ளுவதும் வெறுக்கத்தக்க இயல்பாக காண முடிகிறது. இக்கதைகளை படிக்கும் ஆண்கள் நிலை குலைவது நிச்சயம். நிலை மாற வேண்டியது அவசியம். மீள்வாசிப்பு என்னும் பதத்தின் அவசியம் இதிகாச புராணங்களைப் பொறுத்தவரையில் ஒரு எளியவரின் குரலாக, ஒடுக்கப்பட்டவரின் குரலாக ஓங்கி ஒலிப்பதை காணலாம். மீட்சி என்கிற இந்த கதை தொகுப்பும் அவ்வாறே.

அடங்கமறு, அதிகாரத்தை கைப்பற்று என்பது வலியவர்களுக்கு மிகவும் பிரச்சனையான சொற்றொடராக இருக்கலாம். ஆனால் ஒடுக்கப்பட்ட இனத்திற்கு, மனிதர்களுக்கு இவை வலிமை தருபவையே. காதலி, மனைவி, தாய் என்ன ஒரு பெரிய பதவியினை சமூகம் சூட்டிடினும் பெண் தான் எப்போதும் பெண்ணாகவே, தனக்கே உண்டான ஒரு சுயத்தை உடையவளாக இருக்கையில் கிடைக்க கூடிய மன நிம்மதியை, ஒரு பெருமையை, பெருமித்த்தை கொண்டாடும் கதை தொகுப்பு இது.


அவசியம் பலரும் படிக்க வேண்டிய ஒன்று.


மீட்சி – ஒல்கா(தெலுங்கு மூலம்) – தமிழில் : கௌரி கிருபானந்தன், விலை ரூ. 70/- -பாரதி புத்தகாலயம் 

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற