வாசிக்கும் ஒவ்வொரு தினமும் வாழ்கின்ற தினம் எஸ் வி வேணுகோபாலன் அறிவின் காட்டாறு ஓடுகிறது சுழித்துக் கொண்டு.. அருள் ஒளியின் தகதகப்பில் மின்னிக்கொண்டிருக்கிறது அன்பி ன் ஓடை வாழ்வியலின் சாரம் குளமாக நிற்கிறது ஒரு ஞானியின் புன்னகையோடு - அடிமனத்தின் ஈரத்தைப் புதுப்பி க்கப் பெருகுகின்றது புத்தக நதி புவியெங்கும்... ஊன்றப்பட்ட எழுத்துவிதைகளை பார்வை பிய்த்தெடுத்தாலும் நகலெடுத்துக் கொடுத்துவிட்டு நகராதிருக்கும் எழுத்துக்கள் புத்தகத்தின் மேற்பரப்பில்.. உள்ளிருந்தொரு குரல் வாசித்துக் கொண்டிருக்க தவத்தின் மெருகை முகத்திற்கு ஏற்றும் மவுன வாசிப்பு.. மெல்லிய வருடுதலில் நூலின் இதம் பருகி வேட்கை ஆறும் காலங்கள்... புத்தக தினம் வாசிப்போர் யாவருக்கும் 'இன்று புதிதாய்ப்' பிறந்த தினம் வாசிக்கும் ஒவ்வொரு தினமும் மனிதர்கள் வாழ்கின்ற தினம்.