Skip to main content

Posts

Showing posts from November, 2009

சமச்சீர் கல்வி அல்ல சமச்சீர் பாடத்திட்டமே

அன்பு நண்பர்களே, வணக்கம். தமிழகம் முழுவதும் இப்போது சமச்சீர்க்கல்வி என்பது பரவலாகவும், விரிவாகவும் பேசப்படுகிறது. இருந்தாலும் சில சாதாரண கேள்விகளும் அதற்குரிய விடைகளும் காணப்படாமலேயே இருக்கிறது. ஒரு சிறு முயற்சியாக என்னுடைய சில சாதாரண கேள்விகளுக்கு தமிழ் நாடு அறிவியல் இயக்க ஈரோடு மாவட்ட செயலாளரும், பொருளாதார வல்லுனருமாகிய தோழர் ந.மணி அவர்கள் விடை சொல்லியிருக்கிறார். அவை : 1. தமிழக அரசால் மிக ஆர்பாட்டத்துடன் கொண்டு வந்திருக்கும் இந்த "சமச்சீர்கல்வி" உண்மையிலெயே சமச்சீர்கல்விதானா?" சமச்சீரான கல்வி (சமமான தரத்தில்) என்னும்போது, உயர்தரமான அவரவர்க்கு ஏற்ற அல்லது தேவையான கல்வியைக் குறிக்கப்பெறும். சமமான தரம் உருவாக்குவதும் செயற்படுத்துவதும் பாடத்திட்டம் மட்டுமல்லாது பள்ளி வசதிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, அவர்தம் திறமை, பாட நூல்கள், தேர்வுமுறைகள், பள்ளி நிர்வாகம், ஆகிய பள்ளிக் கல்வியின் அங்கங்கள் அவற்றின் தொடர்பான யாவற்றையும் உள்ளடக்கிய ஒரு பெரும் திட்டம் என்பதில் ஐயமில்லை. கலைத்திட்டம், நன்கு பயிற்சி ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் மாணவர் விகிதம் இவற்றுள் ஏ

என் "இனிய" தமிழ் மக்களுக்கு..........

நவம்பர் 14: உலக டயாபடீஸ் தினம் என் "இனிய" தமிழ் மக்களுக்கு.......... எஸ் வி வேணுகோபாலன் நவம்பர் 14, குழந்தைகள் தினம் மட்டுமல்ல, உலக 'டயாபடீஸ் தினமும் கூட. டயாபடீஸ் என்ற சொல்லுக்கு சர்க்கரை நோய் என்று எழுதுவதற்குக் கைவர மறுக்கிறது. ஏனென்றால், சர்க்கரை நோய் என்பது முழுதும் சர்க்கரை தொடர்பானதுமல்ல, அந்தப் பிரச்சனை நோயும் அல்ல. நீரிழிவு பிரச்சனை என்று சொல்வது பரவாயில்லை போல் தோன்றுகிறது. பெயர் பொருத்தம் ஒருபுறம் இருக்கட்டும். விஷயத்திற்கு வருவோம். டயாபடீஸ் பிரச்சனை உள்ளவர்கள் பற்றிய பேச்சு ஊடகங்களில் எப்போதும் இருப்பது தான். இந்தப் பொருள் மீது ஒரு லட்சம் நகைச்சுவை துணுக்குகளாவது எழுதப்பட்டிருக்கக் கூடும். ஆனால், உலக தினமாக அது அனுசரிக்கப்படும் வேளையில், இதன் மீதான கவன ஈர்ப்பு அதிகமாக எழுகிறது. அப்படி பேசப்படுவதில் நல்ல அம்சங்களும் உண்டு. மிரட்டல் வேலைகளும் உண்டு. இப்படியான ஒரு உலக டயாபடீஸ் தினத்தன்று, தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் வந்தது. காட்சியின் துவக்கத்தில், ஒரு தேக்கரண்டியிலிருந்து சர்க்கரை கொட்டப்படுகிறது. அது கொட்டக் கொட்ட மலையாகக் கீழே நிறைகிறது.